நான்
மண்ணுலகில்
தீ மூட்ட வந்தேன்.
இது
விண்ணகத் தீ.
கருத்துக்களோடு கருத்துக்கள்
மோதி
ஆழ்ந்து கிளம்பும் அக்கினியில்
இனி
குடும்பங்களிடையே
பிளவுகள் வரும்.
ஒன்றாயிருந்த ஐவரில்
மூவர் மனம் திரும்புவர்
இருவர்
எதிராவர்.
விபத்துக்களும் சாவுகளும்
தீயோருக்கானது
என்கிறீர்களே,
அவர்களை விடத் தீயோர்
உங்களிடையே உண்டு
என
உறுதியாய் சொல்லுகிறேன்.
அறிந்து கொள்ளுங்கள்
வாழ்வுக்கான வழியை.
விலக்கி விடுங்கள்
சாவுக்கான சாலையை.
No comments:
Post a Comment