Thursday, August 2, 2018

இயேசு எனும் திராட்சைக் கொடி


இயேசு எனும் திராட்சைக் கொடி


நான்
திராட்சைக் கொடி.
தந்தை பயிரிடும் பரமன்.
நீங்கள் என் கிளைகள்.

கனிதராக் கிளைகள்
தறிக்கப்பட்டு
விறகாகும்.
கனிதரும் கிளைகள்
கழிக்கப்பட்டு
அதிகமாய் கனிதரும்.

கொடியில் இல்லாத கிளைகள்
தானே
கனிதரல் இயலாது.
வேர்களில்லா கொடிகளுக்கு
கிளைகளிலேது கலகலப்பு.

என்னில் நிலைத்திருங்கள்
இல்லையேல்
சருகாகி எரிவீர்கள்.

நண்பனுக்காய்
உயிர்தருவதே
உயர்வான நட்பு.
நீங்கள் என் நண்பர்கள்.

வானக தந்தையின்
விருப்ப உரைக்கு மறுப்புரை
எழுதா மக்களே
என் தாயும், சகோதரரும்.

வாழ்வியல் பாடம்
ஒரு வரிதான்
‘அனைவரிடமும் அன்பு செய்யுங்கள்’
உன்னை நேசிப்பதுபோல்.

No comments:

Post a Comment