இயேசுவே, எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும். எங்கள் வீடுகளில் இருக்கிற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத்தை தெளியும். எங்கள் வீடுகளைச் சுற்றிலும், நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம் முடைய இரத்தத்தை தெளித்து வைத்து, உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும்.
எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும், மாய, மந்திர சக்திகள், சாத்தானின் ஏவுதல்கள், பில்லி சூனியக் கட்டுக்கள் மற்றும் ஆபத்துக்கள், விபத்துக்கள், அவமானங்கள். நோய்கள் பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும். நாங்கள் செல்லுகின்ற வழிகளெல்லாம், சென்றடைகின்ற இடங்களெல்லாம் உம்முடைய இரத்த துளிகளைத் தெளித்து வைத்து, எங்களுக்கு முன்னும், பின்னும், வலமும், இடமும், உமது பிரசன்னத்தால் வழிநடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவனே, இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கின்றோம்,
ஆமென்.
எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும், மாய, மந்திர சக்திகள், சாத்தானின் ஏவுதல்கள், பில்லி சூனியக் கட்டுக்கள் மற்றும் ஆபத்துக்கள், விபத்துக்கள், அவமானங்கள். நோய்கள் பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும். நாங்கள் செல்லுகின்ற வழிகளெல்லாம், சென்றடைகின்ற இடங்களெல்லாம் உம்முடைய இரத்த துளிகளைத் தெளித்து வைத்து, எங்களுக்கு முன்னும், பின்னும், வலமும், இடமும், உமது பிரசன்னத்தால் வழிநடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவனே, இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கின்றோம்,
ஆமென்.
No comments:
Post a Comment