ஒன்றில் இரு, ஒன்றித்திரு
இரு எஜமானர்க்கு
ஒருவன் ஊழியம் செய்யலாகாது.
ஒரு கத்தி
இரு உறைக்கு ஏற்புடையதல்ல.
ஒப்பீட்டுத் தராசுகளால்
ஒருவனோடு உறவாடி,
இன்னொருவன் வெறுப்பை
சத்தமில்லாமல் அது சம்பாதித்துவிடும்.
கடவுளுக்குரிய செயல்களும்
மனிதருக்குரிய செயல்களும்
உன் முன் இருக்கும்
இரண்டு எஜமானர்கள்.
துலங்கிய மனசோடு தேர்ந்தெடு
ஒன்றை மட்டும்.
No comments:
Post a Comment