விண்ணரசை,
பூமியில் புதைந்த
புதையலுக்கும் ஒப்பிடலாம்.
பூமியில் புதையலிருப்பதைப்
புரிந்து கொண்டவன்
தன்
சொத்துக்களை எல்லாம் விற்று
அந் நிலத்தைச்
சொந்தமாக்குவான்.
முழுதையும் இழந்து
முத்தமிடும் புதையலே
விண்ணரசு.
விண்ணரசு,
வியாபாரி தேடும்
விலைமதிப்பில்லா முத்து.
அதைக் கண்டவன்.
தன் சொத்தெல்லாம் விற்று
முத்தைப் பெற்று முத்தமிடுவான்.
விண்ணரசு,
எதை இழந்தும் பெறத் தகுந்த
ஒரே
இலட்சிய இலக்கு.
No comments:
Post a Comment