நேர்மையான தலைவன்
ஒருவனிடம்
திராட்சைத் தோட்டம்
ஒன்று இருந்தது.
அழகிய அத் தோட்டத்தில்
ஆழக் குழி தோண்டி
கோபுரம் ஒன்றை கட்டி
குத்தகைக்குக்
கொடுத்துவிட்டு
வெளியூர் சென்றான் தலைவன்.
குத்தகைக்காரர்கள்
நம்பிக்கைக்குக்
குந்தகம் விளைவிக்க மாட்டார்கள்
என்பது
தலைவனின் நம்பிக்கை.
பழக் காலம் வந்த போது
பலன் வாங்க
ஊழியரை அனுப்பினான்
உடையவன்.
குத்தகைக் காரர்கள்
சுயநலவாதிகள்.
கனிகளைக் கொய்வதை
விட்டு விட்டு
மரத்தையே கொள்ளையடிக்க
வழி தேடினர்.
தலைவன் அனுப்பிய
ஊழியர்களில்
ஒருவனைன்
குத்தகைக் காரர்களால்
குற்றுயிராக்கப் பட்டான்.
இன்னொருவன்
கற்களால் நொறுக்கப்பட்டான்.
இன்னொருவன்
கொல்லப்பட்டு
வேலிகளுக்கப்பால் வீசப்பட்டான்.
கதை சொன்ன இயேசு
இடைவேளை விட்டார்.
ஒரு கேள்வியோடு.
குத்தகைக்காரர்களைத்
தலைவன்
என்ன செய்வான் ?
நம்பிக்கைத் துரோகிகள்
கண்டிக்கப் படவேண்டியவர்கள்
கருணையின்றி
தண்டிக்கப் படவேண்டியவர்கள்.
பதில் வந்தது.
இயேசு சொன்னார்,
உண்மை தான்.
தலைவன்
குடியானவரை கொடுமையாய்
தண்டித்து,
தரமான தரப்பினருக்கு
திராட்சைத் தோட்டத்தைத் தருவான்.
நீங்கள்,
திராட்சைத் தோட்டத்தின்
குத்தகைக் காரர்கள்,
பூமி
மனித தலைமுறைக்கு உரியதல்ல
தலைவனுக்கு உரியது.
தலைவனுக்குரிய
பலனைக் கொடுக்காமல்
அவன்
ஊழியர்களை நிராகரிப்பவன்
அழிக்கப்படுவான்.
உங்கள் விவசாய காலத்து
வியர்வை
அறுவடை காலத்தில்
அளக்கப்படும்.
வாசனையை நுகரச் சொன்னால்
பூக்களைப்
பிழிந்து விடும் கூட்டம்
திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தது.
இயேசு தொடர்ந்தார்.
கட்டுவோன்
விலக்கிய கல்லே
வீட்டுக்கு
மூலைக்கல்லாயிற்று.
இரு விழிக்கு வியப்பே
இது இறையின் செயலே.
No comments:
Post a Comment