(உத்தம மனஸ்தாபப்பட்ட பின் லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன்பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும்)
இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம்துதிக்கப்படுவதாக.
எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்
எங்கள் லூர்து நாயகியே! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும்மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும்.
எங்கள் லூர்து நாயகியே! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக்குணப்படுத்தியருளும்
வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
ஆமென்.
No comments:
Post a Comment