Monday, June 18, 2018

லூர்து மாதாவுக்கு ஜெபம்


அமலோற்பவ கன்னி மாதாவே! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன்ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடுஅன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சிதரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமதுதிருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறுபலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடையஇதோ ஓடி வந்தோம். உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்துஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால்காத்தருளும்.


தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத்திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும்எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும். மாசற்றகன்னிகையான லூர்து மலை மாதாவே, தேவரீர் எங்கள் தாயாராகையால்,எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்.


ஆமென்.

No comments:

Post a Comment