அறிவற்ற செல்வன்.
ஒருவன்
பரமனை நெருங்கி,
பாகம் பிரிப்பதில் நடுவராக்கப்
பார்த்தான்.
இயேசு சொன்னார்,
நான்,
சொத்துப் பிரச்சனைகளின்
நீதிபதி அல்ல.
பணக்காரன் ஒருவன் இருந்தான்.
அவன்,
இரவு பகல் எல்லாம்
செல்வம் சேமிக்க செலவழித்தான்.
களஞ்சியத்தின்
அகலத்தை அதிகரித்து
தானியம் நிறைய சேமிப்பேன்.
பல்லாண்டு
உண்டு குடித்து
உல்லாசத்தில் உட்கார்வேன்
என்றான்.
பணம் ஈட்டுவதிலேயே
மனம் நாட்டியவன் அவன்.
அந்த அறிவிலியின்
உயிரை
அன்றிரவே இறைவன் எடுத்தால்
சேமித்ததை
எவன் வந்து சொந்தம் என்பானோ?
நெல் களஞ்சியங்களல்ல
நல் களஞ்சியங்களே தேவை.
களஞ்சியங்களில்
நற்செயல்களைச் சேமியுங்கள்.
சுற்றிக் கட்டி சேமிப்பதை விட
விற்று விற்றுப்
பகிர்ந்தளியுங்கள்.
இற்றுப் போகாத பைகள்
பெற்றுக் கொள்ளுங்கள்
அதில்
நற்செயல் நாணயத்தை
நாள்தோறும் சேமியுங்கள்.
கடவுளுக்கான
செயல்களை களைந்து,
பூமியின் பொருட்களை
கட்டிக் கொள்பவன்,
புயலில் பிழுதெறியப்படும்
தானியக் குவியலாய்
சட்டென்று கலைவான்
சிந்தையில் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment