விழிப்பாய் இருங்கள்.
உங்கள் செயல்களில் இனிமேல்
செத்த வாசம் வீசாமல்
சுத்த வாசம் வீசட்டும்.
இறுதி நாள்
அறிவிப்புகளோடு வருவதில்லை,
நினையாத நேரத்தில்
உங்கள் முன் வந்து நிற்கும்.
திருடனின் வருகை
வீட்டுத்தலைவனுக்குத் தெரிவதில்லை,
தெரிந்தால்
திருட்டு நடக்க விடுவதில்லை.
மனுமகன் வருகையும்,
முன்னறிவிப்பின்றி
பின்வரும்.
வயலில் இருவர்
வேலை செய்வர்.
அதில் ஒருவன்
எடுக்கப்பட்டு மற்றவன் விடப்படுவான்.
இருவர் இருந்து
மாவாட்டுவர்,
அதில் ஒருத்தி எடுக்கப்பட்டு
மற்றவள் விடப்படுவாள்.
தலைவன் ஏற்படுத்திய
விசுவாச ஊழியன்,
நம்பிக்கைக்குள் நிற்கும் வரை
அனைத்துக்கும் அதிபதியாவான்.
தலைவன் வரும் வரை
கும்மாளமிட்டு கடமை தவறுபவன்,
நினையா நேரத்தில்
அழிவுக்குள் அனுப்பப்படுவான்.
விழிப்பாயிருங்கள்,
இன்றே… இப்போதே
உங்கள் செயல்களில்
வாழ்வின் வாசனை சேருங்கள்,
நிச்சயமாய் நேசனை சேர்வீர்கள்.
No comments:
Post a Comment