Friday, June 22, 2018

இயேசுவின் பரிசுத்த நாமம்

நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன் . யோவான் 14:14

(இந்தச் செபங்கள் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்தவை )


இயேசு என்கிற பரிசுத்த நாமமே!
வல்லமையுள்ள நாமமே! மகத்துவமுள்ள நாமமே !
விடுதலை கொடுக்கிற நாமமே! வாழ்விக்கிற நாமமே !
ஆசீர்வதிக்கிற நாமமே! அற்புதங்களைச் செய்கிற நாமமே!
ஒரே ஏக தெய்வத்தின் நாமமே!
உம்மை நான் ஆராதிக்கிறேன். விசுவசிக்கிறேன்.
ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன்.
உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன்.
உம்மை நம்புகிறேன் . மகிமைப்படுத்துகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன்.
இயேசுவின் நாமத்தினாலே நான் பலம் அடைகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் வெற்றி பெறுகிறேன்.
இயேசு என்கிற நாமமே! என்னை அபிஷேகியும் . என்னை உருமாற்றும் .
என்னை முழுமையாக்கும் .எனது எல்லா வெற்றிடங்களையும் நிரப்பும்.
இயேசு என்னும் நாமத்தின் பிரசன்னம் எனக்குள் இறங்குவதாக.
என்னை நிரப்புவதாக . ஒளிர்விப்பதாக. அபிஷேகம் செய்வதாக அல்லேலுயா

இயேசு என்னும் நாமமே ! நீரே என் வாழ்வு ! என் உயிர் மூச்சு!
என் ஆதாரம் நீரே! என் சமாதானம் .என் வளமை. என் எதிர்காலம்.
என்னை பாதுகாக்கும் கோட்டையும் அரணும் நீரே !கேடயமும் நீரே !
கவசமும் நீரே நான் ஊன்றி நிற்கும் பாறையும் என் கன்மலையும் நீரே!
என் வெற்றியும் மகிழ்வும் நீரே !என் ஆறுதலும் ஆதரவும் நீரே!
இயேசு என்னும் நாமமே! என்னை சூழ்ந்துகொள்ளும்.
என்னை நெருங்கி இரும். என்னை பற்றிப் பிடித்துக் கொள்ளும்.
என்னுள்ளிருந்து ஜீவநீருற்றுகள் புறப்படச் செய்யும். உமது உயிர் மூச்சை எனக்குள் அனுப்பும் அல்லேலூயா
(சிறிது நேரம் துதிக்கவும்)


இயேசுவின் பெயரால் செபம்

இயேசு என்கிற மேலான வல்லமையான பெயரை என் உடலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். சுகப்படுத்துகிற ஆண்டவர் இயேசுவின் பெயரை என் மூளைக்குள்ளும் அதன் இயக்கங்களுக்குள்ளும், அதனால் கட்டுப்படுத்தப்படுகிற என் உடலின் எல்லா இயக்கங்களுக்குள்ளும் நான் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற மகத்துவமுள்ள பெயரை என் உடலில்
உள்ள எல்லா எலும்புகளுக்குள், முதுகு பகுதிகளுக்குள் எலும்பு மூட்டுக்கள். மூட்டுக் கிண்ணங்கள். தசைகள், தசை நார்கள் தோல், நரம்பு மண்டலங்களுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் , நுரையீரலின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் (சுருங்கி விரிதலுக்குள்) இயேசு என்கிற அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு இரத்தத் துளிகளுக்குள்ளும் , நான் சுவாசிக்கும் காற்றின் அணுக்களுக்குள்ளும் இயேசு என்கிற உமது வல்லமையான பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா

நான் உண்ணுகிற உணவு , குடிக்கிற நீர் மற்றும் பானங்கள் , என் உடைகள் , நான் உடுத்தியிருக்கிற ஆடை , நான் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களுக்குள்ளும்இயேசு என்கிற வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . நான் பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்குள்ளும் , பொருட்களுக்குள்ளும் , நபர்களுக்குள்ளும் , என் கண்ணின் பார்வைகளுக்குள்ளும் , நான் கேட்கிற ஒலிகள் , இசை வார்த்தைகளுக்குள் , என் உணர்வுகளுக்குள் , சிந்தனைகளுக்குள் , தொடு உணர்வுகளுக்குள் , என் வாயின் வார்த்தைகளுக்குள் இயேசு என்கிற உம்முடைய அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . அல்லேலூயா !

இயேசு என்கிற மகா பரிசுத்த பெயரை என் மனதுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் ஆழ் நிலைகளுக்குள் , அதன் சுகம் பெறாத காயங்களுக்குள் , விடுவிக்கப்படாத கட்டுகளுக்குள் , ஒருமனப்படமுடியாத அலைக்கழிப்புகளுக்குள் , நிலை நிற்க முடியாத தடுமாற்றங்களுக்குள் , உம்மோடு ஒன்றிக்க முடியாத நிலைகளுக்குள் , உம்மை அறிந்து கொள்ள இயலாத எல்லா அந்தகாரங்களுக்குள்ளும் , விடுவிக்கிற , ஒளிர்விக்கிற , அபிஷேகிக்கிற , உறுதிப்படுத்துகிற , இயேசு என்கிற வாழ்வு தருகிற வாழ்விக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் .

இயேசுவே உம்முடைய வெற்றி தருகிற பெயரை எனது மனதின் அமுக்கப்பட்ட உணர்வுகளுக்குள் , நிராசைகளுக்குள் , ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புகளுக்குள் , சோர்வுகளுக்குள், ஏக்கங்களுக்குள் , தனிமைப்படுத்தப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட நிலைகள் மற்றும் உணர்வுகளுக்குள் குற்ற உணர்வுகள் , காயப்படுத்தப்பட்ட ,குற்றப்படுத்தப்பட்ட நிலைகளுக்குள் அவமானப்படுத்தப்பட்ட , புறந்தள்ளப்பட்ட உணர்வுகளுக்குள் , நம்பிக்கையற்ற நிலைகளுக்குள் , அனுப்பி செபிக்கிறேன் . இயேசு என்கிற விடுதலை அளிக்கிற பெயரை என் கோப உணர்வுகள் , எரிச்சல் உணர்வுகள் , வெறுப்பு சலிப்பு உணர்வுகள் , ஏற்றுக் கொள்ள முடியாத விட்டுக் கொடுக்க இயலாத நிலைகள் , மன்னிக்க முடியாத நிலைகள் , தெளிவற்ற குழப்பமான நிலைகள் , முடிவெடுக்க முடியாத நிலைகள் , இவற்றுக்குள் அனுப்பி செபிக்கிறேன் .

மனதின் எல்லா பரபரப்பான நினைவுகள் என்ன ஆகுமோ என்ற வீண் கவலைகள் , படபடப்பான நிலைகள் , தேவையில்லாத பேரார்வங்கள் , சந்தேகமான எதிர்மறையான நிலைகள் இவற்றுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என் மனதின் கற்பனைகள் , கனவுகள் , விடுபடமுடியாத பலவீனங்கள் , எல்லாவிதமான நன்மையான மற்றும் தீமையான நினைவுகளுக்குள்ளாகவும் இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எல்லாவிதமான பய உணர்வுகள் , நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலைகள் , கட்டாயப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள் , மனித வார்த்தைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் என் மீது திணிக்கப்பட்டிருக்கிற எல்லாவற்றின் மீதும் இந்த நேரத்தில் அன்பு செய்கிற விடுதலை கொடுக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .

​எல்லா வேதனையான நினைவுகள் , இழப்பின் உணர்வுகள் , இல்லாமை , இயலாமை உணர்வுகள் , நெருக்கப்பட்ட உணர்வுகள் எனது இயற்கையான இயல்பில்லாத சகல உணர்வுகள் மீதும் இயேசு என்கிற ஆறுதல் அளிக்கிற , பலப்படுத்துகிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என்னைக் குறித்து என் மனதில் இருக்கிற எல்லா எதிர்மறையான தீர்ப்புகள் , மனித வார்த்தைகள் , தீர்மானங்கள் , எதிர்பார்ப்புகள் , இவற்றுக்குள் மன்னிக்கிற, நேசிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா

இயேசு என்கிற மேலான பெயரை அனைத்தையும் ஆளுகை செய்கிற பெயரை என் ஆன்மாவுக்குள் அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் அந்தரங்கங்களுக்குள் அதன் எல்லா அந்தரங்கங்களுக்குள் கட்டப்பட்ட உணர்வற்ற , உயிரற்ற , வறட்சியுற்ற நிலைகளுக்குள் இயேசு என்கிற உமது வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் ஆன்மாவின் உலர்ந்து போன , ஆசீர்வாதமற்ற அழுகி நாற்றமெடுக்கிற எல்லா நிலைகளுக்குள்ளும் தெய்வமே உம்முடைய பிரசன்னத்தை உணர முடியாத , தக்க வைத்துக் கொள்ள முடியாதபடி , வெளிப்படுத்த முடியாதபடி என் ஆன்மாவைக் கட்டி இருக்கிற எல்லா பாவ பலவீன தீமைகளுக்குள் , என் உடலும் அதன் உணர்வு , என் மனமும் என் விருப்பங்களும் என் ஆன்மாவை அடிமைப்படுத்தி இருப்பதான எல்லா நிலைகளுக்குள்ளும் விடுதலை அளிக்கிற இயேசு என்கிற உம்முடைய அற்புத பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !

என் வாழ்வின் எல்லா நிலைகளுக்குள்ளும், கடந்த காலங்கள் , நிகழ்காலங்கள் , எதிர்காலங்களுக்குள் ,இயேசு என்கிற உண்மையுள்ள உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் .என் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாய் இருக்க வேண்டியவைகள் மாறுபட்டு காணப்படுகிற நிலைகள் , எந்தவித நன்மைத்தனத்தையும் நிச்சயிக்கப்பட்ட நிலைகளைக் காண முடியாத நிலைகள் , தெய்வத்தின் திட்டங்கள் , வெளிப்படுத்தப்படாத, அறிந்து கொள்ள முடியாத கட்டப்பட்ட நிலைகள் , மறைக்கப்பட்ட , புரிந்து கொள்ள முடியாத நிலைகள் , இவைகளுக்குள் எல்லாம் அறிவூட்டுகிற, ஒளியூட்டுகிற ஆசீர்வதிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .

​என் கடந்த கால வாழ்வின் கசப்புகள் , வேதனைகள் , தோல்விகள் , இழப்புகள் , அலைக்கழிக்கப்பட்ட நிலைகள் , தெய்வத்தைப் பற்றிய அறிவும் அபிஷேகமும் இல்லாததால் நான் இழந்து போன ஆசீர்வாதங்கள் , இவைகளுக்குள்ளாக இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் . என் நிகழ்காலத்தின் எல்லாத் தேவைகளுக்குள்ளும் , ஆசைகளுக்குள்ளும் , திட்டங்களுக்குள்ளும் ,செயல்பாடுகளுக்குள்ளும் ,வாழ்வின் நிலைகளுக்குள்ளும் இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா !

எனக்குள் இருக்கிற எல்லா பிரிவினைகளுக்குள்ளும் , பிரச்சனைகளுக்குள்ளும் , நானே அறிந்து கொள்ளமுடியாத , விடை காண முடியாத எல்லா கேள்விகளுக்குள்ளும் இயேசு என்கிற தெளிவு தரும் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . எனது அலட்சியங்கள் , உண்மையற்ற , பரிசுத்தமற்ற நிலைகள் , 'நான் ' என்கிற நிலைகள் , அங்கீகாரம் தேடுகிற நிலைகள் , முதன்மைப்படுத்துகிற நிலைகள் இவைகளுக்குள் எல்லாம் இயேசு என்கிற உமது மீட்பளிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன்

என்னுடைய அழைத்தலின் , ஊழியத்தின் திறமைகள் , ஆசீர்வாதங்களின் அடைக்கப்பட்ட குகைகளுக்குள் அவற்றுக்கு உயிரும் வாழ்வும் அளிக்கிற இயேசுவின் வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . கட்டவிழ்க்கிற, எழும்பிக் காலூன்றி நிற்கச் செய்கிற , எல்லா கூன்களையும் நிமிர்த்தி விடுகிற , இயேசு என்கிற பெயரை எனக்கென்று தெய்வம் தந்திருக்கிற எல்லா உறவுகளுக்குள்ளும் எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன் .இயேசு என்கிற பெயரின் மீது எனது விசுவாசத்தை பதியச் செய்கிறேன் அல்லேலூயா !

நான் இயேசு என்கிற பெயரை என்னால் முடியவே முடியாது என நினைக்கிற எனது நிறைவேறாத ஆசைகளுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . என்னுடைய எல்லா பயங்களையும் , விசுவாசமாக மாற வேண்டிய அவைகளுக்குள்ளாக இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . பரிசுத்த ஆவியின் அமைதியால் என்னை நிரப்பும்படி இயேசுவின் பெயரை எனக்குள்ளாகவும் என்னுடைய எல்லா பதற்றங்களுக்குள்ளாகவும் அனுப்பி செபிக்கிறேன் .எளிமையாய் என்னை மாற்ற இயேசுவின் பெயரை என் கோபத்துக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . கடவுள் பார்க்கிறார் என்ற பரிசுத்த உணர்வினால் என்னை நிரப்ப இயேசு என்கிற பெயரை என்னுடைய அலட்சிய மனப்பான்மைக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன்

என்னுடைய பொறுமையற்ற நிலையை விசுவாசம் , நம்பிக்கை, மன உறுதியால் நிரப்ப இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் . எனக்குள் இருக்கிற வெறுமையையும் அவருடைய பிரசன்னத்தை உணர முடியாமல் இருக்கிற நிலையையும் நீக்க இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். ஞானம் , விவேகம் , பகுத்தறியும் திறன் , அறிவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதலால் என்னை நிரப்ப இயேசு என்னும் பெயரை எனக்குள்ளாக அனுப்புகிறேன்.

என் மீதும் என்னுடைய உடல், ஆவி, மனம், ஆன்மா , வாழ்வு, எதிர்காலம் , அழைப்பு , பணிகள் , திறமைகள் , படிப்பு, புலன்கள் , எண்ணங்கள் , கற்பனைகள், பயணங்கள் , வேலைகள் , பொருளாதாரம் , வீடு, சொத்துக்கள், எனது குடும்பம் , நண்பர் மற்றும் உறவினர்கள் மீதும் இயேசு என்கிற பெயரை ஒரு முத்திரையாக வைக்கிறேன்.

இயேசுவின் பெயர் என்னை பரிசுத்தப்படுத்துவதாக !
இயேசுவின் பெயர் என்னை முழுமையாக்குவதாக ! அல்லேலூயா !

இயேசு என்கிற பெயரை எனது கவசமாகவும் , வாளாகவும் , காவலாகவும் , கோட்டையாகவும் எடுத்துக் கொள்கிறேன் . எனக்குத் தெரியாத , உணர முடியாத , புதைக்கப்பட்டதாக கருதப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் என் வாழ்வின் பகுதிகள் மீதும் என் நினைவிலிருந்து மறைந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் என்னைக் கட்டுப்படுத்துகின்ற உணர்வுகள் , நிகழ்வுகள் மீதும் நல வாழ்வையும் ஒளியையும் நிரப்ப வேண்டி இயேசுவின் பெயரை அனுப்புகிறேன் .

அன்பு ,பாசம், பரிவு ,அங்கீகாரம் மற்றும் எனது எல்லா உறவுகள் மூலமாக பிசாசு எனக்கு வைக்கிற எல்லா கண்ணிகளில் இருந்தும் என்னை விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . முக்கியமாக யாரெல்லாம் என்னைத் தனக்கென வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ , அல்லது யாரெல்லாம் பரிசுத்தமற்ற ஆசையோடு என்னை என்னை அணுகுகிறார்களோ, யாரெல்லாம் தன்னல நோக்கோடு என்னை நேசிக்கிறார்களோ , மேலும் யாரெல்லாம் உமது பரிசுத்த சித்தத்திற்கு எதிரான திட்டங்களை ஆலோசனைகளை எனக்காக வைத்திருக்கிறார்களோ இவர்களிடமிருந்து விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .

எனக்கெதிராக என்னைக் கட்ட அனுப்பப்பட்ட எல்லா ஏவல் , பில்லி சூனிய , மந்திரவாதக் கட்டுக்கள் மற்றும் தீய அவைகளுக்குள் இயேசுவின் பரிசுத்த வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி எல்லா தீமைகளுக்கு எதிரான மிக வலிமையுள்ள பாதுகாப்பாக அதை எடுத்துக் கொள்கிறேன். நிலம் , நீர், காற்று , ஆகாயம் மற்றும் என்னைச் சுற்றியுள்ள வான மண்டலங்களுக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் . இவற்றின் மூலமாக எனக்குள் எந்தத் தீமையும் நுழையாதபடி இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .
இயேசுவின் பரிசுத்த பெயர் என்னுள் மகிமை அடைவதாக !
இயேசுவின் பரிசுத்த பெயரின் வெற்றியில் நான் ஒரு சாட்சியாக நிற்பேனாக ! ஆமென்

இயேசுவின் பெயரால் நான் அமைதி அடைகிறேன் .இயேசுவின் பெயரால் நான் புதுப்படைப்பாகிறேன் ! இயேசுவின் பெயருக்கு என்னை அடிமைப்படுத்தி ஒப்புக் கொடுக்கிறேன்.

ஆமென் அல்லேலூயா !

இரக்கமுள்ள இயேசுவே !
என் கண்களை உமது தூய இதயத்துக்குள்ளாக வைக்கிறேன்.
எனது கரங்களை உமது தூய கண்களுக்குள்ளாக வைக்கிறேன் .
என் தொண்டை வாய் , குரல் வளையை உமது தூய தலைக்குள்ளாக வைக்கிறேன் .
என் இதயத்தை உமது தூய வலது கரத்துக்குள்ளாக வைக்கிறேன்.
என் சுவாசத்தை உமது தூய திரு இரத்தத்துக்குள்ளாக வைக்கிறேன் .
ஆமென் ! அல்லேலூயா !


இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம்

இயேசுவே எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும் . எங்கள் வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வையும். எங்கள் வீடுகளின் தரைகளிலும் ,சுவர்களிலும் , கூரைகளிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளியும் . எங்கள் வீடுகளைச் சுற்றிலும் நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளித்து வைத்து உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும் .எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எந்தஒரு காரியமாக இருந்தாலும் , மாய மந்திர சக்திகள் ,சாத்தானின் ஏவுதல்கள் , பில்லி சூனியக் கட்டுகள் மற்றும் ஆபத்துகள் , விபத்துகள் ,அவமானங்கள் , நோய்கள் , பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழி நடத்தும் . நாங்கள் செல்லுகின்ற வழிகளில் எல்லாம் சென்றடைகின்ற ஒவ்வொரு இடங்களில் எல்லாம் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வைத்து எங்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் உமது பிரசன்னத்தால் வழி நடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கிறோம் ஆமென்

ஆராதனை ஆயிரம்

அன்பிற்காக அழும்போது
********************************* 

1. பிதாவின் அன்பார்ந்த மைந்தரே
பதில்: , நன்றி ஆண்டவரே

2. அன்பாக இருக்கிறவரே , நன்றி ஆண்டவரே

3. உம் அன்பினால் ஆறுதல் தருபவரே , நன்றி ஆண்டவரே

4. நிறை அன்பால் அச்சத்தை அகற்றுபவரே , நன்றி ஆண்டவரே

5. உன் மேல் அன்பு கூருகிறேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

6. நிலை சாயா பேரன்பை எம்மேல் கொண்டிருப்பவரே , நன்றி ஆண்டவரே

7. முடிவில்லா அன்பு காட்டி பேரன்பால் எம்மை ஈர்த்துக் கொண்டவரே , நன்றி ஆண்டவரே

8. உம்மீது அன்பு கொள்வதால் எம்முள் குடிகொள்பவரே , நன்றி ஆண்டவரே

9. அன்பினாலும் இரக்கத்தினாலும் எம்மை மீட்டவரே , நன்றி ஆண்டவரே

10. பகைவர்களிடம் அன்புகூரச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

11. உம்மில் அன்புகூர்பவர்களின் நன்மைக்காக தூய ஆவியாரை அனைத்திலும் ஒத்துழைக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

12. நொடிப்பொழுதே எம்மைக் கைவிட்டாலும் உம் பேரிரக்கத்தால் எம்மை ஏற்றுக் கொள்பவரே , நன்றி ஆண்டவரே

13. பொங்கி வரும் சீற்றத்தால் இமைப்பொழுதே உமது முகத்தை மறைத்தாலும் பேரன்பால் எமக்கு இரக்கம் காட்டுபவரே , நன்றி ஆண்டவரே

14. உமது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் உம் அன்பை நிறைவடையச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

15. நீடிய பொறுமையும் இரக்கமும் பேரன்பும் உள்ளவரே , நன்றி ஆண்டவரே

16. அன்பும் அமைதியும் தந்து எம்மோடு இருப்பவரே , நன்றி ஆண்டவரே

17. அந்நியர் மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவரே , நன்றி ஆண்டவரே

18. அந்நியர்க்கு அன்பு காட்டுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

19. உம் அருள் நலமும், பேரன்பும் எம்மை புடை சூழ்ந்து வரச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

20. தீமையை வெறுப்போர் மீது அன்புகூர்பவரே , நன்றி ஆண்டவரே

21. எம்மிடம் அன்பு கொண்டிருப்பதால் எம்மைக் கண்டிக்கிறவரே , நன்றி ஆண்டவரே

22. உம் பெயரால் நாங்கள் காட்டும் அன்பையும் உழைப்பையும் மறக்காதவரே , நன்றி ஆண்டவரே

23. முடிவுறாத பேரன்பு கொண்டிருப்பவரே , நன்றி ஆண்டவரே

24. அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வருபவரே , நன்றி ஆண்டவரே

25. உம் அன்பினால் எமக்கு புத்துயிர் அளிப்பவரே , நன்றி ஆண்டவரே

26. உமக்குரியவர்கள் மேல் இறுதி வரை அன்பு செலுத்துபவரே , நன்றி ஆண்டவரே

27. யோவான் திருத்தூதரிடம் விசேச அன்பு கொண்டிருந்தவரே , நன்றி ஆண்டவரே

28. எங்களிடம் நீர் அன்பு செலுத்தியது போல நாங்களும் மற்றவர்களிடம் அன்பு செலுத்த சொன்னவரே , நன்றி ஆண்டவரே

29. நாங்கள் மற்றவர்களுக்கு செலுத்தும் அன்பிலிருந்து நாங்கள் உம் சீடர்கள் என்பதைப் பிறர் அறிந்து கொள்வர் என்றவரே , நன்றி ஆண்டவரே

30. எங்களுக்காக உம் உயிரைத் தந்து எம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியவரே , நன்றி ஆண்டவரே

31. எம் மீது அன்புகூர்ந்து எமக்காக உம்மையே ஒப்புவித்தீரே , நன்றி ஆண்டவரே

32. என்னை அன்பு செய்கிறாயா என்று எங்கள் அன்பைக் கேட்பவரே , நன்றி ஆண்டவரே

33. எம் மீது அன்புகூர்ந்து உமது சாவு வழியாக எம் பாவங்களில் இருந்து விடுவித்தவரே , நன்றி ஆண்டவரே

34. எம் மீது விருப்பம் கொண்டிருப்பவரே , நன்றி ஆண்டவரே

35. திக்கற்றவர்கள் மீது உளமார அன்பு கூர்பவரே, , நன்றி ஆண்டவரே

36. உம் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் உமது அன்பில் நிலைத்திருப்போம் என்றவரே , நன்றி ஆண்டவரே

37. உறவை வளர்க்கும் அன்பைப் பொழிபவரே , நன்றி ஆண்டவரே

38. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தைத் தந்தவரே
, நன்றி ஆண்டவரே

39. உம் மேல் அன்பு கூர்ந்து உம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் பேரன்பு காட்டுபவரே , நன்றி ஆண்டவரே

40. அன்பால் எம் குறைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவரே , நன்றி ஆண்டவரே

41. அன்பே எங்கள் வாழ்வின் ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக என்ற வேதவாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

42. அன்பின் அடிப்படையில் உண்மை பேசி உம்மைப் போன்று எல்லாவற்றிலும் வளர வேண்டும் என்ற வேத வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

43. அச்சத்தை அகற்றும் நிறை அன்புக்காக , நன்றி ஆண்டவரே

44. உண்மையாகவே மக்களினங்களின் அன்பராக இருப்பதற்காக , நன்றி ஆண்டவரே

45. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் என்ற வேத வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

46. முழுமனத் தாழ்மையோடும் , கனிவுடனும் , பொறுமையுடனும் , ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்க வேண்டும் என்ற வேத வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

47. தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள் என்ற வேத வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

48. தூய ஆவி அருளும் அன்புக்காக , நன்றி ஆண்டவரே

49. திரளான பாவங்களைப் போக்கும் அன்புக்காக , நன்றி ஆண்டவரே

50. தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர் என்ற வேத வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே


தனிமையில் தவிக்கும்போது
**************************************

51. அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கின்றேன் என்று தேற்றுபவரே
, நன்றி ஆண்டவரே

52. நான் உனக்கு வலிமை அளிப்பேன் , உதவி செய்வேன் என்பவரே , நன்றி ஆண்டவரே

53. அஞ்சாதே உனக்குத் துணையாய் இருப்பேன் என்று என் வலக்கையைப் பற்றிப் பிடித்துச் சொல்பவரே , நன்றி ஆண்டவரே

54. அஞ்சாதே நான் உன்னை மீட்டுக் கொண்டேன் என்று திடப்படுத்துபவரே , நன்றி ஆண்டவரே

55. என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன் , மதிப்பு மிக்கவன் என்றவரே , நன்றி ஆண்டவரே

56. பால் குடிக்கும் மகவைத் தாய் மறந்தாலும் உன்னை நான் மறவேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

57. என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார் அவர் என்னைத் தனியாக விட்டு விடுவதில்லை என்றவரே , நன்றி ஆண்டவரே

58. நான் தந்தையுள் இருக்கிறேன் தந்தை என்னுள் இருக்கிறார் என்றவரே , நன்றி ஆண்டவரே

59. நான் சொல்வதைக் கடைப்பிடிப்பவரிடம் என் தந்தையும் நானும் குடி கொள்வோம் என்றவரே , நன்றி ஆண்டவரே

60. உள்ளம் கலங்க வேண்டாம் , மருள வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

61. ஆபிரகாம் , அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

63. அஞ்சாதே , ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன் என்று ஈசாக்கிடம் மொழிந்தவரே , நன்றி ஆண்டவரே

64. மோசே , என் பார்வையில் தயை பெற்றுள்ளாய் என்றவரே , நன்றி ஆண்டவரே

65. யோசுவா , வலிமை பேரு துணிவு கொள் நான் உன்னோடு இருப்பேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

66. யோசுவா உன்னைக் கை நெகிழ மாட்டேன் கைவிடவும் மாட்டேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

67. யோசுவா ! வீறு கொள் ! துணிந்து நில் ! கவலைப்படாதே ! நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

68. அருள் மிகப் பெற்றவரே வாழ்க ! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று தூய அன்னை மரியாவை பரலோகம் வாழ்த்தச் செய்தவரே , நன்றி ஆண்டவரே

69. என்னைத் தனியே விட்டு விடுவீர்கள் . ஆயினும் நான் தனிமையாய் இருப்பதில்லை தந்தை என்னுடன் இருக்கிறார் என்று சீடருக்கு உரைத்தவரே , நன்றி ஆண்டவரே

70. அஞ்சாதே பேசிக்கொண்டே இரு ;நிறுத்தாதே ; ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன் என்று பவுலுக்கு உரைத்தவரே , நன்றி ஆண்டவரே

71. உலக முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

72. எம் எதிரியின் கையினின்று எம்மை மீட்கும் பொருட்டு எம்மோடு இருக்கிறவரே , நன்றி ஆண்டவரே

73. எமது துன்பத்தில் எம்மோடு இருப்பவரே , நன்றி ஆண்டவரே

74. எம்மோடு இருக்கும் படைகளின் ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

75. எமக்கு அரணாக இருக்கும் யாக்கோபின் கடவுளே , நன்றி ஆண்டவரே

76. எமக்குக் கருணை காட்டக் காத்திருக்கும் ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

77. இஸ்ராயேலின் தூயவரும் எம்மை விடுவிப்பவருமான ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

78. துன்பங்கள் அனைத்திலும் எம் மீட்பர் ஆனவரே , நன்றி ஆண்டவரே

79. எம் அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளவரே , நன்றி ஆண்டவரே

80. இடுக்கன்னுற்ற வேலையில் எமக்கு உற்ற துணையாய் உள்ளவரே , நன்றி ஆண்டவரே

81. கண்ணயராது உறங்காது எம்மைக் காப்பவரே , நன்றி ஆண்டவரே

82. எம் வலப்பக்கமிருந்து எம்மைக் காப்பவரே , நன்றி ஆண்டவரே

83. உமது முன்னிலையில் எமக்கு நிறைவான மகிழ்ச்சி இருக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

84. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறவரே , நன்றி ஆண்டவரே

85. நாங்கள் குரல் எழுப்பும் போதெல்லாம் எம்மோடு இருப்பவரே , நன்றி ஆண்டவரே

86. உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடுவோர்க்கு அருகில் இருப்பவரே , நன்றி ஆண்டவரே

87. பொறுமையாய்க் காத்திருந்தால் எம் பக்கம் சாய்ந்து எமது மன்றாட்டைக் கேட்டருளியவரே , நன்றி ஆண்டவரே

88. கனிவும் கருணையும் உள்ள கடவுளே எம்மை கைவிடாதவரே , நன்றி ஆண்டவரே

89. மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கிறவரே , நன்றி ஆண்டவரே

90. எம் துணைவரே , எம் மீட்பரே , நன்றி ஆண்டவரே

91. மலைகள் நிலை சாயினும் நிலை சாயாப் பேரன்பை எம் மேல் வைத்திருப்பவரே , நன்றி ஆண்டவரே

92. எம் அரசரே , எம் கடவுளே எமக்கு வெற்றி தருபவரே , நன்றி ஆண்டவரே

93. நெருக்கடியான நேரத்தில் எம் வலிமையானவரே , நன்றி ஆண்டவரே

94. எம்மைக் கண்ணோக்கி எமக்கு அறிவுரை கூறுபவரே , நன்றி ஆண்டவரே

95. துன்ப வேலையில் கூப்பிடும்போது எம்மைக் காப்பவரே , நன்றி ஆண்டவரே

96. "நீ எனக்கு உரியவன் " என்று திடப்படுத்துபவரே , நன்றி ஆண்டவரே

97. கற்பாறையின் மேல் நாங்கள் காலூன்றி நிற்கச் செய்தவரே , நன்றி ஆண்டவரே

98. "கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான் " என்றவரே , நன்றி ஆண்டவரே

99. அழிவின் குழியிலிருந்து எம்மை வெளிக்கொணர்ந்தவரே , நன்றி ஆண்டவரே

100. உமது பேரன்பில் எம்மை களிகூரச் செய்பவரே , நன்றி ஆண்டவரே



கண்ணீரில் கலங்கும்போது

*************************************

101. இம்மையில் வாழ்ந்த காலத்தில் கண்ணீர் சிந்தி மன்றாடிய இயேசுவே , நன்றி ஆண்டவரே

102. இஸ்ரயேலின் அழுகுரலைக் கேட்டு பெரிய இனத்தைத் தோன்றச் செய்தவரே
, நன்றி ஆண்டவரே

103. இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் உம்மை எட்டியுள்ளது என்று இறங்கி வந்தவரே , நன்றி ஆண்டவரே

104. மனம் வெதும்பி மன்றாடிய தோபித்துக்குச் செவி சாய்த்தவரே, நன்றி ஆண்டவரே

105. கடவுளிடமே கண்ணீர் வடிக்கிறேன் என்ற யோபுவுக்கு மனதுருகியவரே
, நன்றி ஆண்டவரே

106. "துயரத்தால் என் கண்ணும் என் உடலும் தளர்ந்து போயின " என்ற தாவீதுக்கு இரக்கம் காண்பித்தவரே , நன்றி ஆண்டவரே

107. உன் கடவுள் எங்கே என்று தீயோர் சொல்லும்போது இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்ற தாவீதுக்கு இரங்கியவரே , நன்றி ஆண்டவரே

108. என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும் என்ற தாவீதுக்கு பதில் தந்தவரே , நன்றி ஆண்டவரே

109. அழுது கொண்டே தலையை மூடிக் கொண்டு வெறுங்காலோடு நடந்து சென்ற தாவீதை வெற்றியுடன் அரியணைக்கு திரும்பச் செய்தவரே , நன்றி ஆண்டவரே

110. கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பிக்க வேண்டி கதறி மன்றாடிய எலியாவுக்கு செவிசாய்த்து அற்புதம் செய்தவரே , நன்றி ஆண்டவரே

111. துணை வேண்டி காலைவரைக் கதறிய எசேக்கியாவுக்குத் துணையாக வந்தவரே , நன்றி ஆண்டவரே

112. மாடப்புறாவைப் போல் விம்முகிறேன் ; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன என்ற எசேக்கியாவின் மேல் கருணைக் கண் நோக்கியவரே , நன்றி ஆண்டவரே

113. உன் கண்ணீரைக் கண்டேன் இதோ உன்னைக் குணப்படுத்துவேன் என்று எசேக்கியாவுக்கு சுகமும் நீடிய ஆயுளும் தந்தவரே , நன்றி ஆண்டவரே

114. எரேமியாவின் இறைவாக்கைப் புரிந்து கொள்ள மூன்று வாரங்களாக அழுது ஜெபித்துக் கொண்டிருந்த தானியேலுக்காக தூதனை அனுப்பியவரே , நன்றி ஆண்டவரே

115. நயீம் ஊர்க் கைம்பெண் மேல் மனமிரங்கி அழாதே என்று கூறி அவளது ஒரே மகனை உயிர்ப்பித்தீரே , நன்றி ஆண்டவரே

116. இலாசர் இறந்ததற்காக கண்ணீர் விட்டு அழுதவரே ; இலாசரை உயிர்ப்பித்தவரே , நன்றி ஆண்டவரே

117. பாவ மனஸ்தாபக் கண்ணீர் பொழிந்த பெண்ணை வாழ்த்தி, மன்னிப்பும் அமைதியும் தந்தவரே, நன்றி ஆண்டவரே

118. மறுதலித்ததற்காக மனம் நொந்து அழுத பேதுருவை மன்னித்தவரே, நன்றி ஆண்டவரே

119. கல்லறைக்கருகில் அழுது கொண்டிருந்த மரியாவைப் பார்த்து "ஏனம்மா அழுகிறாய்?" என்று விசாரித்தவரே, நன்றி ஆண்டவரே

120. எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைப்பவரே, நன்றி ஆண்டவரே

121. எங்கள் கண்கள் கலங்காதபடியும், எங்கள் கால்கள் இடறாதபடியும் செய்தவரே, நன்றி ஆண்டவரே

122. எங்கள் புலம்பலைக் களி நடனமாக மாற்றுபவரே, நன்றி ஆண்டவரே

123. துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் தரவும் சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும் வந்தவரே, நன்றி ஆண்டவரே

124. உம் தோற்பையில் எம் கண்ணீரைச் சேர்த்து வைத்திருப்பவரே, நன்றி ஆண்டவரே

125. உங்கள் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றுவேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

126. அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் பெறுவீர்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

127. நீங்கள் அழுவீர்கள் , புலம்புவீர்கள், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்றவரே, நன்றி ஆண்டவரே

128. எங்கள் அழுகுரலுக்கு செவிசாய்ப்பவரே, நன்றி ஆண்டவரே

129. சொல்வடிவம் பெற முடியாத உம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக எமக்காகப் பரிந்து பேசும் பரிசுத்த , ஆவியானவரே, , நன்றி ஆண்டவரே

130. எங்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்து வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்பவரே, நன்றி ஆண்டவரே

131. அழாதே , யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார் என்ற வாக்குக்காக, நன்றி ஆண்டவரே

132. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள் என்ற வாக்கிற்காக
, நன்றி ஆண்டவரே

133. அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம் என்ற வாக்கிக்ற்காக
, நன்றி ஆண்டவரே

134. கைம்பெண்ணின் கண்ணீர், கன்னத்தினின்று வானம் வரை ஏறுகின்றது என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

135. இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் / திண்ணமாய் அருள்கூர்வேன் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

136. அழுகையோடு வருபவர்க்கு ஆறுதல் அளிப்பேன் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

137. உன் அழுகையை நிறுத்து, கண்ணீர் வடிக்காதே, உன் உழைப்புக்கு பயன் கிடைக்கும் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

138. ஆண்டவரை நோக்கி இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழிந்திடு என்ற வாக்குக்காக, நன்றி ஆண்டவரே

139. இன்று ஆண்டவரின் புனித நாள். எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம் என்ற நெகேமியாவின் வார்த்தைக்காக, நன்றி ஆண்டவரே

140. துயருறுவோரே, நீங்கள் பேறு பெற்றோர் .ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

141. இப்பொழுது அழுது கொண்டிருப்போரே நீங்கள் பேறு பெற்றோர் ; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே


142. யூதர்களின் சூழ்ச்சிகளால் ஏற்பட்ட சோதனையின் போது மிகுந்த தாழ்மையோடும் கண்ணீரோடும் உமக்குப் பணிபுரிந்த பவுலுக்காக , நன்றி ஆண்டவரே

143. தன் அன்பரின் அழுகையைக் கண்டு தயங்கி விடாமல் , உமது பெயருக்காக சாகவும் துணிந்த பவுலுக்காக , நன்றி ஆண்டவரே

144. உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும் , உங்கள் பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன் என்ற எச்சரிக்கைக்காக , நன்றி ஆண்டவரே

145. மக்கள் ஒடுக்கப்பட்டு கண்ணீர் சிந்துகிறார்கள் ; அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை என்ற சாலமோனின் வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

146. என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு கண்கள் குளமாயின என்ற எரேமியாவின் வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

147. மனந்திரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவரே , நன்றி ஆண்டவரே

148. எனக்காக அழ வேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

149. அழுது புலம்பிக் கொண்டு முழு இருதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்று சொன்னவரே , நன்றி ஆண்டவரே

150. மாலையிலோ அழுகை காலையிலோ ஆர்ப்பரிப்பு என்ற வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே


மனசஞ்சலத்தில் மருளும்போது
******************************************

151. மனவேதனையில் முகம் வாடி இருந்த நெகேமியாவுக்கு தயவு காண்பித்தவரே , நன்றி ஆண்டவரே

152. என் உள்ளம் கசந்தது ; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின என்ற தாவீதுக்கு மனதுருகியவரே , நன்றி ஆண்டவரே

153. மனத்துயரால் உள்ளம் உடையும்போது அகமகிழ்ச்சியால் முகமலரச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

154. உடல் நலம் தரும் மன அமைதி தருபவரே , நன்றி ஆண்டவரே

155. மனமகிழ்ச்சி உள்ளவராக்க எல்லா நாட்களையும் விருந்து நாட்களாக்குபவரே , நன்றி ஆண்டவரே

156. மனமுடைந்த நிலையில் இருக்கும்போது எங்களது துன்பத்தை நினையாது இருக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

157. உம்மீது மனவுறுதி கொண்டவர்களை அமைதியால் உறுதிப்படுத்துபவரே , நன்றி ஆண்டவரே

158. உள்ளத்தில் உறுதி இழக்கும்போது திடன் கொள் அஞ்சாதே என்பவரே , நன்றி ஆண்டவரே

159. அறிவுத் தெளிவோடு எங்கள் மனம் செயலாற்றச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

160. மனசஞ்சலத்தோடு இருந்த புனித சூசையப்பருக்கு கனவு வழியாகத் தெளிவு தந்தவரே , நன்றி ஆண்டவரே

161. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருபவரே , நன்றி ஆண்டவரே

162. உம் நுகத்தை ஏற்றுக் கொண்டு உம்மிடம் கற்றுக்கொள்பவருக்கு இளைப்பாறுதல் தருபவரே , நன்றி ஆண்டவரே

163. எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது என்று கலங்கியவரே , நன்றி ஆண்டவரே

164. திருமுழுக்கு நிறைவேறுமளவும் மிகவும் மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

165. இப்பொழுது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது . நான் என்ன சொல்லுவேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

166. என் கை எப்பொழுதும் உன்னோடு இருக்கும் ; என் புயம் உன்னை வலிமைப்படுத்தும் என்றவரே , நன்றி ஆண்டவரே

167. நொடிப்பொழுதே உன்னைக் கைவிட்டேன் ; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

168. எம் உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடையச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

169. தாயைப் போல் எம்மை தேற்றி எங்கள் இதயங்களை மகிழ்விக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

170. என் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்? கடவுளையே நம்பி இரு என்ற வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

171. என் மனம் விரும்புவதைத் தந்தருள்கின்ற ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

172. எம் உள்ள விருப்பத்தை மறக்காமல் தருபவரே , நன்றி ஆண்டவரே

173. உமது திருச்சட்டத்தையே எமக்கு இன்பமாகத் தருபவரே , நன்றி ஆண்டவரே

174. நலமளிக்கும் மருந்தாக மகிழ்வார்ந்த உள்ளம் தந்தவரே , நன்றி ஆண்டவரே

175. எமக்குக் கருணை காட்டக் காத்திருப்பவரே , நன்றி ஆண்டவரே

176. மன்னிப்பதில் தாராள மனதுள்ளவரே , நன்றி ஆண்டவரே

177. உமது ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கச் செய்கிறவரே , நன்றி ஆண்டவரே

178. துன்பமும் கவலையும் எம்மைப் பற்றிக் கொண்ட போது உமது கட்டளையால் எம்மை மகிழ்வித்தவரே , நன்றி ஆண்டவரே

179. என் பெயரால் உனது வலிமை உயர்த்தப்படும் என்றவரே , நன்றி ஆண்டவரே

180. அவமானத்திற்குப் பதிலாக இருமடங்கு நன்மை தருபவரே , நன்றி ஆண்டவரே

181. வன்மத்திற்கு இடங்கொடாத உள்ளத்தை உயர்வு பெறச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

182. உம் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பவர்களுக்கு ஞானம் அறிவு மகிழ்ச்சி அளிப்பவரே , நன்றி ஆண்டவரே

183. இருள் சூழ் பள்ளத்தாக்கில் நாங்கள் நடக்க நேர்ந்தாலும் எத்தீங்கிர்க்கும் அஞ்சிடாதிருக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

184. உள்ளம் கலங்க வேண்டாம் மருள வேண்டாம் என்பவரே , நன்றி ஆண்டவரே

185. உமது அமைதியை விட்டுச் சென்றவரே , நன்றி ஆண்டவரே

186. உம்மிலேயே மகிழ்ச்சி கொள்வதால் எம் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றுபவரே , நன்றி ஆண்டவரே

187. உள்ளம் கலங்காது உம் தந்தையிடமும் உம்மிடமும் நம்பிக்கை கொள்ள அழைப்பவரே , நன்றி ஆண்டவரே

188. உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துபவரே , நன்றி ஆண்டவரே

189. முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

190. துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாட்களை வெட்கத்தில் கழிக்கவும் தான் பிறந்தேனோ என்று புலம்பிய எரேமியாவுக்கு இரக்கம் காண்பித்தவரே , நன்றி ஆண்டவரே

191. கிறிஸ்து இயேசுவுடன் இணைந்துள்ள எங்கள் உள்ளத்தையும் மனத்தையும் அறிவெல்லாம் கடந்த அமைதியால் பாதுகாப்பவரே , நன்றி ஆண்டவரே

192. பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம் போல் ஆக்குவேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

193. என் உள்ளங்கையில் உன்னைப் பொறித்து வைத்துள்ளேன் என்று எம்மைப் பாதுகாப்பவரே , நன்றி ஆண்டவரே

194. உடைந்த உள்ளத்தோருக்கு அருகில் இருப்பவரே , நன்றி ஆண்டவரே

195. ஏழை எளியவர் எம்மீது அக்கறை கொண்டுள்ளவரே , நன்றி ஆண்டவரே

196. கலங்காதே நானே உன் கடவுள் என்று எமக்கு வலிமை அளிப்பவரே , நன்றி ஆண்டவரே

197. எமக்கு நிழலாக இருப்பவரே , நன்றி ஆண்டவரே

198. எங்கள் மீது இரங்கி எமக்கு ஆசி தருபவரே , நன்றி ஆண்டவரே

199. உம் திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

200. உமது பேரின்ப நீரோடையில் எங்கள் தாகத்தைத் தணிப்பவரே , நன்றி ஆண்டவரே பயத்தினால் பதறும்போது


201. அஞ்சாதே நாம் உம் அடைக்கலமும் மிகச் சிறந்த பரிசுமாக இருக்கின்றோம் என்று ஆபிரகாமுக்கு மொழிந்தவரே , நன்றி ஆண்டவரே

202. அஞ்ச வேண்டாம் நீங்கள் நின்று கொண்டே இன்று ஆண்டவர் செய்யப் போகிற மகத்துவங்களைப் பாருங்கள் என்று மோசே வழியாகப் பேசினவரே , நன்றி ஆண்டவரே

203. திகைக்கவோ மதி கலங்கவோ வேண்டாம் ஏனெனில் நீ போகும் இடமெல்லாம் நாம் உன்னோடு இருப்போம் என்று யோசுவாவுக்குச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

204. நீ அஞ்சாது தைரியமாய் இரு , எதிரியின் நகரையும் நாட்டையும் உம் கையில் ஒப்படைத்தோம் என்று யோசுவாவுக்குச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே


205. எதிரிகளின் பெரும் படையைக் கண்டு அஞ்ச வேண்டாம் நிலை கலங்கவும் வேண்டாம் என்று யோசபாத்துக்குச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

206. அஞ்சாதே ,போதித்துக் கொண்டே இரு, நிறுத்தி விடாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று பவுலுக்குச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

207. உன் பகைவர்களைக் கண்டு அஞ்சாதே என்றவரே , நன்றி ஆண்டவரே

208. அந்நிய தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

209. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் தீமையானது எதற்கும் அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே , நன்றி ஆண்டவரே

210. தாவீதின் மன்றாட்டைக் கேட்டு எல்லாவித அச்சத்தினின்றும் விடுவித்தவரே , நன்றி ஆண்டவரே

211. துன்பமிகு நாளில் நான் அஞ்ச வேண்டியதில்லை என்றவரே , நன்றி ஆண்டவரே

212. இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் அம்புக்கும் அஞ்ச வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

213. இருளில் உலவும் கொள்ளை நோய்க்கு அஞ்ச வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

214. நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் அஞ்ச வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

215. நீ அஞ்சாதே ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம் என்றவரே , நன்றி ஆண்டவரே

216. நீ அஞ்சாதே நம்பிக்கையில் தளராதே ஏனெனில் நான் உன் கடவுள் என்றவரே , நன்றி ஆண்டவரே

217. அஞ்சாதே ஏனெனில் உன்னை மீட்டோம் என்றவரே , நன்றி ஆண்டவரே

218. அஞ்சாதே ஏனெனில் நாமே உன்னைப் பெயரிட்டு அழைத்தோம் என்றவரே , நன்றி ஆண்டவரே

219. அஞ்சாதே ஏனெனில் நீ நமக்கே சொந்தம் என்றவரே , நன்றி ஆண்டவரே

220. நீங்கள் கலங்காதீர்கள் அஞ்சாதீர்கள் . நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ ? புகலிடம் வேறில்லை என்றவரே , நன்றி ஆண்டவரே

221. மனிதரின் நின்தைக்கோ பழிப்புரைக்கோ அஞ்சவோ கலங்கவோ வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

222. நாமே உங்களைத் தேற்றுவோம் சாகக்கொடிய மனிதனுக்கு அஞ்ச வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

223. இஸ்ரயேலே அஞ்சாதே பயப்படாதே நாமே உன் சந்ததியை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்போம் என்றவரே , நன்றி ஆண்டவரே

224. ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோர்க்கு அஞ்சாதீர்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

225. உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

226. உமக்கு அஞ்சி நடந்து உமது பெயரைச் சிந்திக்கிறவர்களை நினைவு நூலில் எழுதி வைத்திருப்பவரே , நன்றி ஆண்டவரே

227. உமது திருப்பெயருக்கு அஞ்சி நடப்பவர் மேல் நீதியின் கதிரவனாக எழுந்து சுகம் தருபவரே , நன்றி ஆண்டவரே

228. தைரியமாக இருங்கள் நான் தான் அஞ்சாதீர்கள் என்று திருத்தூதர்களை திடப்படுத்தியவரே , நன்றி ஆண்டவரே

229. அச்சத்திற்க்குள்ளாக்கும் அடிமை உள்ளம் அல்ல மாறாக பிள்ளைகளாக்கும் தேவ ஆவியைத் தந்தவரே, நன்றி ஆண்டவரே

230. உமக்கு பயந்து வாழ்வோரைச் சுற்றி உமது தூதர் சூழ்ந்து காக்கச் செய்கிறதற்காக, நன்றி ஆண்டவரே

231. உமக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாமல் காப்பதற்காக , நன்றி ஆண்டவரே

232. உமக்கு அஞ்சுவோருக்கு வெற்றிக் கொடி நாட்டுவதற்காக , நன்றி ஆண்டவரே

233. உமக்கு அஞ்சி நடப்போருக்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் இருப்பதற்காக , நன்றி ஆண்டவரே

234. உமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு தயவு காண்பிப்பதற்காக , நன்றி ஆண்டவரே

235. உமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காண்பிப்பதற்காக , நன்றி ஆண்டவரே

236. உம்மீதுள்ள அச்சமே ஞானத்தின் தொடக்கமாக இருப்பதற்காக , நன்றி ஆண்டவரே

237. உமக்கு அஞ்சுகிறவர்களின் ஆசைகளை நிறைவேற்றுகிறவர்களுக்காக , நன்றி ஆண்டவரே

238. உமக்கு அஞ்சுவதால் ஆயுள் நாட்கள் நீடிக்கச் செய்வதற்காக , நன்றி ஆண்டவரே

239. உமது கட்டளைகளுக்குப் பயப்படுகிறவர்களை சமாதானத்தில் நிலைத்திருக்கச் செய்வதற்காக , நன்றி ஆண்டவரே

240. உம்மீதுள்ள அச்சம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதற்காக , நன்றி ஆண்டவரே

241. அஞ்சாதீர் உமது மன்றாட்டு கேட்கப்பட்டது என்று சக்கரியாசுக்கு மொழிந்ததற்காக , நன்றி ஆண்டவரே

242. அஞ்ச வேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் என்று அன்னை மரியாவுக்குச் சொல்லியதற்காக , நன்றி ஆண்டவரே

243. உமது இரக்கம் உமக்கு அஞ்சுவோருக்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதற்காக , நன்றி ஆண்டவரே

244. அஞ்சாதே உன் பொருட்டு கடவுள் உன்னுடன் பயணம் பண்ணுகிற யாவர்க்கும் உயிர் பிச்சை அளித்துள்ளார் என்று பவுலுக்கு உரைத்ததற்காக , நன்றி ஆண்டவரே

245. உமக்கு அஞ்சி பரிசுத்தத்தின் முழுமையை அடையச் சொல்வதற்காக , நன்றி ஆண்டவரே

246. கணவன் மனைவி கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருக்க சொல்லுவதற்காக , நன்றி ஆண்டவரே

247. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை , நிறையன்பு அச்சத்தை அகற்றும் என்பதற்காக , நன்றி ஆண்டவரே

248. நாம் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டோம் ஆகையால் அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்ற வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

249. கலங்காதீர்கள் அஞ்சாதீர்கள் நீங்கள் என் சாட்சிகள் என்ற உம் வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

250. ஆட்டுக் குட்டிகளாகிய எங்களை உம் கையால் ஒன்று சேர்ப்பதற்காக , நன்றி ஆண்டவரே


சோதனையில் சறுக்கும்போது

251. உம் துன்ப சோதனைகளில் உம்முடன் நிலைத்து நின்றவர்களுக்கு அரசுரிமை வழங்குவதாக உறுதியளித்தவரே , நன்றி ஆண்டவரே

252. எங்களால் தாங்கக் கூடிய சோதனை மட்டும் வரச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

253. வெல்ல முடியாத சோதனைக்கு உள்ளாகும்படி எம்மை விடாதவரே , நன்றி ஆண்டவரே

254. சோதனை வரும்போது அதை தாங்கிக் கொள்ள திறன் அளிப்பவரே , நன்றி ஆண்டவரே

255. சோதனையினின்று தப்பவும் வழி செய்கிறவரே , நன்றி ஆண்டவரே

256. சோதனையில் எம்மைக் காத்து தீமையில் இருந்து எங்களை மீட்டவரே , நன்றி ஆண்டவரே

257. இறைப்பற்றுள்ளவர்களை துன்பச் சோதனையினின்று விடுவிக்கத் தெரிந்த ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

258. பலவகை சோதனைகளுக்கு நாங்கள் உள்ளாகும்போது அவை எல்லாம் மகிழ்ச்சி என்றே எண்ணச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

259. சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவர் பேறுபெற்றவர் என்றீரே , நன்றி ஆண்டவரே

260. சோதனைகளை மனவுறுதியோடு தாங்குவதால் எங்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் என்றவரே , நன்றி ஆண்டவரே

261. நாங்கள் சோதனைக்கு உட்படுவது எங்கள் சொந்த இச்சையினாலே தான் என்று உணர்த்தியவரே , நன்றி ஆண்டவரே

262. எங்கள் வாழ்நாளில் சோதிக்கப்பட்டால் முடிவில் வெற்றி பெறுவோம் என்று உறுதி தந்தவரே , நன்றி ஆண்டவரே

263. சோதனையில் பிரமாணிக்கமுள்ளவராகக் காணப்பட்ட ஆபிரகாமை மகிமைப்படுத்தியவரே , நன்றி ஆண்டவரே

264. சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

265. எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று செபிக்கக் கற்றுத் தந்தவரே , நன்றி ஆண்டவரே

266. சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலே சோதிக்கப்படுகிற எங்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறவரே , நன்றி ஆண்டவரே

267. நாங்கள் சோதிக்கப்படுவது அலகையினால் என்பதை தெளிவாக்கியவரே , நன்றி ஆண்டவரே

268. நாங்கள் பல்வேறு சோதனைகளினால் துன்புறுவது சொற்ப காலமே என்று உணர்த்துபவரே , நன்றி ஆண்டவரே

269. எங்களைச் சோதித்த பின் பசும்பொன் போல வெளிப்படச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

270. நாங்கள் பல்வேறு சோதனைகளால் துன்புற்றாலும் அப்பேற்றினை நினைத்து களிகூரச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

271. எங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே சோதனைகள் நிகழச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

272. எங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால் நீர் வெளிப்படும் நாளில் அது எங்களுக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும் என்றவரே , நன்றி ஆண்டவரே

273. ஆண்டவரின் ஆவியை நாங்கள் சோதிக்கக் கூடாது என்று எச்சரித்தவரே , நன்றி ஆண்டவரே

274. உம் துன்ப சோதனைகளில் உம்முடன் நிலைத்து நின்றவர்களுக்கு அரசுரிமை வழங்குவதாக உறுதியளித்தவரே, நன்றி ஆண்டவரே

275. தோபித்து உமக்குப் பிரியமானவனாக இருந்ததனால் அவரைப் பரிசோதிக்க சோதனைகளை அனுமதித்தவரே , நன்றி ஆண்டவரே

276. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே நாங்கள் உம்மைச் சோதிக்கக் கூடாது என்று கட்டளை தந்தவரே , நன்றி ஆண்டவரே

277. ஆபிரகாமைச் சோதிப்பதற்காக அவரது ஒரே மகனைத் தகன பலியாக ஒப்புக் கொடுக்கச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

278. இஸ்ரயேலர் உம்மைச் சோதித்த போதும் பாறையை பிளந்து தண்ணீர் வரச் செய்தவரே , நன்றி ஆண்டவரே

279. மெரிபாவிலும் பாலை நிலத்திலும் மாசாவிலும் இஸ்ரயேலர் உம்மைச் சோதித்ததை வருத்தமாய் எடுத்துரைத்தவரே , நன்றி ஆண்டவரே

280. உம் செயல்களைக் கண்டிருந்தும் உம்மை சோதனைக்கு உட்படுத்தியதை வேதனையோடு எடுத்துரைத்தவரே , நன்றி ஆண்டவரே

281. விலையுயர்ந்த எங்கள் விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும் என்றவரே , நன்றி ஆண்டவரே

282. உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவது போல புகழ்கிறவனுடைய வாயால் எங்களை பரிசோதிக்கிறவரே , நன்றி ஆண்டவரே

283 . செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனையில் வீழ்கிறான் என்ற உண்மையை உணர்த்தியவரே , நன்றி ஆண்டவரே

284 . உம்மீது முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றோமா என்று எங்களை சோதிக்கிறவரே , நன்றி ஆண்டவரே

285 . காலைதோறும் எம்மைச் சந்தித்து வினாடி தோறும் எம்மை பரிசோதிக்கிறவரே , நன்றி ஆண்டவரே

286 . உம் திருக்கண்கள் எம்மைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக , நன்றி ஆண்டவரே

287 . ஆபிரகாமை சோதனை , துன்பங்களால் புடமிட்டு , உமக்கு அன்பராக்கிக் கொண்டதற்காக , நன்றி ஆண்டவரே

288 . எம்மை ஆராய்ந்து சோதித்து பார்ப்பவரே , நன்றி ஆண்டவரே

289 . எம் உணர்வுகளை அறிந்தவராய் , எம் உள்ளத்தைப் பரிசோதித்துப் பார்க்கிறவரே , நன்றி ஆண்டவரே

290 . வெள்ளி நெருப்பிலும் பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவது போல எங்கள் இதயங்களை சோதித்து அறிகிறவரே , நன்றி ஆண்டவரே

291 . மனதின் மறைபொருட்களையும் இதயத்தின் சிந்தனைகளையும் சோதித்து அறிகிறவரே , நன்றி ஆண்டவரே

292 . நீர் பரிசோதிக்கப்படுவது போல எங்கள் இதயங்களை சோதித்து அறிகிறவரே , நன்றி ஆண்டவரே

293 . நீதிமானை சோதிக்கிறவரே , உள்ளத்தையும் இதயத்தையும் பார்க்கிறவரே , நன்றி ஆண்டவரே

294 . ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் என்று பரிசேயரின் கேடுமதியை உணர்த்தியவரே , நன்றி ஆண்டவரே

295 . நீர் செய்யப்போகும் அற்புதத்தை அறிந்திருந்தும் பிலிப்புவைச் சோதிக்க கேள்வி கேட்டவரே , நன்றி ஆண்டவரே

296 . எங்கள் அன்பு உண்மையானதா என்று சோதிக்க பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறவரே , நன்றி ஆண்டவரே

297 . எங்கள் வாழ்க்கை விசுவாசத்தின் மேல் ஊன்றியுள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

298 . குற்றத்தில் அகப்படுகிறவனைப் போல் நாங்களும் சோதனைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்ளச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

299 . தூய ஆவியின் தூண்டுதல் கடவுளிடமிருந்து தான் வருகிறதா என்பதைச் சோதித்து அறியுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

​300 . உம்மை சோதிக்காமல் இருக்கிறவர்கள் உம்மைக் கண்டடைவார்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே




வெறுக்கப்பட்டு விழும்போது

***************************************

301 . அமைதியை அருளும் கடவுளே , நன்றி ஆண்டவரே

302 . எங்கள் நுகத்தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்கச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

303 . பகைவரிடமிருந்து எங்களை காப்பாற்றுபவரே , நன்றி ஆண்டவரே

304 . உம் மக்களுக்கு ஆற்றலும் சமாதானமும் ஆசியும் வழங்குபவரே , நன்றி ஆண்டவரே

305 . எங்களுக்காக இகழப்பட்டவரே , நன்றி ஆண்டவரே

306 . எங்களுக்காக மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரே , நன்றி ஆண்டவரே

307 . எங்களுக்காகச் சிறுமைப்படுத்தப்பட்டவரே, நன்றி ஆண்டவரே

308 . காரணமின்றி என்னை வெறுத்தார்கள் என்ற வாக்கு உம்மில் நிறைவேறிற்று என்றவரே , நன்றி ஆண்டவரே

309 . எங்களுக்காக இழிவுபடுத்தப்பட்டவரே , நன்றி ஆண்டவரே

310 . உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

311 . உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

312 . உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

313 . உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

314 . உம் பொருட்டு மக்கள் எங்களை வெறுத்து ஒதுக்கி வைத்து நாங்கள் பொல்லாதவர்கள் என்று எங்களை இகழ்ந்து
தள்ளி விடும்போது துள்ளி மகிழ்ந்து கொண்டாடச் சொன்னவரே ,
, நன்றி ஆண்டவரே

315 . உம் பொருட்டு இகழப்படும் போது மகிழ்ந்து பேருவகை கொள்ளச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

316 . உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

317 . நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல எனவே உலகு உங்களை வெறுக்கிறது என்றவரே , நன்றி ஆண்டவரே

318 . உம்மை வெறுப்போர் உம் தந்தையையும் வெறுப்பதாகச் சொன்னவரே , நன்றி ஆண்டவரே

319 . என் பெயரின் பொருட்டு உங்களை எல்லோரும் வெறுப்பர் என்று முன்னுரைத்தவரே , நன்றி ஆண்டவரே

320 . காரணமின்றி என்னை வெறுப்போர் என் தலை முடியை விட மிகுதியாய் இருக்கின்றனர் என்று புலம்பிய தாவீதுக்கு இரங்கியவரே, நன்றி ஆண்டவரே

321 . எதிரிகளின் பற்களுக்கு எங்களை இரையாக்கி விடாதவரே , நன்றி ஆண்டவரே

322 . எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும் என்ற தாவாதுக்கு இரங்கியவரே , நன்றி ஆண்டவரே

323 . மனிதரின் சூழ்ச்சியில் இருந்து எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைப்பவரே , நன்றி ஆண்டவரே

324. எம்மோடு போரிட்டோர் கையினின்று எம்மை விடுவித்துப் பாதுகாப்பவரே , நன்றி ஆண்டவரே

325. போரிடும் ஆற்றலை அரைக்கச்சையாக எமக்கு அளித்து, எம்மை எதிர்த்தவர்களை எமக்கு அடிபணியச் செய்தவரே , நன்றி ஆண்டவரே

326. எம் எதிரியின் கையில் எம்மை நீர் விட்டு விடாமல், அகன்ற இடத்தில் எம்மைக் காலூன்றி நிற்க வைத்தவரே , நன்றி ஆண்டவரே

327. உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் எதிர்த்துப் போராடுவேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

328. உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் எதிர்த்து நிற்க மாட்டான் என்றவரே , நன்றி ஆண்டவரே

329. உன் பகைவர்கள் ஒரு வழியில் உனக்கு எதிராக வருவர், ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப் போவர் என்றவரே , நன்றி ஆண்டவரே

330. எங்கள் பகைவர்களைப் பார்த்து சோர்ந்து போகவோ அஞ்சவோ கலங்கவோ தத்தளிக்கவோ வேண்டாம் என்றவரே , நன்றி ஆண்டவரே

331. உமது வல்லமை மிக்க கரத்தின் கீழ் எங்களைத் தாழ்த்தும்போது ஏற்ற காலத்தில் எங்களை உயர்த்துபவரே , நன்றி ஆண்டவரே

332. எம் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

333. காரணமின்றி எம்மை வெறுப்போர் , கண்ஜாடை காட்டி எம்மை இகழ விடாதவரே , நன்றி ஆண்டவரே

334. எம்மைத் தலை நிமிரச் செய்பவரே , நன்றி ஆண்டவரே

335. சீடர்கள் நடுவில் நின்று உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாழ்த்தியவரே , நன்றி ஆண்டவரே

336. நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ? ஏன் உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என்று திருத்தூதர்களைத் திடப்படுத்தியவரே , நன்றி ஆண்டவரே

337. போர் நடந்த நாளில் எம் தலையை மறைத்துக் காத்தவரே , நன்றி ஆண்டவரே

338. பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுபவரே, நன்றி ஆண்டவரே

339. பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெறிகிற நீதியுள்ள ஆண்டவரே , நன்றி ஆண்டவரே

340. நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய் உன் கால் ஒருபோதும் இடறாது என்றவரே , நன்றி ஆண்டவரே

341. யாருக்கும் அஞ்சி நடுங்கவோ மனம் கலங்கவோ வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

342. கிறிஸ்துவின் பொருட்டு பிறர் உங்கள் மீது வசை கூறும்போது மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும் என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

343. உலகம் உங்களை வெறுக்கிறது என்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம் என்ற வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

344. ஆண்டவரே உங்களுக்காக போராடுவார் . நீங்கள் அமைதியாக இருங்கள் என்ற வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

345. கேடு வரும் நாளில் எங்களை உம் கூடாரத்தில் மறைத்து வைப்பதற்காக , நன்றி ஆண்டவரே

346. செல்லும் இடமெல்லாம் எம்மைக் காக்கும்படி உம் தூதருக்குக் கட்டளையிடுவதற்காக , நன்றி ஆண்டவரே

347. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் இருக்கச் செய்வதற்காக , நன்றி ஆண்டவரே

348. உம் வியத்தகு செயல்களால் எம்மை மகிழ்விப்பதற்காக , நன்றி ஆண்டவரே

349. நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாக புகழ் என்னும் ஆடையைத் தருவதற்காக, நன்றி ஆண்டவரே

350. மனந்திரும்புங்கள் , ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது என்று மொழிந்தவரே , நன்றி ஆண்டவரே

351. மனந்திரும்பியவர்களாய் உம குரலொலியைக் கேட்டு அதன்படி நடக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

352. நீதிமான்களை அல்ல , மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்தேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

353. இஸ்ராயேலரின் பாவத்தை மன்னிக்க வேண்டும் ; அல்லது உமது புத்தகத்தில் இருந்து எனது பெயரையும் நீக்கி விடும் என்ற மோசேயின் செபத்தைக் கேட்டவரே , நன்றி ஆண்டவரே

354. மோசேயின் வேண்டுகோளின்படியே இஸ்ரயேலரை மன்னித்தவரே , நன்றி ஆண்டவரே

355. எசேக்கியாசின் மன்றாட்டை ஏற்று , திருச்சட்டத்திற்கு மாறாக பாஸ்காவை உண்டவர்களை மன்னித்தவரே , நன்றி ஆண்டவரே

356. திமிர்வாதக்காரனைப் பார்த்து உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சுகம் தந்தவரே, நன்றி ஆண்டவரே

357. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று பாவியான பெண்ணுக்கு பாவ மன்னிப்பின் நிச்சயம் தந்தவரே, நன்றி ஆண்டவரே

358. அக்கிரமத்தையும் பாவங்களையும் பாதகங்களையும் போக்குபவரே , நன்றி ஆண்டவரே

359. உம் திருமுன் மறைக்காது குற்றத்தை ஒப்புக் கொண்ட தாவீதை மன்னித்தவரே , நன்றி ஆண்டவரே

360. மக்கள் செய்த குற்றங்களை மன்னித்து பாவங்களை போக்கியவரே , நன்றி ஆண்டவரே

​361. மக்கள் செய்த குற்றங்களை மன்னித்து பாவங்களை போக்கியவரே, நன்றி ஆண்டவரே

362. எம்பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவரே, நன்றி ஆண்டவரே

363. நாங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார் மேலாவது எங்களுக்கு மனத்தாங்கல் இருந்தால் மன்னிக்கச் சொல்பவரே, நன்றி ஆண்டவரே

364. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்றவரே, நன்றி ஆண்டவரே

365. எழுபது முறை ஏழு முறை மன்னித்துக் கொண்டே இரு என்றவரே, நன்றி ஆண்டவரே

366. குறைவாக மன்னிப்பு பெறுபவர்கள் குறைவாக அன்பு செய்கிறார்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

367. தந்தையே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று செபித்தவரே, நன்றி ஆண்டவரே

368. எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும் என்று திருத்தூதர்களுக்கு அதிகாரம் தந்தவரே, நன்றி ஆண்டவரே

369. பாவ மன்னிப்பிற்க்காக மனந்திரும்ப வேண்டும் என்று அறிவிக்கச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

370. மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளும்படி தலைவராகவும் மீட்பராகவும் உயர்த்தப் பெற்றவரே, நன்றி ஆண்டவரே

371. எமது அக்கிரமத்தை மன்னித்து எம் பாவத்தை இனிமேல் நினைவு கூராதவரே, நன்றி ஆண்டவரே

372. மங்கி எரியும் திரியை அணைக்காமல் ஒளி ஏற்றுபவரே, நன்றி ஆண்டவரே

373. மனம் திருந்தாவிடில் நீங்கள் அழிவீர்கள் என்ற உமது எச்சரிப்பிற்காக, நன்றி ஆண்டவரே

374. மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள் என்ற யோவானின் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

375. மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதற்காக, நன்றி ஆண்டவரே

376. நாங்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததை பொருட்படுத்தாமல் இப்போது எல்லாரும் மனம் திரும்ப வேண்டும் எனக் கட்டளை இடுவதற்காக, நன்றி ஆண்டவரே

377. உமது திருவுளத்தின்படி ஏற்கப்படும் துயரம் மீட்பு தரும் மனமாற்றத்தை விளைவிப்பதற்காக, நன்றி ஆண்டவரே

378. ஒருவரும் அழிவுறக் கூடாது எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என பொறுமையாய் இருப்பதற்காக, நன்றி ஆண்டவரே

379. மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்த சொல்வதற்காக, நன்றி ஆண்டவரே

380. பெரிது நாங்கள் செய்த பாவம் ; உமது பெயரின் பொருட்டு எம் பாவத்தை மன்னிப்பதற்காக, நன்றி ஆண்டவரே

செபஸ்தியார் நவநாள்

Picture

புனித செபஸ்தியாரின் வரலாறு


விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணக் பேரின்ப வாழ்வை தன் உடமையாக்கிக் கொண்ட புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் என்ற நகரில் பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, திறமைமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
உரோமை பேரரசர் கறினுசின் படையில் செபஸ்தியார் கி.பி. 283ல் சேர்ந்து, சிறந்த படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக் கூடங்களிலே அடைப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்து, அன்பாக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். இந்த பணியை செய்வதற்காக அவர் தனது உயர் பதவியையும், செல்வத்தையும் பெரிதென எண்ணவில்லை.
சிறையில் துன்பப்பட்ட மார்க்குஸ், மார்செல்லியானுஸ் என்ற சகொதர்களைச் சந்தித்து, அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். அப்போது அங்கு வந்த ஆறு வருடங்களாக பேச முடியாமல் இருந்த சோயே என்ற பெண், தனக்கு பேசும் வரம் வேண்டும் என புனிதரின் காலைப் பிடித்து மன்றாடினார். புனிதரும் மனமிறங்கி, அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார். அவள் தன் கணவருடன் மனம் மாறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார். அவ்வாறே மார்க்குஸ், மார்செல்லியானுஸ், அவர்களின் மனைவிகள், பெற்றோர், சிறைக்காவலர் மற்றும் பலர் உண்மை வேதத்தில் சேர்ந்தனர். போலிகார்ப் என்ற குறு அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
உரோமை பேரரசன் கிரோமாசியுஸின் நோயைப் புனித செபஸ்தியார் நீக்கியதால், அவரும் அவரது மகனும் கத்தோலிக்கத் திருச்சபையைச் தழுவ எண்ணங் கொண்டு, திருமுழுக்கு வாங்கினர். அதுமட்டும் அல்லாமல், தனக்கு அடிமையாக இருந்த 1400 கிறிஸ்தவர்களையும் விடுவித்தான்.
புனித செபஸ்தியாரின் நற் பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு, கி.பி. 283-ல் உரோமை பேரரசன் இவரை தனது மெய்க்காப்பாளன் ஆக்கினார். உரோமை எங்கும் வேதகலாபனை தொடர்ந்து வண்ணம் இருந்தது. கிறிஸ்தவர்களை மீட்க அதிகாரம் தரும்படி செபஸ்தியார் திருத்தந்தை காய்யுஸ் என்பவரிடம் வேண்டினார். ஆனால் திருத்தந்தை போலிஸர்ப் என்ற குருமூலம் மெய்காப்பாளராக இருந்து கொண்டே பணிபுரிய அதிகாரம் கொடுத்தார்.
கி.பி. 286-ம் ஆண்டு வரை வேத கலாபனை தொடர்ந்தது. புனித செபஸ்தியாரும் கிறிஸ்தவன் என்பது அரசரின் காதை எட்டியது. ‘நன்றி மறந்தவன்’ எனச் சொல்லி அரசன் கண்டித்தான், இறைவனை வாழ்த்தி வணங்குவதாகவும், அரசனுக்காக செபிப்பைதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த அரசன், அவரைக் கம்பத்தில் கட்டி அம்பால் எய்ய ஆணைப் பிறப்பித்தான். காவலர் அவரை கம்பத்தில் கட்டி, இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து, அவர் இறந்தவிட்டார் என தவறாக நினைத்து சென்று விட்டனர். இரேனாள் என்ற பெண் சென்று, அவர் உயிரோடிருப்பதைக் கண்டு, தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கே குணமடைந்தார். அவரை மறைவாயிருக்கும் படி கிறிஸ்தவர்கள் மன்றாடினார். ஆனால் அவர் அரசன் கோவிலுக்குச் செல்லும் வழியில் நின்று “பேரரசரே! கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் பொய்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களை விட நல்லவர் இல்லை என்றும், அவர்கள் மூலம் உமக்கு நன்மையே அதிகம் என் அறிவீர்” என்றார்.
புனித செபஸ்தியார் உயிரோடு இருப்பதையும், தன்னை எதிர்த்துப் பேசுவதையும் பேரரசென் தியோகிளேசியன் கண்டு வியந்தான். புனிதர் அந்த அரசனைப் பார்த்து, ‘அவர் நான் தான்’, நீர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறீர் என்று உலகம் அறியும் பொருட்டு மீட்பராகிய இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு காப்பாற்றினார் என்றார்.
இதைக் கேட்ட அரசன் கோபங்கொண்டு தடிகளால் அடித்துக் கொல்ல ஆணையிட்டான். 288-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள், செபஸ்தியார் அடித்துக் கொல்லப்பட்டார். லூசினாள் என்பவள் காட்சியில் கண்டு, அவரது உடலை எடுத்து புனித இராயப்பர், சின்னப்பர் கல்லறை வாயிற்படியின் அருகில் அடக்கம் செய்தார்.

புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .


வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .

இத்தாலி தேசத்தில் அதிசயப்பண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .

வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .

அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .

தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .

நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் பத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .

ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவ்ேர,

அநேக அற்பதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .

வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .

சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .

வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .

திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .

பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .

அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .

பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .

அதிசயமான சகல பண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . .

விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .

சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .

சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .

அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .

சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .

ஊமையைப் பேசவைத்தவரே. . .

அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .

எண்ணப்படாத பண்ணிய நன்மை அற்பதங்களைச் செய்தவரே. . .

பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .

உலகம் பசாசு சாீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. .

பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .

அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .

இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .

உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் பறக்கணித்தவரே. .

இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .

இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .

சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .

திரளான அம்பகளால் எய்யப்பட்டவரே. . .

அம்பகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .

உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .

குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .

எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .

விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .

உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .

மிக தைரிய சந்தோ;த்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .

தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு பண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .

மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .

வேதசாட்சிகளுக்குள் விசே; மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .

உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . .

பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,

சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .

வைசூரி முதலிய வியாதி துன்பத்தில்ி ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . .

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே. . .
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு; இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

து; புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவாீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். - ஆமென்.

புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத பண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்பக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -

பர, அருள், பிதா.

ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து பத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.

புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபரி முதலிய இராச்சியங்களில் வி;நோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.

சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி;பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.

பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.

உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு பத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ;மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் பண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா

உரோமாபரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்பகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சாீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்; இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.

துணை; புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:

கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவாீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சாீர நோய்களுக்கு சரியான் ஒள;தமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சாீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வி;பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.

புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்


அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பம் சர்வேசுரன்ளூ பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி;க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்பபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.

ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய;்டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், பண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவாீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். - ஆமென்.

Thursday, June 21, 2018

இயேசுவின் போதனைகள்

மலைப் பொழிவு


போதனைகள்!
அவை வாழ்வின் சுருக்கங்களைச்
சலவை செய்யும்
சாமர்த்திய சாலிகள்.

வாழ்வுக்கான போதனைகள்
மனசை வளமாக்கும்,
தடுமாற்றம் விடுத்து
தடம் மாற்றச் சொல்லும்.

இயேசு போதித்தார்.
அன்றாட வாழ்க்கையை
அலசிப் பிழியும் போதனைகள்.

கழுத்தறுக்கும்
ஆயுதப் போதனைகளல்ல
அழுக்கறுக்கும்
ஆயத்தப் போதனைகள்.


மலை மேல் ஒரு நாள்
மனுமகன் போதித்தார்.
அது
சட்டங்கள் மேல்
ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது.
தாழ்வு மன இதயங்களை
இழுத்து நிமிர்த்தியது.
சோர்வுற்ற சமுதாயத்துக்கு
புத்துணர்வுத் தைலம் பூசியது.

அந்தப் போதனை
இது தான்.

எளிய மனம் கொண்டவர்கள்
பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே.

துயருறுவோர்
பேறுபெற்றோர்
ஆறுதல் அவர்களுக்கானதே.

சாந்தமுள்ளோர்
பேறுபெற்றோர்,
மண்ணுலகு அத்தகைய மனிதருக்கே.

நீதி யின் மேல்
பசியும் தாகமும் கொண்டோ ர்
பேறுபெற்றோர்,
நிறைவு அவர்களுக்கான வரம்.

இரக்கம் கொள்வோர்
பேறுபெற்றோர்
இரக்கம் பெறுவோர் அவரே.

தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்,
கடவுளைக் காணும்
கண்கள் அவர்களதே.

சமாதானம் விதைப்போர்
பேறுபெற்றோர்,
கடவுளின் குழந்தைகள்
சமாதானத்தின் சந்ததிகளே.

நீதிக்காய் வதைக்கப்படுவோர்
பேறுபெற்றோர்
விண்ணரசு வாழ்க்கை
அவர்களுக்காய் ஆயத்தமானதே.

ஆண்டவர் பெயருக்காய்
அவமதிக்கப் பட்டால்
ஆனந்தப்படுங்கள்.
வானக வாழ்வில்
செல்வத்தின் அடர்த்தி அதிகமாகும்.

மனிதநேயத்தின்
மறைந்தபகுதிகளை
திறந்து வைத்து,
உறவின் உறைந்த பகுதிகளை
உருக வைத்தது
இறைமகனின் உயிர் வார்த்தைகள்.

மலைப்போதனையில்
மலைத்துப் போனது கூட்டம்.
இயேசுவை
இதய மலைகளில்
இருத்திச் சென்றது.


உப்பாய் இரு, தப்பாய் இராதே

உன் ஆண்டவரை
நீ
துளியளவும் வெளியின்றி
தூயநேசத்தில் துதி.

உன்மேல் உனக்கான
உள் அன்பை
அயலானுக்கும் அளி.


நீ
உலகின் உப்பு.
சாரமற்ற உப்பு சாலைக்குச் சொந்தம்.
சமையலுக்கு அது
சாத்தியப்படாது.

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

உப்பாய் இரு,
சாலைக்கு அல்ல
சாப்பாட்டிற்கு.

ஒளியாய் இரு, ஒளியாதிரு


நீ,
உலகிற்கான ஒளி.

விளக்கின் பணி
மரக்காலின் கீழ் மறைந்து கிடப்பதல்ல
விளக்குத் தண்டின்
தலையில் அமர்ந்து
வெளிச்சத் திசைகளை
விளக்கி வைப்பது.

சூரியன் பூமிக்குள்
புதையுண்டு கிடந்தால்
யாருக்கேனும் பயனுண்டோ ?

கலங்கரை விளக்கம்
பக்கவாட்டில் படுத்துக் கிடந்தால்
பயணிகளுக்கேது பயன் ?

மலைமேல் உள்ள ஊர்
மறைவாய் இருப்பதில்லையே !
சிகரத்தை யாரும்
திரைகட்டி மறைப்பதில்லையே,

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

உன் ஒளியும்
ஒளிக்கப்படவேண்டாம்.
தயக்கங்களை எல்லாம்
விலக்கிவை,
உள்ளுக்குள் உன்னை நீ
துலக்கிவை.


பாதைக்கான சில போதனைகள்


நீ,
கட்டளைகளைக் கடைபிடி,
துருப்பிடித்த இதயங்களின்
ஓரங்களிலும் கரம் தொடு.

கட்டளைகளால்
மனதின் துரு களை.
பூமியில் ஒழுக்கத்தில் வாழ்பவன்
வான் வீட்டுக்கு உரியவன்
அங்கே
பெரியவனாய் பவனி வருவான்.

o

கொலை செய்வது
மட்டுமல்ல,
சினம் கொள்வதே
தண்டனைக்கான சின்னம் தான்.


தன்னுயிரை கொலுவிலேற்றி
அயலானைக்
கழுவிலேற்றாதே.


ஒழுக்கமான மனைவியை
விவாகரத்து செய்வது
விபச்சாரக் குற்றம்.

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே


கண்களே உன்
உடலுக்கான விளக்கு.
உன் கண்வாசல் அடைந்துவிட்டால்
உடல் முழுதும்
இருட்டுக்குள் இடம் பெயரும்
ஒளி வர வழிசெய்.



கவலைகளை
களஞ்சியத்தில் சேர்ப்போரே,
கவலைக் குவியல்களால்
ஆயுளில் அரை மணி நேரம்
அதிகரிக்க இயலுமா ?

பின் ஏன்
கவலைகளோடு
கை குலுக்குகிறீர்கள் ?
மகிழ்ச்சிக்கு மட்டுமே மாலையிடுங்கள்.


பன்றிகளுக்கிடையில்
முத்துக்களை இடவேண்டாம்.
அவை
சகதியில் தான் சங்கமிக்கும்.
சகதி கலந்த சந்தனம்
பின்
சுய முகம் காட்டுவதில்லை.


முள்ளில் மட்டுமே
நீ
முதலீடு செய்தால்
பூக்கள் உனக்காய் பூத்திருப்பதுமில்லை,
காய்கள் உனக்காய்
காய்த்திருப்பதுமில்லை.


தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.
பயணங்கள் இலகுவானால்
இலக்கில் வேதனை வரவேற்கும்.
பயணங்கள் வலி தந்தால்
இலக்கில் இன்பம் வீற்றிருக்கும்.



சட்டங்களின் ஆகளுக்குள்
மனிதாபிமானம் மடிய வேண்டாம்.
மனிதத்துக்காய்,
காதறுந்து போன உங்கள்
சட்டங்களை சரிசெய்யுங்கள்.

இயேசுவின் அறிவுரைகள்
அளவில் சிறியதாய் தெரிந்தன.
பாதிப்பில்
பெரியதாய் விரிந்தன.


சினம் அழிவின் சின்னம்


கொலை செய்வது மட்டுமே
பாவம் அல்ல,
சினம் கொள்வதே
பாவத்தின் சின்னம் தான்.

சகோதரனைத் திட்டுபவனுக்கு
தீர்ப்பு காத்திருக்கும்,
அன்பின் மொட்டுகளில் மட்டுமே
உயிர் பூ பூத்திருக்கும்.

யாரோடேனும்
பகைகொண்டிருந்தால்
பீடம் வந்து காணிக்கை செய்யாதே.
சகோதரனோடு
சமாதானம் தான் முதல் பணி
அதன்பின்
கடவுளுக்கு காணிக்கை அளி.
.

ஆண்டவரே ஆண்டவரே
என்றழைக்கும்,
உதட்டுப் பிரார்த்தனைகளை விடுத்து,
செயல்களைப் பிரார்த்தனைகளாய்
உடுத்து.


எதிரிகளாய் யாரையும்
எண்ணுதல் தவிர்,
சமாதான சுவாசமே
விண்ணுலக உயிர்.

எதிரிகள்
எண்க்கை குறைந்தால்.
சமாதான மழையில்
நனைந்து நிறைவாய்.


விசுவாசமே சுவாசம்



நம்பிக்கையை குறித்து
இயேசு
இடைவிடாமல் போதித்தார்.

நம்பிக்கையே
செயல்களின் மையம்.

விசுவாசத்தோடு கட்டளையிட்டால்
மலையும் உருண்டு
கடலில் விழும்.
மரமும் பெயர்ந்து
இடம் மாறி நிற்கும்.

நம்புங்கள்
அதுவே வாழ்வுக்கான
நெம்புகோல் என்பதே
இறைமகன் போதனை.
0

தொடர் முயற்சியின்
தோள்களுக்கே
மரியாதையின் மாலைகள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்கள்.

மீட்டாமல்
வீணையில் சுரமில்லை.
தவமில்லாமல்
தரப்படும் வரமுமில்லை.

உங்கள் செல்லப்பிள்ளை
பசி தீர்க்க,
கற்கள் தரும் தகப்பனில்லை.
மீன் கேட்டால்
பாம்பு தரும் பெற்றோருமில்லை.
உன் தந்தையே
இப்படியென்றால்
உலகத் தந்தை எப்படி இருப்பார்
என்பதை உணர்.


தவறுக்கானதை உதறு




தவறு செய்யத் தூண்டும்
விழிகளோடு நீ
அழிவிற்கு ஆளாவதை விட
குருடனாய்
வாழ்வுக்குள் வருவதே சிறந்தது.

பாவம் செய்யும் பாதங்களோடு
எரி நரகத்தில்
எறியப்படுவதை விட,
முடவனாய் நீ
மனுமகனிடம் வருதலே மாண்பு.

கயமை செய்யும் கைகளுடன்
நரகத்தில் நகர்வதை விட
கையில்லாமல் நீ
விண்ணுலகம் வருவதே
விண்ணவனின் விருப்பம்.

எனவே,
நெருடலானவற்றை விலக்கு
விண்ணகமே உன் இலக்கு.


அழியாச் செல்வம்




விண்ணுலகில் செல்வம்
சேமியுங்கள்,
உங்கள்
நற்செயல்களின் பொற்குவியகளால்.
மண்ணக செல்வங்களை
மனதில் குவிக்க வேண்டாம்,
களஞ்சியங்களின் கதவுகளில்
இதயங்களை தொங்கவிட வேண்டாம்.

மண்ணுலக செல்வங்கள்
திருடனால் திட்டமிட்டு
திருடப்படலாம்,
பூச்சிகளால் தானியங்கள்
தகர்க்கப் படலாம்.

விண்ணுலக செல்வங்களை சேகரி
உன் தினசரி வாழ்வின்
நற்செயல்களின் நிழலில்.

செயல்களின் செல்வங்களே
பூச்சிகளால் அரிக்கப்படாமல்
பூஜிக்கப் படும்.


ஒன்றில் இரு, ஒன்றித்திரு



இரு எஜமானர்க்கு
ஒருவன் ஊழியம் செய்யலாகாது.
ஒரு கத்தி
இரு உறைக்கு ஏற்புடையதல்ல.

ஒப்பீட்டுத் தராசுகளால்
ஒருவனோடு உறவாடி,
இன்னொருவன் வெறுப்பை
சத்தமில்லாமல் அது சம்பாதித்துவிடும்.

கடவுளுக்குரிய செயல்களும்
மனிதருக்குரிய செயல்களும்
உன் முன் இருக்கும்
இரண்டு எஜமானர்கள்.
துலங்கிய மனசோடு தேர்ந்தெடு
ஒன்றை மட்டும்.


பறவைகளுக்குப் பட்டினி இல்லை.


உணவுப் போராட்டத்துக்காய்
உடைவாளை உருவாதீர்.
உனக்கானது உனக்களிக்கப்படும்.
கவலைகளை கவிழ்த்துவிட்டு
கடமைகளை நிமிர்த்து.

சிறகுலர்த்திப்
பறக்கும் சிட்டுகள்,
அவை எந்த மருத நிலத்திலும்
நெல்மணி விதைப்பதில்லை,
எந்த அரிவாள் முனைகளையும்
அறுவடைக்காய் செய்வதில்லை,
அவற்றிற்கான உணவு
தவறாமல் வருகிறதே.

பூமியின் மலர்களைப் பாருங்கள்
எந்த
மாடமாளிகையின்
பஞ்சு மெத்தையும்,
எந்த சக்கரவர்த்தியின்
அரியாசன ஆடையும்,
அதன் மென்மை கொண்டதில்லையே.

பூக்களுக்கும் புற்களுக்கும்
புத்தாடை உடுத்தும் பரமன்
மனிதர்கள் மேல்
மகத்துவம் செய்ய மாட்டாரா ?


தீர்ப்புகள் தீர்வுகள் அல்ல



உன் உப்பள உள்ளங்களில்
உறைந்திருக்கின்றன
ஓராயிரம் கறைகள்.

உங்கள் குப்பை மனசை
குழிக்குள் மறைத்துவிட்டு,
பிறரின்
சின்னத் தவறுக்காய்
நீங்கள் நீதிபதியாகாதீர்கள்.
குறையற்ற கரங்கள்
மட்டுமே
கறை கழுவ நீளட்டும்.
.

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

.

நீ இடும் தீர்ப்புக்கள்
நாளை
உன்வாசலில் கத்தியோடு காத்திருக்கும்.
உறைவாள் உருவியவன்
உறைவாளில் சொருகப்படுவான்.
ஆதலினால்
அன்பெனும் மயிலிறகில் மட்டுமே
ஆசனம் செய்யுங்கள்.
.

மலைபோன்ற பிழைகளுக்குள்
பிழைப்பு நடத்திக் கொண்டு
பிறரின் சிறு தவறுக்காய்
சிரச்சேதம் செய்யாதே.
முதலில் உன் பிழை அழி.
பின்பு வந்து பிறர் தவறு திருத்து.

.

பொய்யாணை இடாதே,
உன் தலைமயிரை
நிறம் மாற்றி வளரவைக்க
உனக்குத் திறமையில்லை.

உன் தலைமயிரின்
வளர்ச்சிக்கான கடிவாளமே
உன்னிடம் இல்லையெனும்போது,
எனவே
அகந்தை உன்னுள் இருப்பதில்
அர்த்தமே இல்லை.

.

ஆம், இல்லை,
இரண்டில் ஒன்றைப் பதிலாய் கொள்.
இது தவிர்த்த
மழுப்பல்கள் தீயவன் சொல்.



விழிப்பாய் இருங்கள்



விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்.
தீயவை தீய்க்குச் சொந்தம்,
நல்லவை மட்டுமே
நீதியாசனத்துக்குச் சொந்தம்.
எனவே,
விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்

போலிகளைப் பிரித்தறியும்
பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்களை
உள்ளுக்குள் உலவவிட்டு,
வெள்ளை ஆட்டுத்தோலை
வெளியே உடுத்தியிருப்போரை
அகக்கண் கொண்டு அறியுங்கள்.

உச்சரிப்பதில் அவர்கள்
எச்சரிக்கையாய் இருந்தாலும்,
செயல்களில் சுயமுகம்
தலை நீட்டும்.
வார்த்தைகளை விடுத்து
வாழ்கையிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்.

முட்செடிகளின் முனைகளில்
திராட்சைக் கொடிகள்
காய்ப்பதுமில்லை,
அங்கே யாரும்
அத்திப் பழங்களை கொய்வதுமில்லை.

சிந்தனையின் இமை விலக்கி
பார்வைகளை வடிகட்டி
விழிப்பாய் இருங்கள்.

விழிப்பாய் இருப்பவர்கள்
இழப்பதில்லை.


செயல்களின் வயல்கள் விளையட்டும்

செயல்களால் எனைத் தீண்டாமல்
வேண்டுதலால் மட்டும்
எனைத் தீண்டுவோர்,
விண்ணகப் படி தாண்டார்.
என்
வார்த்தைகளை வாழ்பவன் மட்டுமே
வாழ்வுக்குப் பின்னும் வாழ்வான்.

தீர்வு நாளில் என்னிடம் வந்து
ஆண்டவரே,
உம் பெயரால் இறைவாக்கு உரைத்தேனே,
நோய்களை நிவர்த்தினேனே,
பேய்களை துரத்தினேனே,
என்பார்கள்.

நான் அவர்களிடம்,
அறிவிலிகளே அகன்றுபோங்கள்.
உங்களை நான் அறியேன்,
என்
செயல்களுக்கும் உங்கள் சொல்லுக்கும்
இடையே
நிரப்பிட இயலா
பள்ளத்தாக்கைப் பறித்தீர்கள்.

உங்கள் வாழ்க்கை
ஆற்று நீரில் விழுந்து
தற்கொலை செய்துகொள்ளும்
மணல் வீட்டைப் போன்றதே.
பாறை மீது பதியனிடுவது
செயல்களின் அஸ்திவாரங்களே.

எனவே,
புயலுக்கும் காற்றுக்கும்
பலியாகும் மணல் வீட்டில்
அடித்தளமிட்டு அவதிப்பட வேண்டாம்.
அஸ்திவாரங்களை
பாறைமீது பதியமிடுங்கள்.

வாழ்வியல் செயல்களே
வாழ்வின் பாறைகள் !


எதிரிக்குப் பூ கொடு



கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல் எல்லாம்
வீணர்களின் விவாதங்கள்.
பழிக்குப் பழி
அழிவின் ஆரம்பம்.

யாரேனும் உன்
வலக்கன்னத்தில் அறைந்தால்
அடுத்த கன்னத்தையும்
அடி வாங்க நீட்டு.

தீமையைத் தீமை
தீயிட்டு அளிப்பதில்லை,
குருதியைக் குருதி
கழுவிடல் இயலாது.

புன்னகையின் நீளமே
தீமையின் வேகத்தை
தடைபோடக் கூடும்.

கோப மலைகளாய்
முட்டிக் கொள்வதை விட
சாந்த அலைகளாய்
கட்டிக் கொள்வது சிறந்தது.

உன்
உள் ஆடைக்காய் வழக்கிடுபவனுக்கு
மேலாடையையும் மகிழ்வோடு கொடு.

கேட்பவனுக்கு
கொடு,
வேண்டுவோர்க்கு வழங்கு,
கடன்கேட்போனுக்கு
முகம் கோணாதே.


நேசம் என்பது
நண்பனுக்கு மட்டுமான
நன்கொடையல்ல.
பாசம் என்பதை
பகைவனுக்கும் பகிர்ந்தளி.

நன்மைக்கு நன்மையை
எடைக்கு எடை கொடுப்பது
சாதாரண மனிதனின்
சராசரி நடைமுறைகள்.
நீங்கள்
தீமைக்கும் நன்மையையே
பதிலாய் வழங்கிடுங்கள்.

பகையற்ற பூமியே
திசையெட்டும் நீளட்டும்.


விளம்பரப் பூக்கள் மணப்பதில்லை


பிச்சையிடு,
ஒரு கை தானம் செய்கையில்
மறுகைக்குக் கூட
விளம்பரமிட வேண்டாம்.

புகழுரையின் புழுதித் தூறலுக்காய்
உன்
இதயத்தின் கரைகளை
கறையாக்க வேண்டாம்.

அலைகள் தொலைந்துபோன
ஆழ்கடலாய்.
சத்தங்கள் செத்துப் போன
தொலை மலையாய் இரு.
தானம் தருகையில்.


வெளிவேடம் வேண்டாம்,
நோன்பு கால நோவுகளை
முகத்தில் படர விடாதே,
புத்துணர்ச்சிப் புன்னகை உடுத்து,
நோன்பின் சாம்பல் நிழல்கள்
மறைவாகவே உறையட்டும்


தனிமைச் செபங்கள்
தாழிட்ட அறைக்குள்
நடக்கட்டும்.
அதிகமான வார்த்தைகளல்ல,
ஆழமான உணர்வே
உன்னதமான செபம்.

மனுக்களை மட்டுமே
அவிழ்த்து வைத்து செபிப்பது
மனுமகனுக்குப் பிடித்ததல்ல,
தவழும் குழந்தையின்
தேவைகள்
தந்தைக்குத் தெரியாதா ?

உன் தேவைகளையும்
உனக்கும் முன்
உன்
ஆண்டவர் அறிகிறார்.


தந்தை தந்த செபம்

உணவு தரும் தாய்
அதை
ஊட்டியும் விடுவதுபோல,
வரம் தரும் இறைவன்
அதைக் கேட்கும்
வழிமுறையையும் சொல்கிறார்.

சிந்தை கொள்ளும்
அந்த செபம் இதுவே.

விண்ணக வீட்டின் தந்தையே
உமது பெயர்
தூயதென்று போற்றப்படட்டும்,
உமது அரசு வருக,
விண்ணகத்தில் நிறைவேறும் உம் திருவுளம்
மண்ணகத்திலும் நிறைவேறட்டும்,
தினசரி உணவை எங்களுக்குத் தாரும்.
நாங்கள்
பிறர் பாவம் மன்னிப்பதுபோல்
எம் பாவங்களை மன்னியும்.
சோதனைகளுள் எங்களை
உட்படுத்தாதேயும்,
தீயோனின் கைகளில் எங்களை
சிறைப்படுத்தாதேயும்.
மாட்சிமை என்றும் உமக்கு உரியதே.
ஆமென்


இடறல் வேண்டாம்



இயேசு பேசினார்.

பெண்களிடம் பிறந்தோரில்
திருமுழுக்கு யோவானே பெரியவர்.
ஆயினும்,
விண்ணக வீதியில் இருக்கும்
சின்னஞ் சிறுவனும்,
அவரிலும் பெரியோனே.

இதோ,
இந்தத் தலைமுறை
விளங்கிக் கொள்ள முடியாத
சிக்கலாய் இருக்கிறது,
ஒப்பீடுகளில் ஒப்பவில்லை.

எங்கள் புல்லாங்குழலிசைக்கு
உங்கள் பாதங்கள்
நடனமாடவில்லை,
எங்கள் அழுகைக்காய்
நீங்கள் மாரடிக்கவில்லை எனும்
சிறுவனின் சிணுங்கல் போன்றது
இவர்களின் செய்கை.

யோவான் வந்தார்,
உண்ணா நோன்பு இருந்தார்.
அவரை
பேய் பிடித்த பைத்தியம் என்றனர்.

நான்,
உண்டேன் குடித்தேன்.
போஜனப் பிரியன் என்று
பட்டப் பெயர் சூட்டுகிறீர்கள்.

நீங்கள் முடிவுகளை எழுதிவிட்டு
வீணாய் வாதிடும்
வீணர்கள்,
உங்கள்
வட்டத்துக்கு வெளியே வந்து
ஆராயத் துயாத அறிவிலிகள்.

நீதியின் முற்றங்களிலும்
குற்றம் தேடி நடப்போர்களே,
என்னைக் குறித்து
இடறல் படாதோன் பேறுபெற்றோன்.

அமைதியின் ஆசனம்



இதயத்தில் பாரம்
அழுத்தி அழவைக்கிறதா,
வாருங்கள் என்னிடம்
நான்
சாந்தத்துக்கும் மனசாட்சிக்கும்
சொந்தக்காரன்.

ஆன்மாவின் அமைதி
என்
போதனையின் பகுதி.


உள்ளவனுக்கு கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
இருப்பதும் பறிக்கப்படும்.

புலன்கள் கொள்ளுங்கள்,
கண்டும் காணாமலும்,
கேட்டும் கேட்காமலும்,
உள்ளத்தால் உணராமலும்,
மழுங்கடிக்கப்பட்ட மனசுக்காரர்கள்
வெளிவேடக்காரர்கள்.

நீங்கள் பேறுபெற்றோர்,
உங்களுக்கு உயிர் புலன்கள்
உள்ளன,
உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.



இயேசு எனும் நல்ல மேய்ப்பன்


கேளுங்கள் !

ஆட்டுப்பட்டிக்கு
வாசல் வழியாக வராமல்
குறுக்கு வழியாய் குதிப்பவன்
கொள்ளைக்காரன்.

பின்வாசலின் கதவுடைத்தோ,
கூரையின் தலையுடைத்தோ
நேர் வழியை
நிராகரிப்பவன் அவன்.

வாசல் வழியாய் வருபவனே
ஆயன்.
அவன் குரல்
ஆடுகளின் பரிச்சயக் குரல்
எச்சரிக்கை மணி அவிழ்க்கும்
நம்பிக்கைக் குரல்.

ஆயனின் சுவடுகளில்
ஆடுகள்
பாதுகாப்புப் பயணம் தொடரும்.
அன்னிய காலடிகளிலோ
அவலக் குரலையே அவிழ்க்கும்.

நானே நல்ல மேய்ப்பன்.
மீட்பின் முற்றமும்
வாழ்வின் வாசலும் நானே.

பழுதான போதனைகளிலும்,
எழுதாத சாதனைகளிலும்
விழவேண்டாம்.

வேலையாள்
ஓநாய்களின் கூட்டம் கண்டால்
ஆடுகளை விட்டுவிட்டு
உயிர்காக்க ஓடுவான்.
ஆயனோ அகலான்.

கிளைகள் வாடிப் போனாலும்
ஓடிப் போவதில்லை வேர்.
ஆழத்தில் அமிழ்ந்து
ஆடுகளைத் தாங்கும் ஆயனைப் போல்.

நல்ல ஆயன் நானே.
என் வார்த்தைகளைக் கேட்டு
வார்த்தைகளை வாழ்பவன்
செத்த பின்னும் த்தியமாவான்.



கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியும் வரை
ஒற்றை மணி தான்.
மடிந்த பின்போ
கற்றை மணியாய் உருமாறும்.

இரண்டாம் ஜாமமும்
இருண்டபின்,
பூமியின் பாத்திரங்களில்
சூரிய ஒளி ஏது ?

ஒளி இன்னும் சிறிது நேரமே
ஒளிரும்,
இருட்டும் முன்
பாதை தேர்ந்தெடுப்பவன்
புத்திசாலி.


இயேசு எனும் திராட்சைக் கொடி


நான்
திராட்சைக் கொடி.
தந்தை பயிரிடும் பரமன்.
நீங்கள் என் கிளைகள்.

கனிதராக் கிளைகள்
தறிக்கப்பட்டு
விறகாகும்.
கனிதரும் கிளைகள்
கழிக்கப்பட்டு
அதிகமாய் கனிதரும்.

கொடியில் இல்லாத கிளைகள்
தானே
கனிதரல் இயலாது.
வேர்களில்லா கொடிகளுக்கு
கிளைகளிலேது கலகலப்பு.

என்னில் நிலைத்திருங்கள்
இல்லையேல்
சருகாகி எரிவீர்கள்.

நண்பனுக்காய்
உயிர்தருவதே
உயர்வான நட்பு.
நீங்கள் என் நண்பர்கள்.

வானக தந்தையின்
விருப்ப உரைக்கு மறுப்புரை
எழுதா மக்களே
என் தாயும், சகோதரரும்.

வாழ்வியல் பாடம்
ஒரு வரிதான்
‘அனைவரிடமும் அன்பு செய்யுங்கள்’
உன்னை நேசிப்பதுபோல்.

33 மணிச் செபமாலை

சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய்நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமைபிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம்பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாதகிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்துமூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தைபக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசைகட்டளை பண்ணியருளும் சுவாமி.

விசுவாச மந்திரம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவைகாணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.

சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும்விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்றுசெனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங்கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர்.பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.

மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார்.பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும்நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில்அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார்.

வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்குஎழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும்மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரதுஅரசுக்கு முடிவிராது.


பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர்அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும்சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின்வாயிலாக பேசியவர் இவரே.


ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன்.பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.

ஆமென்.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர்சுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்றுபுண்ணியங்களைக் கேட்கிறது.

மெய்யான சர்வேசுரனாயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவவிசுவாசமென்கிற புண்ணியமுண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான மனிதராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவநம்பிக்கையென்கிற புண்ணியமுண்டாகி வளரும்படிக்கு அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான இரட்சகராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவசிநேகமென்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி அநுக்கிரகம்பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

பிதாவுக்கும், சுதனுக்கும்...

பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்கு கபிரியேலென்கிறசம்மனசானவர் மங்கள வார்த்தை சொன்ன அருள் நிறை மந்திரம் சொல்லுகிறது.

1 அருள் நிறைந்த...


1-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! தேவரீர் அருளிச் செய்த திவ்வியகற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே.அவர்களையெல்லாம் தேவரீர் பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள்சுமுத்திரையாய் நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும்பரம்பவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில்இளைப்பாற்றியடைந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளவும் கிருபைபண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


பரலோகத்துக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


2-வது மன்றாட்டு:


சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய்தந்திரங்களினால் இழுக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறப்படியினாலே உலகம்,பசாசு, சரீரமாகிய ஞான சத்துருக்களை ஜெயித்து நாங்கள் பாவ வழிபோகாமலும், பஞ்சேந்திரியங்களுடைய அலைக்கழிப்புக்கு இனங்காமலும்ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிபாட்டில் சுமுத்திரையாய் நடக்கவும்கிருபை பண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


பூலோகத்துக்கு ஆண்டவளாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


3-வது மன்றாட்டு:


சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் பிரதான புண்ணியங்களாகியவிசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞானஒளி கொண்டு பேரின்பத்தின் பாதையை பிடிக்கவும் உலகத்தில் உத்யோகத்தொழில்களை செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்தியஇராச்சியத்தையும் மாத்திரம் தாவி நிற்கவும் எல்லா கிரிகைகளையும்உமக்காகவே செய்யவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.


10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.


விடியற்காலத்தின் நட்சத்திரமாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே,பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும்உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன்சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மைமன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


பிரார்த்திக்கக்கடவோம்.

அவதரித்த தேவனுமாய், கிருபை நிறைந்த கர்த்தருமாய், மதுரமுள்ளஇரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே! தேவரீர் இவ்வுலகத்தில் வாசம்பண்ணின முப்பத்து மூன்று வருஷ காலம் மனிதர்களுக்கு திவ்வியமாதிரிகையாக செய்து வந்த சுகிர்த புண்ணியங்களை அடியோர்கள்அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக்கத்தக்கதாக, உம்முடைய திருஇரத்தமெல்லாம் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள்மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும்தரிசித்துச் சிநேகித்து ஸ்துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி!


ஆமென்.

Monday, June 18, 2018

விசுவாசமே சுவாசம்


நம்பிக்கையை குறித்து
இயேசு
இடைவிடாமல் போதித்தார்.

நம்பிக்கையே
செயல்களின் மையம்.

விசுவாசத்தோடு கட்டளையிட்டால்
மலையும் உருண்டு
கடலில் விழும்.
மரமும் பெயர்ந்து
இடம் மாறி நிற்கும்.

நம்புங்கள்
அதுவே வாழ்வுக்கான
நெம்புகோல் என்பதே
இறைமகன் போதனை.


தொடர் முயற்சியின்
தோள்களுக்கே
மரியாதையின் மாலைகள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்கள்.

மீட்டாமல்
வீணையில் சுரமில்லை.
தவமில்லாமல்
தரப்படும் வரமுமில்லை.

உங்கள் செல்லப்பிள்ளை
பசி தீர்க்க,
கற்கள் தரும் தகப்பனில்லை.
மீன் கேட்டால்
பாம்பு தரும் பெற்றோருமில்லை.
உன் தந்தையே
இப்படியென்றால்
உலகத் தந்தை எப்படி இருப்பார்
என்பதை உணர்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் பிராத்தனை

சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே கிருபையாயிரும். 2

சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதுவைப் பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரமண்டல திருவின் திருப்பெட்டியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய்மையில் லீலிமலரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலருடைய கொழுந்தான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆச்சரியங்களைச் செய்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

காணமற்போனவைகளைக் காட்டிக்கொடுக்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தரித்திரருக்கு இரத்தினமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புண்ணிய மென்கிற ஞான வெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகம் என்கிற அபத்தைப் புறக்கணித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நன்நாக்கழியாத நற்தவத்தினரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புதுமைகளினால் பிரபல்யியமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையின் தெளிவான தீபமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்சவிருந்து தந்தருள வேண்டுகிறோம்.


இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, பதுவைப் பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி! உமது ஸ்துதியரும் முத்திப்பேறு பெற்றவருமான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது அர்ச்சியசிஷ்ட பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத்தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும்.


ஆமென்.

தேவ ஸ்துதிகள்.


எல்லாம் வல்ல சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக. அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுகிறீஸ்து நாதர் ஸ்துதிக்கப்படுவாராக, சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக, அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக,

அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக, பீடத்தில், மிகவும் பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக.

சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக. அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக.

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக.

தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி ஸ்துதிக்கப்படுவாராக. தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் சதாகாலமும் ஸ்துதிக்கப்படுவாராக.


ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து, எப்போதும் பரிசுத்த கன்னியாஸ்திரியுமாய், நமது ஆண்டவளுமாய் கொண்டாடப் பட்டவளுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக் கடவது.


தேவப் பிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி, எங்களைக் காக்கவும், ஆளவும் கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம்.




ஆமென்