அமைதியின் ஆசனம்
இதயத்தில் பாரம்
அழுத்தி அழவைக்கிறதா,
வாருங்கள் என்னிடம்
நான்
சாந்தத்துக்கும் மனசாட்சிக்கும்
சொந்தக்காரன்.
ஆன்மாவின் அமைதி
என்
போதனையின் பகுதி.
உள்ளவனுக்கு கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
இருப்பதும் பறிக்கப்படும்.
புலன்கள் கொள்ளுங்கள்,
கண்டும் காணாமலும்,
கேட்டும் கேட்காமலும்,
உள்ளத்தால் உணராமலும்,
மழுங்கடிக்கப்பட்ட மனசுக்காரர்கள்
வெளிவேடக்காரர்கள்.
நீங்கள் பேறுபெற்றோர்,
உங்களுக்கு உயிர் புலன்கள்
உள்ளன,
உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment