Thursday, June 21, 2018

33 மணிச் செபமாலை

சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய்நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமைபிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம்பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாதகிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்துமூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தைபக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசைகட்டளை பண்ணியருளும் சுவாமி.

விசுவாச மந்திரம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவைகாணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.

சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும்விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்றுசெனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங்கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர்.பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.

மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார்.பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும்நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில்அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார்.

வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்குஎழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும்மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரதுஅரசுக்கு முடிவிராது.


பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர்அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும்சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின்வாயிலாக பேசியவர் இவரே.


ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன்.பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.

ஆமென்.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர்சுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்றுபுண்ணியங்களைக் கேட்கிறது.

மெய்யான சர்வேசுரனாயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவவிசுவாசமென்கிற புண்ணியமுண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான மனிதராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவநம்பிக்கையென்கிற புண்ணியமுண்டாகி வளரும்படிக்கு அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான இரட்சகராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவசிநேகமென்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

பிதாவுக்கும், சுதனுக்கும்...

பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்கு கபிரியேலென்கிறசம்மனசானவர் மங்கள வார்த்தை சொன்ன அருள் நிறை மந்திரம் சொல்லுகிறது.

1 அருள் நிறைந்த...


1-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! தேவரீர் அருளிச் செய்த திவ்வியகற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே.அவர்களையெல்லாம் தேவரீர் பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள்சுமுத்திரையாய் நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும்பரம்பவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில்இளைப்பாற்றியடைந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளவும் கிருபைபண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


பரலோகத்துக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


2-வது மன்றாட்டு:


சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய்தந்திரங்களினால் இழுக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறப்படியினாலே உலகம்,பசாசு, சரீரமாகிய ஞான சத்துருக்களை ஜெயித்து நாங்கள் பாவ வழிபோகாமலும், பஞ்சேந்திரியங்களுடைய அலைக்கழிப்புக்கு இனங்காமலும்ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிபாட்டில் சுமுத்திரையாய் நடக்கவும்கிருபை பண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


பூலோகத்துக்கு ஆண்டவளாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


3-வது மன்றாட்டு:


சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் பிரதான புண்ணியங்களாகியவிசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞானஒளி கொண்டு பேரின்பத்தின் பாதையை பிடிக்கவும் உலகத்தில் உத்யோகத்தொழில்களை செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்தியஇராச்சியத்தையும் மாத்திரம் தாவி நிற்கவும் எல்லா கிரிகைகளையும்உமக்காகவே செய்யவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


விடியற்காலத்தின் நட்சத்திரமாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


பிரார்த்திக்கக்கடவோம்.

அவதரித்த தேவனுமாய், கிருபை நிறைந்த கர்த்தருமாய், மதுரமுள்ளஇரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே! தேவரீர் இவ்வுலகத்தில் வாசம்பண்ணின முப்பத்து மூன்று வருஷ காலம் மனிதர்களுக்கு திவ்வியமாதிரிகையாக செய்து வந்த சுகிர்த புண்ணியங்களை அடியோர்கள்அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக்கத்தக்கதாக, உம்முடைய திருஇரத்தமெல்லாம் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள்மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும்தரிசித்துச் சிநேகித்து ஸ்துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி!


ஆமென்.

No comments:

Post a Comment