Thursday, August 2, 2018

தந்தை தந்த செபம்



தந்தை தந்த செபம்


உணவு தரும் தாய்
அதை
ஊட்டியும் விடுவதுபோல,
வரம் தரும் இறைவன்
அதைக் கேட்கும்
வழிமுறையையும் சொல்கிறார்.

சிந்தை கொள்ளும்
அந்த செபம் இதுவே.

விண்ணக வீட்டின் தந்தையே
உமது பெயர்
தூயதென்று போற்றப்படட்டும்,
உமது அரசு வருக,
விண்ணகத்தில் நிறைவேறும் உம் திருவுளம்
மண்ணகத்திலும் நிறைவேறட்டும்,
தினசரி உணவை எங்களுக்குத் தாரும்.
நாங்கள்
பிறர் பாவம் மன்னிப்பதுபோல்
எம் பாவங்களை மன்னியும்.
சோதனைகளுள் எங்களை
உட்படுத்தாதேயும்,
தீயோனின் கைகளில் எங்களை
சிறைப்படுத்தாதேயும்.
மாட்சிமை என்றும் உமக்கு உரியதே.
ஆமென்

No comments:

Post a Comment