இருட்டுக்குள் விழுந்து விட்ட
ஒரு வெள்ளிக்காசை
விளக்கின் கைகள்
இருட்டை
விலக்கித் தேடுவதில்லையா ?
மூலை முடுக்கில்
கதவின் இடுக்கில்
எங்கேனும் அதைக்
கண்டெடுத்தபின்
களிகூர்வதில்லையா ?
மனம் திருந்தும் மனிதன்
தொலைந்து போன
வெள்ளிக் காசே.
வெளிச்சக் கைகள்
அவனை
தேடித் திருகின்றன.
மனம் திரும்புதலே
மகத்துவமான மாற்றம்.
No comments:
Post a Comment