Friday, August 3, 2018

இதோ உன் தாய்


இயேசுவின் சிலுவை அடியில்
தாயும் சீடரும்
கண்ணீர்க் கடலில்
உயிர் கிழியும் வேதனை உடுத்தி
நின்றிருந்தனர்.

தாய்ப்பாசம் மாதாவை
ஆழமாய் ஊடுருவியது,
செல்ல மகன் சிலுவையில்
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் சிந்த,
கீழே
அன்னை கண்ணீர் சிந்த
காண்கின்றாள்.

விளக்க முடியா வேதனை !
ஆனாலும் இயேசு
விளக்குகிறார்.

தாயை நோக்கி
சீடரைக் காட்டி
இதோ உன் மகன் என்றார்,
சீடரை நோக்கி
இதோ உன் தாய் என்றார்.

அன்னை
மனுக்குலத்தின் தாயானாள்
சீடர்
அன்னையைத் தத்தெடுக்கும்
பிள்ளையானார்.

No comments:

Post a Comment