சீடர்களோடு இயேசு
ஒலிவ மலைக்கு சென்றார்.
இன்றிரவே,
நீங்கள்
என்னைக் குறித்து இடறல் படுவீர்கள்.
மேய்ப்பனை வெட்டியபின்
மந்தைகள் சிதறடிக்கப்படும்
என்றார்.
மரத்தை முறித்துவிட்டால்
பறவைகள்
பறந்துவிடும் என்பதை
இயேசு அறியாதவரா ?
பேதுரு வருந்தினார்.
யார் உம்மை மறுதலித்தாலும்
நான் மாட்டேன் மெசியாவே என்றார்.
இயேசு சிரித்தார்,
இன்று இரவு
சேவலின் சத்தம் கேட்கும் முன்
மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்
என்றார்.
பேதுருவோ,
இல்லை இயேசுவே…
சாவதென்றாலும் அது
உம்மோடுதான் என்று முன்மொழிந்தார்.
சீடர் அனைவரும்
அதை வழிமொழிந்தனர்.
No comments:
Post a Comment