தவறுக்கானதை உதறு
தவறு செய்யத் தூண்டும்
விழிகளோடு நீ
அழிவிற்கு ஆளாவதை விட
குருடனாய்
வாழ்வுக்குள் வருவதே சிறந்தது.
பாவம் செய்யும் பாதங்களோடு
எரி நரகத்தில்
எறியப்படுவதை விட,
முடவனாய் நீ
மனுமகனிடம் வருதலே மாண்பு.
கயமை செய்யும் கைகளுடன்
நரகத்தில் நகர்வதை விட
கையில்லாமல் நீ
விண்ணுலகம் வருவதே
விண்ணவனின் விருப்பம்.
எனவே,
நெருடலானவற்றை விலக்கு
விண்ணகமே உன் இலக்கு.
No comments:
Post a Comment