Monday, June 18, 2018

அர்ச்சியசிஷ்ட லூர்து மாதா பிரார்த்தனை!

சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மோட்ச பிரதேசத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க , அழகின் அவதாரம் போல தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஆத்துமா சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க , அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த்  தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நீதிமான்களை ஸ்திரப்படுத்துகின்ற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

குருடர்களுக்குப் பார்வை அளிக்கிற லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

செவிடருக்குச்  செவிப்புலனைத் தருகிற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சப்பாணிகளை நடக்கச் செய்கிற லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நோயாளிகளைக் குணப்படுத்துகிற லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

கஸ்தியாயிருக்கிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கிற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

மேன்மேலும் மன்றாடப்படுகிற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

லூர்தென்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற சனங்களை வரச்செய்கிற லூர்து நாயகியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்கள் தாயாகிய திருச்சபைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புனித பாப்பானவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து  மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்கள் உற்றார் , பெற்றோர் , புத்திரர் , மித்திரருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

எங்கள் விரோதிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

சகல பாவிகள் , பதிதர் அஞ்ஞானிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக :

சர்வேசுரா சுவாமி ! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டு புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும் , மரணத்தை தேவ இஷ்ட பிரசாதத்தோடு அடையவும் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தை நோக்கி தயை செய்தருளும்.

ஆமென்.

No comments:

Post a Comment