பறவைகளுக்குப் பட்டினி இல்லை.
உணவுப் போராட்டத்துக்காய்
உடைவாளை உருவாதீர்.
உனக்கானது உனக்களிக்கப்படும்.
கவலைகளை கவிழ்த்துவிட்டு
கடமைகளை நிமிர்த்து.
சிறகுலர்த்திப்
பறக்கும் சிட்டுகள்,
அவை எந்த மருத நிலத்திலும்
நெல்மணி விதைப்பதில்லை,
எந்த அரிவாள் முனைகளையும்
அறுவடைக்காய் செய்வதில்லை,
அவற்றிற்கான உணவு
தவறாமல் வருகிறதே.
பூமியின் மலர்களைப் பாருங்கள்
எந்த
மாடமாளிகையின்
பஞ்சு மெத்தையும்,
எந்த சக்கரவர்த்தியின்
அரியாசன ஆடையும்,
அதன் மென்மை கொண்டதில்லையே.
பூக்களுக்கும் புற்களுக்கும்
புத்தாடை உடுத்தும் பரமன்
மனிதர்கள் மேல்
மகத்துவம் செய்ய மாட்டாரா ?
No comments:
Post a Comment