Friday, August 3, 2018

வேலிகளற்ற கேலிகள்


சிலுவையின் தலையில்
‘யூதர்களின் அரசன்”
எனும் கேலி வாக்கியம்
ஒட்டப்பட்டிருந்தது.

சமாதானப் பறவையை
சிலுவையில் அறைந்தபின்
அதன் இறக்கைகளை
பிய்ப்பதுபோல,
இயேசுவின் ஆடைகளை
சீட்டுப் போட்டு பகிர்ந்து கொண்டனர்.

ஆலயத்தை இடித்துக் கட்டுவோனே
உன்னையே
நீ காப்பாற்றிக் கொள்.

கடவுளின் மகனுக்கு
கீழே இறங்கி வர
கால்கள் இல்லையா ?

ஏளனப் பேச்சுகள்
இயேசுவை காயப்படுத்தவில்லை.
உணராத உள்ளங்களுக்காய்
அவர்
இதயம் கதறியது
மன்னிப்பு வழங்க வேண்டி.

சிலுவையின் கீழ்
இயேசுவின் ஆதரவாளர்கள்
நிராயுதபாணிகளாய்
நின்றார்கள்
கண்ணீர் கவசங்களுடன்.

No comments:

Post a Comment