இயேசு சொன்னார்.
நீங்கள்
அடிமைகளாய் இருக்கிறீர்கள்
விலங்குடைக்காவிடில்
நீங்கள்
விலங்குகளே.
யூதர்கள் கொதித்தனர்.
நாங்கள் அடிமைகளா ?
ஆபிரகாம் முதல்
நாங்கள்
ஆணையிடும் வம்சம்
அடிமையின் வாரிசல்ல
என்றார்கள்.
இயேசு சிரித்தார்.
பாவம் செய்யும் எவனும்
பாவத்துக்கு அடிமை !
விட்டொழியுங்கள்
இல்லையேல்
கெட்டழிவீர்கள் என்றார்.
No comments:
Post a Comment