Friday, August 3, 2018

விண்ணரசு வெள்ளிக்காசு


இருட்டுக்குள் விழுந்து விட்ட
ஒரு வெள்ளிக்காசை
விளக்கின் கைகள்
இருட்டை
விலக்கித் தேடுவதில்லையா ?

மூலை முடுக்கில்
கதவின் இடுக்கில்
எங்கேனும் அதைக்
கண்டெடுத்தபின்
களிகூர்வதில்லையா ?

மனம் திருந்தும் மனிதன்
தொலைந்து போன
வெள்ளிக் காசே.

வெளிச்சக் கைகள்
அவனை
தேடித் திருகின்றன.

மனம் திரும்புதலே
மகத்துவமான மாற்றம்.

No comments:

Post a Comment