உப்பாய் இரு, தப்பாய் இராதே
உன் ஆண்டவரை
நீ
துளியளவும் வெளியின்றி
தூயநேசத்தில் துதி.
உன்மேல் உனக்கான
உள் அன்பை
அயலானுக்கும் அளி.
நீ
உலகின் உப்பு.
சாரமற்ற உப்பு சாலைக்குச் சொந்தம்.
சமையலுக்கு அது
சாத்தியப்படாது.
சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.
உப்பாய் இரு,
சாலைக்கு அல்ல
சாப்பாட்டிற்கு.
No comments:
Post a Comment