ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்,
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
திருமீட்பரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே.....
தேவகிருபையின் அதிசயத்துக்குரிய கருவியாகிய அமலோற்பவ மாதாவே.....
லூர்துமலை கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
மோட்சபிரதாபத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்கள் அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
ஞானசெளந்தரியத்துக்கு மிஞ்சின செளந்தரியம் இல்லையென்று காண்பிக்க அழகின் அவதாரம் போல் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
ஆத்தும தூய்மைக்கு மேலான தூய்மை இல்லை எண்று காண்பிக்க தூய வெண்ணாடையை உடுத்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
வானோருக்கு அடுத்த புண்ணியம் தூய்மை என்று காண்பிக்க மேகமற்ற வானம்போன்ற நீலகச்சையைக் கட்டிக்கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
நாங்கள் நாட வேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அன்னாந்து பார்த்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
53 மணி செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பக்திச்செயல் என்று கான்பிக்க செபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரே எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள்ரோஜாச் செடியைக் காலாலே மிதிக்கிறவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
தாழ்ச்சியும் ஏழ்மையும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் அன்பாயிருக்கிறீர் என்று காண்பிக்க ஓர் ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க அந்தச் சிறு பெண் மூலமாக ஒரு நீருற்றைத் தோற்றுவித்த அமலோற்பவ மாதாவே....
தேவரீருடைய வல்லமையும் கிருபையும் அளவிட்டு சொல்லமுடியாது என்று காண்பிக்க அந்த நீருற்று தாராளமாய் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற நோயாளிகளுக்கு நலம் அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி புனித அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
பரம பிதாவே உமது திரு உள்ளத்தின்படியே லூர்து கெபியில் தோன்றி நாமே அமல உற்பவம் என மொழிந்து, ஜெபமும் தவமும் கொண்ட புனித வாழ்வைக் கொண்ட கன்னிமரியாளை எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்றும் நன்றிமலர்களை சூட்டுகிறோம். அன்னையின் பேறுபலன்களினாலும் மண்றாட்டினாலும் நாங்கள் வாழ்வில் அமைதி கான அருள்புரியும் தேவனே.. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை இறைஞ்சு மன்றாடுகிறோம்.
ஆமென்.
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்,
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
திருமீட்பரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே.....
தேவகிருபையின் அதிசயத்துக்குரிய கருவியாகிய அமலோற்பவ மாதாவே.....
லூர்துமலை கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
மோட்சபிரதாபத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்கள் அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
ஞானசெளந்தரியத்துக்கு மிஞ்சின செளந்தரியம் இல்லையென்று காண்பிக்க அழகின் அவதாரம் போல் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
ஆத்தும தூய்மைக்கு மேலான தூய்மை இல்லை எண்று காண்பிக்க தூய வெண்ணாடையை உடுத்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
வானோருக்கு அடுத்த புண்ணியம் தூய்மை என்று காண்பிக்க மேகமற்ற வானம்போன்ற நீலகச்சையைக் கட்டிக்கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
நாங்கள் நாட வேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அன்னாந்து பார்த்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
53 மணி செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பக்திச்செயல் என்று கான்பிக்க செபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரே எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள்ரோஜாச் செடியைக் காலாலே மிதிக்கிறவளாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
தாழ்ச்சியும் ஏழ்மையும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் அன்பாயிருக்கிறீர் என்று காண்பிக்க ஓர் ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே.....
தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க அந்தச் சிறு பெண் மூலமாக ஒரு நீருற்றைத் தோற்றுவித்த அமலோற்பவ மாதாவே....
தேவரீருடைய வல்லமையும் கிருபையும் அளவிட்டு சொல்லமுடியாது என்று காண்பிக்க அந்த நீருற்று தாராளமாய் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற நோயாளிகளுக்கு நலம் அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே.....
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி புனித அமலோற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
பரம பிதாவே உமது திரு உள்ளத்தின்படியே லூர்து கெபியில் தோன்றி நாமே அமல உற்பவம் என மொழிந்து, ஜெபமும் தவமும் கொண்ட புனித வாழ்வைக் கொண்ட கன்னிமரியாளை எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்றும் நன்றிமலர்களை சூட்டுகிறோம். அன்னையின் பேறுபலன்களினாலும் மண்றாட்டினாலும் நாங்கள் வாழ்வில் அமைதி கான அருள்புரியும் தேவனே.. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை இறைஞ்சு மன்றாடுகிறோம்.
ஆமென்.
No comments:
Post a Comment