Monday, June 18, 2018

அனுகூலமடைய அர்ச்சியசிஷ்ட அந்தோணியரிடம் செபம்.

ஓ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே! உன்னதத் தரித்திரத்தின் முன்மாதிரிகையே! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரும் விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ! அதுபோல் வல்லமையுள்ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)


அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக.


ஆமென்.

No comments:

Post a Comment