Monday, October 1, 2018

திருவிவிலியம் பற்றி...


‘பைபிள்’ என்ற சொல் ‘பிப்ளியோன்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ‘பிப்ளியோன்’ என்றால் ‘நூல்’ என்று பொருள்.
உலகிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
தமிழ் மொழியிலும் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
329 மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
633 மொழிகளில் புதிய ஏற்பாடு மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
46 இந்திய மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில்...

மொத்த புத்தகங்கள் 73 (ப.ஏ.46 + பு.ஏ.27)
மொத்த அதிகாரங்கள் 1334
மொத்த வசனங்கள் 35487
மிகப் பெரிய அதிகாரம் திருப்பாடல் 119
மிகச் சிறிய அதிகாரம் திருப்பாடல் 117
மிக நீண்ட வசனம் எஸ்தர் 8: 12
மிக குறுகிய வசனம் யோவான் 11: 35

மாதாவின் வணக்க மாதம் (October Special)


மாதாவின் வணக்க மாதம் (October Special)

முன்னுரை


இறைவன் படைத்த எழில் மிக்க இவ்வுலகம் அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்தது. அனைத்தையும் ஆண்டு, அனுபவித்து, மகிழ, இறைவன் மனிதனையும் தன் சாயலாகப் படைத்தார். படைப்பில் பழுதில்லை. ஆனால் படைத்தவனின் கட்டளையை அவன் மீறிய பொழுது, மனித குலத்திற்கே சென்ம பாவத்தை சேர்த்து வைத்துவிட்டான். பாவச் சேற்றிலே மூழ்கிக் கொண்டிருந்த தன் மக்களைக் காக்க தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்ப இறைவன் திருவுளம் கொண்டார்.யார் வழியாக? தனது எல்லாப் படைப்புகளுக்கும் மேலாக உயர்த்தி மகிமைப்படுத்திய ஒரே பெண்ணான கன்னி மரியா வழியாக. ஆம்.


தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகும் முன்னே தன் மகனை ஈன்றெடுக்கும் பாக்கியவதியாக இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவள்தான் நம் அன்னை மரியா. சிலுவை மரத்தின் அடியில் இறைமகன் இயேசுவால் நம் தாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டவள். இயேசுவின் தாய் நம் தாய் நமக்காக தம் மகனிடம் பரிந்து பேசும் இரக்கம் மிகுந்த தாய். பாவக் கட்டுகளிலிருநது நம்மை விடுவிக்க அந்த அன்புத் தாய் நம்மிடம் வேண்டுவது என்ன தெரியுமா? பூ மாலை அல்ல பாமலை அல்ல. கிபி 1214 ஆம் ஆண்டு புனித தோமினிக் வழியாக அன்னை மரியா திருச்சபைக்கு வழங்கிய மாலைதான் செபமாலை. படிப்பறியா பாமரமக்களை கல்நெஞ்சுக்காரர்களை முரடர்களை மூடர்களை புனிதர்களாக்கியது இச்செபமாலை. பாத்திமா நகரிலே காட்சியளித்த அன்னை “நானே செபமாலை மாதா. ” என்று கூறி செபிக்கும் முறையை போதித்தார். ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் செபமாலை மாதாவின் வணக்க மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.


தீமையான பேச்சு – செயல் - எண்ணம் இவற்றிலிருந்து விடுதலை பெற இயற்கைச் சீற்றங்களிலிருந்து உயிர்களை காக்க பயணங்களில் விபத்துகள் ஏற்படாதிருக்க மரண பயத்திலிருந்து விடுவிக்க மோட்சத்தை நோக்கி நம் பயணம் தொடர நம் குடும்பத்தில் நம் நாட்டில் நாம் வாழும் உலகில் அமைதியும் சமாதனமும் மகிழ்ச்சியும் நின்று நிலவ அன்னையின் பக்தி வளர தினமும் தனியாக குடும்பமாக குழுவாக செபிப்போம்.


செபமாலையில் கூறப்படும் மறையுண்மைகள் இயேசு இவ்வுலகில் பிறந்தது முதல் மரித்து உயிர்த்தது வரை நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்வன. சிந்தனையைச் சிதறவிடாது ஒவ்வொரு மறையுண்மைகளையும் தியானித்து 53 மணி செபமாலையை அன்னையின் திருவடிக்குச் சூட்டி ராக்கினியின் ஆசிரைப் பெறுவோம்.


கூறுவதற்கு முன்:

கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமான விசுவாசப்பிரமாணம்: பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ……
கர்த்தர் கற்பித்த செபம்: பரலோகத்தில் இருக்கின்ற. . . .
அருள் நிறைந்த மரியே: மூன்று முறை
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.

மகிழ்ச்சியின் பேருண்மைகள்


(திங்கள் - சனிக்கிழமைகளில்)

மண்ணகத்தை விண்ணகமாக்க இறைமகன் இயேசு இவ்வுலகிலே அவதரித்து நம்மை விண்ணரசுக்குப் பாத்திரமாக்க விழைந்தது மகிழ்ச்சி நிறைந்த செயல் அல்லவா? அந்த உண்மைகளை இப்போது தியானிப்போம்.


முதலாவது:- கபிரியேல் அதிதூதர் கன்னிமரியாவிற்கு தூதுரைத்தலை தியனிப்போம்..

தன் அன்பு மகனை பெற்றெடுக்கும் பேறு பெற்றவளாக அன்னை மரியை தேர்ந்தெடுத்த இறைவன் அவரது விருப்பத்தை அறிய கபிரியேல் தூதரை மரியாவிடம் அனுப்புகிறார். நசரேத்து ஊரில் எளிய இனிய இல்லத்திலே வாழ்ந்து கொண்டிருந்த அன்னையிடம் இறைதூதர், “அருள் நிறைந்தவளே! வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே” என்று கூற அம்மொழியைக் கேட்ட அன்னை கலங்குகிறாள். அடுத்து தூதர் சொன்ன வார்த்தை அவளை நிலைகுலையச் செய்தது. ‘மூவுலகம் ஆளும் தேவன் உமது உதரத்தில் அவதரித்து பிறக்கப் போகிறார்’ என்ற செய்தி ‘இது எவ்வாறு ஆகும் நான் கணவனை அறியாதவள் ஆயிற்றே’ என்று வினாவ தூதர் ‘பரிசுத்த ஆவியாரால் இது நிகழும் உமது உறவினறான எலிசபெத்திற்கு இது ஆறாம் மாதம் கடவுளால் ஆகாதது எதுவும் இல்லை? என்று கூற ‘இதோ ஆண்டவரின் அடிமை உமது வர்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்’ என்று சிரம் தாழ்த்தி சம்மதித்தாள.


புனித மாதவே! இறைசித்தத்தை உணர்ந்து உம்மையே அர்ப்பணித்து தாழ்ச்சியின் பெருமையை உணர்த்தினீர். உம்மைப் போல தாழ்ச்சி என்னும் ஆடையை அணிந்து இறை சித்தப்படி எம் வாழ்க்கையை நடத்திட இந்த பத்து மணி மாலையை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 
 
ஓ! என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும். (பாத்திமா செபம்)

இரண்டாவது :- கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்ததை தியானிப்போம்


கபிரியேல் தூதர் மூலமாக தனது வயது முதிர்ந்த உறவினளான எலிசபெத்தம்மாள் கருவற்று இருப்பதை அறிந்த மரியாவின் மனம் அவரைக் கண்டு உதவ வேண்டும் என தவிக்கிறது. அதனால் காடு மலை பொருட்படுத்தாது பல நாள்கள் நடந்த செல்கின்றாள். உன் வயிற்றில் வளரும் தெய்வத் திருமகன் அவருக்குச் சுமையாக தெரியவில்லை. ஏன் தெரியுமா? அது அவருக்கு ஒரு சுகமான சுமை அல்லவா?


கன்னிமரியா, எலிசபெத்தின் இல்லத்தை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது அவர் பெண்களுக்குள் ஆசிபெற்றவள் நீர் எனக் கூறி அன்போடு தழுவிக் கொள்கிறாள் அன்னை மரியா மூன்று மாதம் தங்கி வயது முதிர்ந்த அவருக்கு பல உதவி செய்து மகிழ்கிறார். தரிசியை பெற இருக்கும் எலிசபெத்தும் தேவகுமாரனை பெற இருக்கும் அன்னை மரியும் இறைவனின் மகிமையைப் புகழ்ந்து போற்றுகின்றனர்.


நாழும் உதவி என்று நம்மை நாடி வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்கது துயர்களை முன்வருவோம். ஆதற்கேற்ற உள்ள உறுதி வேண்டி இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . .

மூன்றாவது : இயேசுவின் பிறப்பினை குறித்து தியானிப்போம்


கன்னி மரியாவிற்கு பேறுகாலம் நெருங்கிவிட்டது. அகஸ்து சீசர் அரசனின் கட்டளைப்படி மக்கள் தொகை கணக்கிற்காக தங்களது பெயரை பதிவு செய்ய சூசையப்பரும் அன்னை மரியாவும் ஊருக்கு சென்றனர். அவர்கள் தங்குவதற்கு சத்திரத்தில் இடமில்லை. பேறுகால வேதனையால் துடித்த மரியாவைக் கண்டு சூசையப்பர் துடிதுடித்தார். மண்ணுகைப் படைத்த மாபரன் பிறப்பிற்கு இம்மண்ணுலகில் ஒர் இடமில்லை. அன்னையின் வேதனையை கண்ட ஒருவர் தன் வீட்டிலுள்ள மாடடையும் குடிலையும் காட்டினார். வானவர் கீதம் பாட வையகமும் வானகமும் மகிழ்ச்சி பொங்க ஆடுகளும் மாடுகளும் அன்புடன் தாலட்ட கொட்டும் பனிக்காலத்திலே இயேசு பாலகன் அன்னை மரியாவிடம் அவதரித்தார். ஆட்டிடையர் ஆடிப்பாடி மகிழ விண்மின் துணையோடு ஞானிகள் வந்து ஆராதிக்க இயேசு பாலன் இம்மண்ணில் மலர்ந்தார். இயேசு என்று அவருக்கு பெயரிட்டு மகிழ்ந்தனர்.


எங்கள் மீட்பிற்காக தேவகுமாரனை உம்திருவயிற்றில் சுமர்ந்து எமக்களித்த அன்னையே! உம் திருவடிக்கு இந்த பத்து மணிகளை சமர்ப்பிகின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . 
 .
நான்காவது: இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தலை தியானிப்போம்



மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற நாள் வந்தபொழுது அன்னை மரியும் சூசையும் குழந்iயை எடுத்துக்கொண்ட கோவிலுக்கு வந்து சடங்குகளை நிறைவேற்றி ஆண்டவருக்கு குழந்தையை அர்ப்பணித்தனர். அப்பொழுது ஆண்டவரின் வருகைக்காக கத்திருந்த நேர்மையாளரான சிமியோன் என்பவர் அத்தெய்வக் குழந்தையே தாம் எதிர்பார்த்த மெசியா என்பதை உணர்ந்து அவரை போற்றி புகழ்ந்தார். அவர் கூரிய தீர்க்கதரிசன வார்த்தைகளை மரியா சிந்தையில் இருத்தி தியானித்தார்.


தாயே! தயை நிறைந்தவளே! இறை சித்தத்தை உணர்ந்த உண்மையும் உமது வாழ்வையும் உடக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து இயேசு பாலனை வளர்க்க ஆயத்தமானீர். எங்கள் வாழ்விலும் எமக்குள்ள அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ வரம் வேண்டி உலகில் உள்ள அனைத்து குழந்தைகளின் நல்வாழ்வுக்காக இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 
 
ஐந்தாவது: காணமல் போன இயேசுவை கோவிலில் கண்டடைந்ததை தியானிப்போம்


நாகரிகம் என்ற போர்வையில் தம்மை மறைத்துக்கொண்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தில் உத்தமர்களாக ஒழுக்கமுள்ளவர்களாக குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். அன்று நாசரேத்து என்ற குக்கிரமத்தில் எளிமையிலும் ஏழ்மையிலும் ஒரு தச்சனின் மகனாக ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராய் இயேசு வளர்க்கப்பட்டார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய உதவிகளை முகமலர்ச்சியோடு செய்தார். மற்ற நேரங்களில் மறைநூல்களைப் படிப்பதிலும் இறைவனோடு ஒன்றிருப்பதிலும் காலத்தை செலவிட்டார்.


அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது பாஸ்கா விழாவிற்காக பொற்றோருடன் எருசலேம் சென்றார். விழா முடிந்தபின் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இதை அறியாத பெற்றோர் அவர் பயணிகள் கூட்டத்தில் தங்கியிருப்பார் என எண்ணிவிட்டனர். ஒரு நாள் பயணத்திற்கு பிறகு அவரை காணததால் பரிதவித்து கண்ணீர் வீட்டு கதறி அழுதுகொண்டே மீண்டும் எருசலேம் வந்து மூன்றாம் நாள் கோவிலில் கண்டு ஆறுதல் அடைந்தனர். போதகர் நடுவிலே அமர்ந்து உரையாடியதையும் அவரது தெளிந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு வியந்து நின்றனர். மகனை நோக்கி 'ஏன் இவ்வாறு செய்தாய்?"


நாங்கள் தவித்து போய் விட்டோம் என்று வினாவ இயேசு 'என் தந்தையின் அலுவலை நான் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்க அன்னை மரியா அவ்வார்தைகளை தன் மனதில் இருத்தி சிந்தித்தாள். முப்பது ஆண்டுகள் இறைமகன் இயேசு மறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்.


அன்புத் தாயே! கண்டதே சாட்சியாய் கொண்டதே கோலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்காய் உம்மை வேண்டுகிறோம். நன்மை தீமைகளை அறியும் அறிவையும் ஆற்றலையும் தெய்வ பக்தியையும் அவர்களுக்கு வழங்க வேண்டி இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . .

ஒளியின் பேருண்மைகள்
(வியாழக்கிழமை)


முப்பது ஆண்டுகள் நாசரேத்தில் அன்னையின் அரவணைப்பிலும் புனித சூசையின் பாதுகாவலிலும் மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு அடுத்த மூன்றாண்டுகள் தான் யார் என்பதை உலகிற்கு உணர்த்த ஒளி விளக்காய் காலடி வைக்கின்றார் கடலில் மறைந்திருந்த முத்து மலையில் மறைந்திருந்த மாணிக்கம் மண்ணில் மறைந்திருந்த மாசற்ற தங்கம் வெளியே சுடர் விட்டு பிரகாசிக்கப் போகிறது. அந்த நிகழ்ச்சிகள்தான் ஒளியின் பேருண்மைகள்.


முதலாவது :- இயேசு யோர்தானில் திருமுழுக்குப் பெறுதல்


செக்கரியா எலிசபெத் இருவரின் அன்பு மகன் யோவான். தீர்க்கதரிசியாக பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார். பாவச்சேற்றில் மூழ்கிக் கொண்டிருந்த மக்களை நோக்கி பாவமன்னிப்பு பெற மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று அதிகாரத்துடன் பறைசாற்றிக் கொண்டிருந்தார். பாவமன்னிப்பிற்கான் வழிகளைக் கூறி மனம்மாறி வந்தோர்க்கு திருமுழுக்குக் கொடுத்து வந்தார். இவர்தான் மெசியாவாக இருப்பாரோ?என மக்கள் ஐயமுற்ற வேளையில் நான் மெசியா இல்லை தூய ஆவியாரால் உங்களுக்குத் திருமுழுக்குக்கொடுக்க என்னை விட வலிமைமிக்கவர் வருகிறார். என்று யோவான் கூறிக்கொண்டிருந்த வேளையில் இயேசு யோர்தான் நதியில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அன்று கருவிலே சந்தித்தவர்கள் இன்று உருவிலே சந்திக்கின்றனர். அப்பொழுது வானம் திறக்க தூய ஆவியார் புறா வடிவில் அவர் மீது இறங்க என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானில் ஒரு குரல் ஒலித்தது. பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு வெற்றி வீரராக வெளிவருகின்றார் இயேசு.


அன்பு அன்னையே பெயரளவில் நாங்கள் கிறிஸ்துவராக வாழாமல் மனம் மாறிய உண்மை கிறிஸ்தவர்களாய் இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடி இந்த பத்து மணியை உமக்குச் சமர்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

இரண்டாவது:- கானாவூர் திருமணத்தில் இயேசுவின் முதல் புதுமை



இயேசுவின் மகிமையும் மாட்சியும் வெளிஉலகிற்கு தெரியும் நேரம் வந்தது. அன்று கானா ஊரில் ஒரு திருமணம் அன்னை மரியும் இயேசும் அவரது சீடர்களும் சென்றிருந்தனர். விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோக மணவீட்டார் மனம் வருந்த்கூடாது என்பதற்காக அன்னை மரியா இயேசுவிடம் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது எனக்கூறி அவர் அனுமதி பெறாமலேயே பணியாளரிடம் அவர் கூறுவதை எல்லாம் செய்யுங்கள் என்றார். அன்னைக்குத் தெரியும் தனது மகனின் வல்லமை. இயேசு பணியாளரிடம் அங்கிருந்த ஆறு கல்தொட்டிகளிலும் தண்ணீரை நிரப்பக்கூறினார். அவரது கருணையினால் தண்ணீர் திராட்சை இரசமாக மாற இரசத்தை பருகியவர்கள் அதன் சுவையை ருசித்து அதிசயித்து மகிழ்ந்தனர். இதுவே அவர் செய்த முதல் புதுமை. அன்னை மரியாவின் பரிந்துரையை தட்டாமல் தாயின் அன்பிற்கு செவிமடுத்த இயேசுவின் மகிமை.


இயேசு செய்த புதுமைகள் அன்றிலிருந்து தொடர்ந்தன. இறந்தவரை உயிர்ப்பித்தல் நோயுற்றோரை குணப்படுத்துதல் குருடருக்குப் பார்வை அளித்தல் என இயேசு செய்த அற்புதங்கள் எண்ணிலடங்கா.


தேவதாயே அன்று உமது பரிந்துரையை ஏற்று தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய உம் அன்புத் திருமகளிடம் எங்களது வேண்டுதல்களை வைத்து எங்களது குறைகளைக் களைய வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணிகளை உமக்குச் சமர்ப்பிக்கின்றோம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

மூன்றாவது:- இயேசு இறையரசை அறிவித்து மனம்மாற அழைத்தலை தியானிப்போம்



இயேசு செய்த புதுமைகளைக் கண்ட மக்கள் அவர் செல்லும் இடம் எல்லாம் திரள்திரளாக ஒன்று கூடினர். இயேசு புதுமைகளோடு இறையசைப் போதிக்கவும் தொடங்கினார். அவரது போதனைகளைக் கேட்டவர்கள் படிப்பறிவில்லா சாதாரண பாமர மக்கள் மீன்பிடிப்பவர்கள் அவர்கள் புரிந்து கொள்ளும்படி உவமைகள் வாயிலாக இறையரசை பரப்பினார். மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கினார். விதைப்பவர் உவமை களைகளின் உவமை கடுகு விதை புளிப்பு மாவு புதையல் முத்து வலை உவமைகளின் வழியாக நிலையற்ற உலக வாழ்வையும் நிலையான விண்ணக வாழ்வையும் விளக்கினார். அவர் ஆற்றிய மலைப்பொழிவு துன்பத்தால் வறுமையால் நோயால் தனிமையால் வாடும் காயமுற்ற உள்ளங்களுக்கு அருமருந்தாகும்.


புனித மாதாவே! உலகை மீட்க வந்த உம் திருமகன் நரகத்தில் நாங்கள் விழாது மோட்சத்திற்கு செல்லும் வழிகளை எங்களுக்கு திருமறை வழியாக உணர்த்தியுள்ளார். அவர் வழிநடப்பதற்குரிய மனத்திடனை அளிக்குமாறு வேண்டி இந்த பத்து மணிகளை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

நான்காவது: இயேசுவின் உருமாற்றத்தை தியானிப்போம்



புதுமைகள் பல புரிந்து ஒவ்வொரு ஊரகச்சென்று இறையரசை பரப்பிவந்த இயேசு தான் யார் என்பதை தன் சீடர்களுக்குக் காட்ட விரும்பி பேதுரு யாக்கோபு யோவான் ஆகியோரை உயர்ந்த மலைக்கு அழைத்து சென்று அங்கே அவர்கள் முன் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளி வீசியது. மோசேயும் எலியாவும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர். என் அன்பார்ந்த மகன் இவரே என்ற குரல் வானில் ஒலித்தது. சீடர்கள் மூவரும் முகங்குப்புற விழுந்து வணங்கி எழும் போது இயேசுவைத் தவிரவேறு எவரையும் அவர்கள் காணவில்லை. இயேசு இந்நிகழ்ச்சியை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். சீடர்கள் அவர் இறைவனின் திருமகன் என்பதை இன்னும் புரிந்துகொள்ளாமலே இருந்தார்கள்.


கருணைக்கடலாம் எங்கள் அன்புத் தாயே! ஒளியாய் உணர்வாய் உயிராய் இவ்வுலகிலே விளங்கிய உம் அன்புத்திருமகன் தான் வாழ்ந்த நாளெல்லாம் நிகழ்த்திய அற்புதங்கள் சிந்தனைக்கு எட்டாத அதிசயங்கள். அவரது அருஞ்செயல்களை தியானித்து இந்த பத்து மணிகளை உமது மலர்ப்பாதம் சமர்ப்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

ஐந்தாவது: இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்துதல்


தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற கல்வாரியில் நம் மீட்பிற்காக தன் உடலையும் இரத்தத்தையும் அளிக்க இருப்பதன் முன்னடையாளமாக இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார். பாஸ்கா திருநாளில் பெரிய வியாழனன்று இரவு தன் சீடர்களோடு பந்தியமர்ந்து உணவருந்தும் போது இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறி பிட்டு தன் சீடர்களுக்கு கொடுத்து “அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் இது என் உடல்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூற ‘இதில் உள்ள இரசத்தை அனைவரும் பருகுங்கள் ஏனெனில் இது என் உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவமன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம்” என்றார். அப்ப இரச வடிவில் நற்கருணை நாதர் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் பிரசன்னமாகிறார்.


தேவத்தாயே! எமக்காக தன்னையே அர்ப்பணித்த உம் திருமகனின் அன்பிற்கு ஈடாக எதை நாங்கள் தருவோம் மாசற்றவர்களாய் திவ்வியநாதரை ஒவ்வொரு நாளும் பக்தியுடன் பெறக்கூடிய துய உள்ளத்தை எங்களுக்கு அருள வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணியை உம் பாதம் படைக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

துயர் பேருண்மைகள்
(செவ்வாய்-வெள்ளி)



தனது தந்தையின் திட்டத்தை, சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகிற்கு வந்த இயேசு, போதனைகள் பல புரிந்தும், புதுமைகள் பல நிகழ்த்தியும் அவரை யார் என்று அறியாத மக்கள் கூட்டம் ஓசன்னா பாடி அவரை புகழ்ந்த கூட்டம் வஞ்சனையாளரான பரிசேயரால் பொருளாசைக்கு அடிப்பணிந்து திசை மாறுகிறது. அவரைக் கொல்ல வழி தேடுகிறது. பிலாத்துவின் தீர்ப்பிற்கு ஆளாகியது முதல் சிலுவைமரத்தில் உயிர்நீத்ததுவரை அவர், உடலாலும் உள்ளத்தாலும் பட்ட கொடிய வேதனைகளை விளக்குவதுதான் துயரப் பேருண்மைகள். அவரது துயரங்களோடு நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெறுவோம்.


முதலாவது: இயேசு கெத்சமனியில் இரத்தம் வியர்த்தலை தியானிப்போம்.

இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து இரவு உணவு உண்டப்பின் ஒலிவ மலையில் கெதசமனி தோட்டத்திற்க்கு தம் சீடர்களோடு சென்றார். சீடர்களிடம் 'விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்' என்று கூறி, தனியாக செபிக்க சென்றார். முழந்தாள்படியிட்டு 'தந்தையே உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படியல்ல உம் விருப்பப்படியே ஆகட்டும் என வேண்டினார். தான் படப்போகும் பாடுகளை என்னி மனம் கலங்கினார். அவரது வியர்வை பெரும் இரத்தத்துளிகளாக நிலத்தில் விழுந்தது.

அப்போது பெரும் மக்கள் கூட்டம் அவரை நெருங்கி வந்தது. அவரது சீடர்களில் ஒருவரான 'யூதாஸ்', அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுக்க போர் சேவகர்கள் கள்ளவனைப் போல் அவரை கைது செய்து தலைமை குருக்களிடம் இழுத்துச் சென்றனர்.


வியாகுலத் தாயே! உமது திருமகனின் பாடுகளைக்கண்டு எவ்வாறெல்லாம் துடித்திருப்பாய். இவ்வுலகம், துன்பம், துயரம், தோல்வி, ஏமாற்றம் நிறைந்தது. இவைகளினால் நாங்கள் துயரப்படும்பொழுது உம் திருமகனின் பாடுகளில் தைரியம் பெற்று பொறுமையோடு அவற்றை தாங்கும் மனப்பக்குவத்தை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடி, இப்பத்து மணியை ஒப்புக்கொடுக்கிறோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

இரண்டாவது: இயேசு கசையால் அடிக்கப்பட்டது குறித்து தியானிப்போம்.



உலகை தீர்ப்பீட வந்த மானிட மகன் கயவனாக தீர்பிற்கு ஆளாகினார். தலைமை குரு,கைப்பாஸ், ஏரோது, பிலாத்து என்று ஒவ்வொரு கொடியவர்களிடமும் இரவு முழுவதும் அலைக்கழைக்கப்படுகிறார். இறுதியில் பிலாத்துவிடம் தீர்ப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறார். இயேசு குற்றமற்றவர, நீதிமான் என பிலாத்து அறிந்திருந்தும் யூதர்களின் மனதை மாற்ற, அவரை கசையால் அடிக்க கூறினார். அவர்களின் கல்லான இதயம் கரையவே இல்லை. சாட்டையின் நுனியில் இரும்புக் குண்டுகள். அடிக்கவரும் சேவகர்களைக் கண்டு இயேசுவின் உடல் நடுங்குகிறது. சேவகர்கள் அவரை கல்தூணில் கட்டி கசையால் அடிக்கின்றனர். தோல் உரிகிறது, இத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது, சதை துண்டுத்துண்டாய் சிதருகிறது. கசைப்படாத இடமே இல்லை, கண்ணீர் பெருக நெருப்பில் இட்ட புழு பேல் துடிக்கிறார். யாருக்காக உடல் இச்சைக்காக, மனிதர் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக.


வியாகுல அன்னையே!மாசற்ற உம் திருமகனின் உடல் சிதைந்து சின்னாப்பின்னமாகி இருப்பதை கண்டு, நீரும் கதறி அழுதிருப்பீர். காமுகர்களின் உடல் இன்பத்திற்காக, இன்று எண்ணற்ற சிறுவர் சிறுமியர் பலியாகின்றனர். இயேசுவின் இந்த துன்பங்களைக் கண்டாவது, இது போன்ற கொடூர நீகழ்ச்சிகள் நடக்காதிருக்க வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணியை ஒப்புக்கொடுக்கிறோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

முன்றாவது: இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியது குறித்து தியானிப்போம்.


மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கொடிய சேவகர். இயேசுவை கற்றுணிலே கட்டி சிதைத்தது போததென்று அடுத்த வேதனைக்கு அவரை ஆட்படுத்துகின்றனர். கரடுமுரடான கலலிலே அமரவைத்து சிவப்புத் துணியை அவர் தோள் மேல் போர்த்தி மூங்கில் தண்டை கையில் கொடுத்து முள்ளால் முடிபுனைந்து அவர் தலையில் வைத்து அழுத்துகின்றனர். துலை நெற்றி அனைத்தும் காயம் 53 முட்களும் அவர் சிரசில் பாய இரத்தம் பெருகி கண்களை மறைத்து உடல் முழுவதும் நனைந்து பாதத்தை அடைகிறது. அரக்கர்கள் கூட்டம் "யூதர்களின் ராஜவே வாழ்க" என கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். இரும்பு தடியால் அடித்து காறி உமிழ்ந்து கன்னத்தில் அறைந்து ஏளன சொற்கள் கூறி வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சி மகிழ்கின்றனர் ஆணவகாரர்கள


அன்னை மரியே! இக்கொடுமையெல்லாம் எவ்வாறு தாங்கினீர்? அம்மா! எங்களது கடுசொற்களால் பழிச் சொற்களால் எத்தனையோ உள்ளங்களை காயப்படுத்தியுள்ளோம். எங்களது இந்த இழிவான செயல் இயேசுவின் தலையை மட்டுமல்ல அவரது இதயத்தையும் முள்ளாக கிழிக்கும் என்பதை நாங்கள் உணர்வதில்லை. சொல்லால் நாங்கள் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பத்து மணியை உமது திருவடி சமர்ப்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . . 

நான்காவது: இயேசு பாரமான சிலுவையை சுமந்து சென்றதை தியானிப்போம்.


பிலாத்துவின் ஆணைப்படி, முள்முடி சூடியவராய் உடலெல்லாம் இரணமாய், வீரர்கள் தன் மீது சுமத்திய சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கிச் செல்கிறார் தேவமைந்தன். சிலுவையின் பாரத்தினால், பல முறை தடுமாறி விழுகிறார். அண்ணலின் நிலைக்கண்டு அழுது புலம்பும் ஒரு கூட்டமும் ஆணவத்தோடு சிரித்து மகிழும் ஒரு கூட்டமும் அவர் பின்னே வருகிறது.


அதோ! அன்னை மரியா, தன் மகனின் பாடுகளைக் கண்ட அவர் மனம் எப்படித் துடிக்கும். தாயும் மகனும் சந்திக்கின்றனர். பேசவில்லை. இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற இருவருமே தயாராக இருக்கின்றனர். கல்வாரி பயணத்தில் அவர் பலரை சந்திக்கின்றார். எதிர்பாராது அவர் சிலுவையை சிறிது தூரம் சுமந்து சென்ற சீமோன். அவரது வேதனையைக் குறைக்க ஒடிவரும் வெரோணிக்கா, மார்பிலே அடித்துப்புலம்பும் எருசலேம் நகரப் பெண்கள், குற்றுயிராய் கொல்கத்தா வந்து சேர்ந்த்தும், அவர் சுமந்து வந்த சிலுவையிலே அவரது கைகளையும், கால்களையும், இரத்தநாளங்கள் அறுந்து, குறுதி பெருக்கெடுக்க, ஆணிகளால் அறைந்து இரண்டு கள்வர்களுக்கு இடையே நிறுத்துகின்றனர் கொடிய யூதர்கள்.


வியாகுலத் தாயே! எத்துணை வியாகுல வாள்கள் உம் உள்ளத்தை ஊடுருவி பாய்ந்துள்ளன. உமது அன்புத் திருமகன் சுமந்தது பார சிலுவை அல்ல. எங்களது பாவச் சிலுவைகளே. குழந்தைகள் முதல் முதியவர் வரை, இல்லறத்தார் முதல் துறவறத்தார் வரை செய்யும் பாவங்கள் தான் எத்தனை எத்தனை. என்று நாங்கள் மனம் திருந்திய மைந்தனாக இயேசுவிடம் திரும்பி வருவோம்? எங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக இந்த பத்து மணியை ஒப்புக்கொடுக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . . 

ஐந்தாவது: இயேசு சிலுவையில் உயிர் துறந்ததை தியானிப்போம்


உச்சி வேளை இயேசு தாகத்தினாலும் உடல் வேதனையினாலும் சிலுவையில் துடிதுடிக்கின்றார். தாகத்திற்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து எள்ளி நகையாடுகின்றனர். தன் பாவத்திற்கு வருந்திய கள்ளனுக்குத் தனது பேரின்ப வீட்டில் இடம் அளித்த்தும் தன் தாயை அருளப்பரிடம் ஒப்படைத்தும் அருளப்பரிடம் தன் தாயை ஒப்படைத்தும் ஆறுதல் அடைகிறார். தான் இறக்கும் வேளையிலும் தந்தையே இவர்களை மன்னியும் என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக மன்றாடுகின்றார். பிற்பகல் மூன்று மணி நாடெங்கும் இருள் சூழ கோவிலின் திரை கிழிய 'தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்'என்று கூறி இயேசு உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவன் இவர் உண்மையிலேயே நீதிமான் எனக்கூறி கடவுளை வணங்கினான்.


அரிமத்தியா என்ற ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவிடம் அனுமதி பெற்று இயேசுவின் திருவுடலை சிலுவையின்று இறக்கி அன்னை மரியாவின் மடியிலே கிடத்தினார்கள். பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்த மகன் உயிரற்ற உடலாய் கிடப்பதை கண்டு கதறுகின்றாள். ஆறுதல் சொல்ல யாரும் இல்லை யோசேப்பு இயேசுவின் திருவுடலை மெல்லிய துணியால் சுற்றி தமக்கென வெட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்து அதன் வாயிலில் பெரிய கல்லை அடைத்து வைத்துச் சென்றார். இயேசு பிறந்த்தும் மாற்றானின் மாட்டுத்தொழுவத்தில். இறந்து அடக்கம் செய்யப்பட்டதும் மாற்றானின் கல்லறையில். மனிதனின் நிலையும் இதுதான்.


மாசில்லா கன்னித்தாயே நிலையில்லா உலகம் நிலையில்லா செல்வம் நிலையில்லா உடலை நிலையானதாக எண்ணி நிம்மதியின்றி அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் எங்களை நீரே தடுத்து நிறுத்தி நிலையான மோட்ச வாழ்விற்கு எம்மை அழைத்துச்செல்ல வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணிகளை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

மகிமையின் பேருண்மைகள்:


(புதன், ஞாயிறு)

முன்னுரை:


தேவகுமாரன், கணவனை அறியா கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவாகி அவதரித்து, எவ்வாறு அதிசயமும், ஆச்சரியமும் மகிமையும் நிறைந்ததோ, அதேபோன்று, இயேசு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்து அனைவரும் காண விண்ணகம் சென்றது. தமது துணையாளரான தூய ஆவியாரை நமக்காக அனுப்பியது. ஆத்ம சரீரத்தோடு அன்னைமரி விண்ணேற்ற்ம் அடைந்த்து அவர் விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியாக முடிசூட்டப்பட்டது. அனைத்துமே மகிமையின் பேருண்மைகள். கிறிஸ்மதுவ வாழ்வின் விசுவாசத்திற்கு ஊன்று கோல்களாக விளங்குபவை. சரித்திரச்சான்றுகள் வேறு எம்மத்த்திலும் இல்லாத நடைபெறாத பேருண்மைகள். நாமும் விசுவாசிப்போம் நற்கதி அடைய முயற்சி செய்வோம்.


முதலாவது: இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்தை தியானிப்போம்

வாரத்தின் முதல் நாள் பெண்கள் சிலர் நறுமணப் பொருள்களை எடுத்துக்கெண்டு இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையை நோக்கிச் சென்றார்கள். கல்லறையின் வாயிலில் உள்ள கல் புரட்டப்பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது இயேசுவின் உடல் காணப்படவில்லை அச்சத்தோடு அவர்கள் நின்றபொழுது வானதூதர் தோன்றி 'அவர் இங்கு இல்லை உயிரோடு எழுப்பபட்டார்' என்றார் ஆம் மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துவிட்டார். பெண்கள் நடந்த நிகழ்ச்சிகளை சீடர்களிடம் அறிவித்தனர். சீடர்களுக்கு அச்சமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த்து.


இயேசு அவர்களுக்கு பலமுறை காட்சி தந்து மறை உண்மைகளை விளக்கினார். தமது காயங்களைக் காட்டி அவர்களது ஐயங்களை போக்கினார். அப்பொழுது அவர்களது மனக்கண்கள் திறந்தன. இயேசுவே ஆண்டவர் என்று கண்டு கொண்டு பேரின்பத்தில் ஆழ்ந்தனர்.


தேவதாயே! மகனைப் பறிகொடுத்து நடைபிணமாய் வாழ்ந்த நீர் உயிரோடு எழுந்து வந்து உமது மகன் அம்மா என்று அழைத்தபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருப்பீர் அல்லவா! தாயே பல்லேறு கவலைகளால் பயத்தினால் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களது நிலைகண்டு மனமிறங்கி எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரைக்குமாறு வேண்டி இந்த பத்து மணிகளை உமது திருப்பாதம் சமர்ப்பிக்கின்றோம் 

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

இரண்டாவது: இயேசு விண்ணேற்றமடைந்த்தை தியானிப்போம்



இயேசு தமது சீடர்களை பெத்தானியா என்ற இடத்திற்கு வரவழைத்து அவர்களை நோக்கி "விண்ணிலும் மண்ணிலும் நீங்கள் எல்லா மக்களிடத்தாரையும் எனது சீடராக்குங்கள் தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குக்கொடுங்கள் உமக்கு துணையாளராக தூய ஆவியாரை அனுப்புகிறேன். உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்" என்று கூறி அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த பொழுதே அவர்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்தார். சீடர்களும் அவரை வணங்கி மகிழ்ச்சியோடு அவரைப் போற்றிக் கொண்டுருந்தார்கள். அவரது அரசுக்கு முடிவே இராது மகிமையின் தேவன் மாட்சிமை நிறைந்தவர். மனுக்குலம் செழித்திட என்றும் நம்மோடு இருப்பவர். இதோ நமது இதயக்கதவை தட்டுகிறார். நமது இதயக்கதவை திறந்து நம்மோடு அவர் வாழ வரம் கேட்போம்.


மாசில்லா மாமரியே உமது திருமகனின் விண்ணேற்றம் எங்களின் வாழ்விற்கு ஈடேற்றம் என்பதை நாங்கள் உணர்ந்து அதற்கேற்ற வழிகளில் நாங்கள் வாழ்வதற்குரிய வரம் வேண்டி இந்த பத்து மணிகளை உமது மலர்பாதம் சமர்ப்பிக்கின்றோம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

மூன்றாவது: தூய ஆவியானவரின் வருகையை எண்ணி தியானிப்போம்



பெந்தக்கோஸ்து என்றும் பெருநாளில் அன்னை மரியும் இயேசுவின் அன்புச் சீடர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒருமனத்தினராய் செபித்துக் கொண்டிருந்தபோது பெருங்காற்று வீசுவது போன்று ஒலி எழுந்து பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது அவர்கள் அனைவரும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு வெவ்வேறு மொழிகளில் பேசத்தொடங்கினர். இதைக்கண்ட மற்ற யாவரும் மனம் குழம்பி அதிசயத்து நின்றனர். பாடுகளில் காலத்தில் பயந்து ஓடிய சீடர்கள் பலமடைந்தனர். ஞானமற்றவர் ஞானிகள் ஆயினர். ஞானம் பிற பயம் மறைந்த்து. இயேசு தமக்கும் போதித்தவைகளையெல்லாம் உலகமெங்கும் சென்று போதித்து உண்மைக்கு சான்றாக தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.


ஆதியிலே நீர்த்திரளின் மேல் நிழலாடிக்கொண்டிருந்த பரிசுத்த ஆவியார் மரியா மீது நிழலிட்ட ஆவியார், இயேசுவின் திருமுழுக்குக்கில் புறா வடிவில் அவர்மீது வந்திறங்கிய தூய ஆவியார் அக்கினி வடிவமாய் அப்போஸ்தலர்கள் மீது வந்து இறங்கினார். எண்ணற்ற புதுமைகள் அவர்கள் செய்ய வரம் அருளினார். தூய ஆவியார் அனபின் அருளின் இரக்கத்தின் சமாதானத்தின் தேவன் வந்தவர் சென்றுவிடவில்லை உலகம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். உலகம் முடியும் வரை நம்மோடு இருப்பார்.


தூய ஆவியாரால் நிரப்பட்ட தேவதாயே பரிசுத்த ஆவியாரின் வல்லமையை நாங்கள் உணர்ந்து அவரின் துணையால் நாங்கள் ஜெபமாலையை பக்தியாய் செபித்து அதன் மகிமையை அனைவரும் உணர்ந்தும் ஆற்றலை எமக்கு அருளும்படி வேண்டி இந்த பத்து மணிகளை உம் மலர்ப்பாதம் சமர்ப்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

நான்காவது: கன்னிமரியா விண்ணேற்றம் அடைந்த்தை தியானிப்போம்.


தேவதாய் இறைத்தந்தையின் இனிய மகள்; இறைமகன் இயேசுவின் அன்புத்தாய்; தூய ஆவியாரின் அருள்நிறைப் பத்தினி. உடலிலும் உள்ளத்திலும் தூய்மை நிறைந்தவள். பத்துமாதம் இயேசுவை சுமந்த வாக்குத்தத்தத்தின் பேழை. இயேசுவின் தசையின் தசையாய் இரத்ததின் இரத்தமாய் விளங்கிய அன்னையின் திருவுடல் கல்லறையில் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகலாமா? இறைவன் எந்த திட்டத்திற்காய் இவ்வுலகிற்கு அன்னையை அனுப்பினாரோ அது நிறைவேறியதும், ஆத்ம சரீரத்தோடு விண்ணரசிற்கு இருகரம் நீட்டி அழைத்துக்கொள்கிறார்.

ஜென்ம மாசின்றி உற்பவித்த அன்னை மரியா! எளிமையும், தாழ்ச்சியும் நிறைந்த உள்ளத்தோடு இவ்வுலகில் வாழ்ந்தீர். நீர்தான் எங்கள் நம்பிக்கை. எங்கள் பாவங்களைக் கழுவும் தாய். நாங்களும் உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மறைந்த வாழ்வில் புனிதத்தை தேட வரம் வேண்டி இந்த பத்து மணியை உமக்கு சமர்பிக்கின்றோம். 
 
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

ஐந்தாவது: கன்னி மரியா விண்ணுலக மண்ணுலக அரசியாக முடி சூட்டப்பட்டதை தியானிப்போம்.



மனுகுலத்தை இரட்சிக்க வந்த, தேவ குமாரனை திருவயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, சீராட்டி பாராட்டி வளர்த்து, அவரது இறப்பிலும் உயிரப்பிலும் பங்கேற்று தூய ஆவியால் நிரப்பப்பட்டு, நமது குறைகளைக் களையும் தாயாக, தம் திருமகனிடம் நமக்காக பரிந்து பேசும் கருணையுள்ளவளாக, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனால் நம் தாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டதால் மண்ணுலக அரசியாகின்றாள்.


இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்னே இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவள். பாவநிழலே அணுகாத பாக்கியவதி. அவர் வழியாக மானிடர் அனைவரும் முடிவில்லா வாழ்வு பெற இறைவன் விரும்பினார். வானதூதர்களால் போற்றப்பட்டவர் புகழ்பெற்றவர். அதனால் விண்ணிற்கும் அரசியாய் முடி சூட்டம் பெறுகிறார், ஆரோக்கிய அன்னையாய், அடைக்கல மாதாவாய், புதுமைத்தாயாய், அமல உற்பவியாய், சகாயத்தாயாய் பலவேறு பெயர்களில் மானிடரின் குறைகளை உலகம் முழுவதும், பல்வேறு இடங்களில் கொலுவீற்றிருந்து அருள்மழை பொழிகின்றாள்.


விண்ணிற்கும் மண்ணிற்கு அரசியே! தஞ்சமென உம்மையே நாடி வந்தோம் உமக்கும் உமது திருமகனுக்கும் ஏற்றவர்களாக நாங்கள் வாழ வரம் வேண்டி இந்த பத்து மணிகளை உமக்கு கொடுக்கின்றோம். 
 
ரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . . 

அன்பரசு உலகில் பரவிட செபிப்போம்
ஆணவம் அடியோடு ஒழிந்திட செபிப்போம்
இன்னல்கள் யாவும் நீங்கிட செபிப்போம்
ஈனச் செயல்கள் அழிந்திட செபிப்போம்
உலகில் அமைதி நிலவிட செபிப்போம்
ஊக்கத்தோடு உழைத்திட செபிப்போம்
எங்கும் இன்பம் தழைத்திட செபிப்போம்
ஏற்றத்தோடு வாழ்ந்திட செபிப்போம்
ஐம்புலன் அடக்கி ஆண்டிட செபிப்போம்
ஓற்றுமை எங்கும் நிறைந்திட செபிப்போம்
ஓதல் என்றும் தொடர்ந்திட செபிப்போம்
ஓளவியம் தவிர்த்து வாழ்ந்திட செபிப்போம்
மரியே வாழ்க! என் ஆண்டவளே வாழ்க!
இயேசுவின் தாய் என் தாய்.

Wednesday, August 29, 2018

யாயிர் மகள் குணமடைதல்



இயேசு செய்த புதுமைகள் 11 : யாயிர் மகள் குணமடைதல்

மத்தேயு 9:18, 19, 23..26
மார்க் 5 : 21..24; 35..43


இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

***

யாயீர் என்பவர் யூதர்களுடைய தொழுகைக் கூடம் ஒன்றின் தலைவர். அவருடைய மகள் சாகும் தருவாயில் இருந்தபோது அவர் இயேசுவைத் தேடி வருகிறார். பணம், செல்வாக்கு, மதம் எதுவும் கை கொடுக்காத சூழலில் அவர் வாழ்வளிக்கும் இறைவனைத் தேடி வருகிறார். இயேசு வரும் முன் அந்த சிறுமி இறந்து விடுகிறார். இயேசு இறந்து போன அந்த சிறுமிக்கு உயிர் கொடுக்கிறார்.

இந்த இறைவார்த்தைகள் நமக்கு பல்வேறு சிந்தனைகளை தருகின்றன.

1. தனது மகள் சாகும் தருவாயில் இருக்கும் போது யாயீர் சரியான முடிவை எடுக்கிறார். வாழ்வளிக்கும் இயேசுவைத் தேடி வருகிறார். மகள் எப்போதுவேண்டுமானாலும் இறக்கலாம் எனும் நிலை. அழுகின்ற தாய்க்கு ஆறுதலாய் இருக்க வேண்டுமே எனும் சிந்தனை ஒரு புறம் அழுத்த அவர் இயேசுவைத் தேடிச் செல்ல முடிவெடுக்கிறார்.

‘மரணத்துக்காகக் காத்திருக்காமல், வாழ்வைத் தேடிச் சென்றார்” யாயீர். நமது வாழ்க்கையிலும் பல்வேறு சூழல்கள் நம்மை எழவிடாமல் அழுத்திப் பிடிக்கின்றன. அப்போது நாம் என்ன செய்கிறோம் ?. வாழ்வளிக்கும் இறைவனைத் தேடிச் செல்கிறோமா ? இல்லை வீழ்ந்த இடத்திலேயே கிடக்கிறோமா என சிந்திப்போம். நமது வாழ்வில் பாவத்தினால் செத்துக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறோமா, பாவத்திலிருந்து மீட்பவரைத் தேடிச் செல்கிறோமா ?

2. யாயீர் என்பவர் தொழுகைக் கூடத்தின் தலைவன். ஊரில் அனைவராலும் மதிக்கப்படுபவன். மத சிந்தனைகளில் ஊறியவன். ஆன்மீகவாதி என மக்களால் மரியாதையோடு பார்க்கப்படுபவன். இயேசுவைத் தேடிச் சென்றால் அவருடைய சக மதவாதிகளால் தூற்றப்படலாம், அல்லது இவரது ஆன்மீக பலத்தை மக்கள் சந்தேகப்படலாம். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இயேசுவைத் தேடிச் சென்றார்.

தூற்றுபவர்கள் தூற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். குறை கண்டுபிடிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் குறைகண்டுபிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் பிறருடைய கருத்துகளுக்குப் பயந்து அமைதியாய் இருக்கிறோமா ? போலியான அந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி இயேசுவைத் தேடிச் செல்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்

3. இயேசுவை நெருங்கிய அவர் அவருடைய பாதங்களில் விழுகிறார். மரியாதை பெற்றுப் பழக்கப்பட்ட மனிதர் இப்போது மரியாதை கொடுக்க வருகிறார். நமது கர்வத்தின் அத்தனை கிரீடங்களையும் உடைத்து தாழ்மையின் தாழ்வாரங்களில் நடக்கும் போது தான் இயேசுவின் வழியில் வருகிறோம் என்று அர்த்தம். நம்மை முற்றிலும் தாழ்த்தி இறைவனின் பாதத்தில் விழும்போது மட்டுமே வாழ்க்கையில் எழ முடியும்.

யாயீர் என்பவர் செய்த அந்த செயல், அவர் தனது அத்தனை அந்தஸ்தையும் கழற்றி விட்டு முழுமையாய் இயேசுவை நம்பி வந்தார் என்பதன் அடையாளம். நமது வாழ்விலும் இயேசுவின் பாதத்தில் விழ தடையாய் இருக்கும் அத்தனை பெருமைகளையும் தாண்டுவோம்.

4. “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என இயேசுவிடம் வேண்டுகிறார் யாயீர். தனது மகள் சாகும் நிலையில் இருக்கிறார். எல்லா மருத்துவ வழிகளையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று. எல்லாரும் செபித்தும் பார்த்தாயிற்று. கடைசி சரண் இயேசு மட்டுமே. அதையே யாயீர் செய்தார். ஆனால் இயேசு நேரடியாய் வந்து அவள் மீது கையை வைத்தால் மட்டுமே அவள் பிழைத்துக் கொள்வாள் என அவர் நினைக்கிறார்.

“இயேசுவால் முடியும்” என்பதை நம்பும் நாமும், பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அவர் நமக்கு உதவி செய்ய முடியும் என அவருடைய வல்லமையை குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். நமது வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லும் போது, எப்படி அவர் செயல்படவேண்டும் எனும் நிபந்தனைகள் விதிப்பது அறிவீனம் என்பதை உணர்வோம்.

5. “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என யாயீரின் மகள் இறந்ததும் தகவல் வருகிறது. யாயீர் உடைந்து போகிறார். செய்தி கொண்டு வந்தவர்களுடைய மனநிலையோ “இனிமேல் இயேசுவாலும் முடியாது” என்பதாகத் தான் இருந்தது. உயிர் இருந்தபோது வந்திருந்தால் ஒருவேளை சுகமாக்கியிருக்கலாம், ஆனால் இறந்த பின் நிச்சயம் முடியவே முடியாது என்பதே அவர்களுடைய எண்ணமாய் இருந்தது.

இயேசுவை நாமும் பல வேளைகளில் இப்படித் தான் பார்க்கிறோம். ஒரு காய்ச்சல் வந்தால் இயேசுவிடம் வருவதில்லை, நாலு நாளாக காய்ச்சல் விடாவிட்டால் இயேசுவிடம் வருகிறோம், ஒருவேளை இனிமேல் பிழைக்க முடியாது எனும் நோய் என சொல்லிவிட்டால், “இயேசுவாலும் முடியாது” எனும் நிலமைக்கு வந்து விடுகிறோம். நமக்கு வந்த, வருகின்ற, வரப்போகின்ற எல்லா பிரச்சினைகளை விடவும் இயேசு பெரியவர் எனும் உண்மை நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.

6. தனது மகள் இறந்த செய்தி யாயீரை உடைத்திருக்கும். வரும் வழியில் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தால் மகள் பிழைத்திருப்பாள் என நினைத்திருக்கலாம். வரும் வழியில் இயேசு நேரம் செலவிட்டு பன்னிரண்டு ஆண்டு நோயால் வாடிய ஒரு பெண்ணுக்கு சுகமளித்திருந்தார். ஒருவேளை இயேசு அப்படி நேரம் செலவிடாமல் இருந்திருக்க வேண்டும் என யாயீர் நினைத்திருக்கலாம்.

நமது வாழ்க்கையிலும் இயேசு நமது செபங்களுக்குப் பதிலளிக்க காலம் தாழ்த்துவது போல நாம் உணரலாம். நாம் கேட்டபின் செபம் செய்த பலருக்கு செபத்துக்கான பதில் வந்திருக்கலாம். நம்முடைய செபத்துக்கான பதில் தாமதமாகியிருக்கலாம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் சினியாரிடி பார்த்து செபத்துக்கு பதில் கொடுப்பவர் அல்ல. இயேசுவின் நேரம் கன கட்சிதம். அது எப்போது என்பதை அவரே அறிவார்.

7. “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என இயேசு யாயீரிடம் சொல்கிறார். மகள் இறந்து விட்டாள் என மக்கள் சொன்னது யாயீரின் நம்பிக்கையை உடைத்தது. இனிமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது எனும் சிந்தனை அவருடைய மனதிலும் எழுந்திருக்கலாம். கவலையும் பயமும் அவரை ஆட்கொண்டிருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்கிறார். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அச்சம் இருப்பதில்லை. எங்கே அச்சம் இருக்கிறதோ அங்கே நம்பிக்கை விடைபெற்று விடுகிறது.

நமது வாழ்விலும் நாம் பல்வேறு விஷயங்களை இறைவனிடம் கேட்கிறோம். சில நிகழ்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. சில நோய்கள், சில வேலைகள், சில பிசினஸ் விஷயங்கள், சில பாதுகாப்பு விஷயங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. அனைத்தையும் இயேசு பார்த்துக் கொள்வார் எனும் விசுவாசம் நம்மை பயமில்லாமல் இயங்க வைக்கும். அத்தகைய விசுவாசம் வேண்டும் என்கிறார் இயேசு.

8 “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என இயேசு சொன்னபோது மக்கள் நகைத்தார்கள். அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது நித்திரை. நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நித்திரை. மக்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நகைத்தார்கள். இயேசு கவலைப்படவில்லை. தன்னை நகைப்பவர்களையோ, ஏளனம் செய்பவர்களையோ அவர் என்றைக்குமே பொருட்படுத்தியதில்லை. அமைதியாக தனது வேலையைப் பார்த்தார்.

நாமும், நமது வாழ்க்கையில் இயேசுவை நகைக்கும் பலரைச் சந்திக்கிறோம். அவை நம்மைக் காயப்படுத்தக் கூடாது. அது நிந்திப்பவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விஷயம் என விட்டு விட வேண்டும். ‘பழிவாங்குதல் என் வேலை’ எனும் இறைவனின் வார்த்தையை மனதில் கொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளை எந்த வகையிலும் நகைப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது.

9. “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என பொருள் படும் தலித்தாகூம் எனும் வார்த்தையை இயேசு சொன்னதும் சிறுமி உயிர்பெற்று எழுந்தார். நானே வாழ்வும் உயிரும் என்றவர் இயேசு. அதை இங்கே நிரூபிக்கிறார். வாழ்க்கை வந்ததும் மரணம் தோற்று விடுகிறது. வாழ்வின் வார்த்தைகள் மரணத்தின் கல்லறைகளை உடைக்கின்றன. வெளிச்சம், இருளை விரட்டி விடுகிறது.

நமது வாழ்க்கையில் பாவத்தின் ஆளுமை நம்மை இறந்தவர்களாக மாற்றி விடலாம். அப்போது இறைவனுடைய வார்த்தைகளே நம்மை திரும்ப அழைத்து வரும் ஆயுதம் என்பதை உணர வேண்டும். இறைவனுடைய வார்த்தைகளை நமது வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டு பாவம் எனும் மரண பள்ளத்திலிருந்து வெளியே வர வேன்டும்.

10. “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என இயேசு கட்டளையிட்டார். இயேசுவின் முதன்மைப் பணி நலமளிப்பதோ, உயிரளிப்பதோ அல்ல பாவத்தில் வாழும் மக்களுக்கு மீட்பளிப்பது. எனவே தான் தன்னை நாடி வரும் மக்கள் உலகத் தேவைகளை விட விண்ணகத் தேவைகளையே விரும்பி வர வேண்டும் என இயேசு விரும்பினார். எனவே தான் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் அந்த சிறுமிக்கு உணவு கொடுக்கச் சொன்னார். அது அவர் உலகத் தேவைகளை உதாசீனம் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடு.

நாமும் இயேசுவை எதற்காக அணுகுகிறோம் ? எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும். நமது தேடல் உலக செல்வங்களா, இறைமகனா ? தேவைகளற்ற தேடலே இறைவனின் விருப்பம். நாம் மீட்புக்காக இறைவனைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்


லூக்கா 7 : 1 முதல் 10 வரை




இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.

அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.



நூற்றுவர் தலைவன் என்பவன் குறைந்தபட்சம் நூறு படை வீரர்களின் தலைவன். ரோம அரசைச் சார்ந்தவர். ரோமர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் யூதரான இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறான். அதுவும் இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் அவரது ஊழியர் குணமாவார் எனும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது. அவர் அந்த ஊழியனை ஒரு வார்த்தை கூட வெளிப்படையாய் சொல்லாமல் குணமாக்குகிறார் !

இந்த நிகழ்வு பல ஆன்மீகச் சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

1. அந்த நூற்றுவர் தலைவன் ஒரு சிறந்த மனிதனாக காட்சியளிக்கிறார்.

முதலாவதாக, இன பேதத்தை அவர் கடக்கிறார். தான் ஒரு ரோமர், இயேசு ஒரு யூதர் எனும் எல்லைகளைக் கடக்கிறார். யூத மக்களோடு தொடர்பில் இருக்கிறார். யூதர்களுக்கு நன்மைகள் செய்கிறார்.

இரண்டாவதாக, பொருளாதார பேதங்களைக் கடக்கிறார். தனது வீட்டில் பணி செய்யும் ஒரு வேலைக்காரனுக்காக தனது நிலையை விட்டு இறங்கி வருகிறார். தனது வேலைக்காரருக்கு, தானே வேலைக்காரனாய் மாறிப் போகிறார்.

மூன்றாவதாக தனது அந்தஸ்து, புகழ் போன்றவற்றைக் கடக்கிறார். அனைத்தையும் விட்டு விட்டு ஒரு ஏழை ஊழியனுக்காக மனமிரங்கி வருகிறார். தனது அந்தஸ்துக்கு சரிக்குச் சமமானவர்களை மட்டுமே மக்கள் மதிப்பது வழக்கம். இங்கே நூற்றுவர் தலைவன் அந்த மதில் சுவரையும் உடைக்கிறார்.

நான்காவதாக‌, மத பேதங்களைக் கடக்கிறார். யூத மதத்தையும், யூத கடவுளையும் மதித்து அவர்களுக்காக தொழுகைக் கூடம் கட்டிக் கொடுக்கிறார்.

இப்படி பல வகைகளில் அன்பும், ஈகையும், சமத்துவமும் கலந்த ஒரு நல்ல பண்புடைய மனிதராக அவர் காட்சியளிக்கிறார்.

2. யூதர்களின் தலைவர்களோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. யூதத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். எனவே தான் இயேசுவிடம் பரிந்துரை செய்ய அவர் யூத மதத் தலைவர்களை அணுகுகிறார். அவர்களும், இயேசுவிடம் வந்து அவருக்காகப் பரிந்துரை செய்கின்றனர்.

இயேசுவை நேரில் சந்திக்க தனக்கு அருகதையில்லை என்று நம்பியதால் அந்த நூற்றுவர் தலைவர் யூதத் தலைவர்களை அணுகினார். பின்னர் நண்பர்களை அனுப்பினார். இன்றைய சூழலில் நாம் இறைவனிடம் நேரடியாகவே நமது விண்ணப்பங்களை வைக்க இறைவன் நமக்கு உரிமை அளித்திருக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அந்த வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. நம்முடன் கூடவே பயணிக்க‌ தூய ஆவியானவரை இயேசு தந்திருக்கிறார்.

3. யூதத் தலைவர்கள் நூற்றுவர்த் தலைவனை எப்படிப் பார்த்தார்கள் என்பது வியப்பான விஷயம். நூற்றுவர் தலைவனை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள். ரோமர்களுக்கும், யூதர்களுக்கும் எப்போதுமே பனிப்போர் தான் நடக்கும். வெறுப்பு தான் உமிழப்படும். ஆனால் இவரை அவர்கள் அன்பானவராகப் பார்த்தார்கள்.

தொழுகைக் கூடம் கட்டிக் கொடுத்த பெருந்தன்மை உடையவராகப் பார்த்தார்கள். ஈகைக் குணம் அவருக்கு இருந்தது என்பதை இயேசுவிடம் சொல்கின்றனர். மிக முக்கியமாக, இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற, “தகுதியானவராக” பார்த்தார்கள். இப்படி அவரைப்பற்றிய புகழுரைகளை இயேசுவிடம் எடுத்து வைத்தார்கள்.

நாம் ஒரு நபருக்காக‌ இயேசுவிடம் வேண்டும்போது என்ன செய்கிறோம் ? அந்த நபருடைய நல்ல குணாதிசயங்களைப் பட்டியலிட்டு, அவர் இயேசுவின் இரக்கத்துக்கு, “தகுதியானவர்” என சான்றளிக்கிறோமா ? அது தவறு ! தகுதியற்ற நமக்குத் தரப்படுவது தான் இறைவனின் இரக்கமும், கிருபையும். எனவே எனக்குத் தகுதி இருக்கிறது, அடுத்தவருக்குத் தகுதி இருக்கிறது என நாம் இயேசுவிடம் சொல்லாதிருப்போம். தகுதியற்ற எமக்கு இரக்கம் தாரும் என இறைஞ்சுவோம்.

4. நூற்றுவர் தலைவரைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து சொன்னது இயேசுவை வசீகரித்திருக்க நியாயமில்லை. ஆனாலும் ஊழியனுக்காக தலைவர் கொண்ட‌ மனதுருக்கம் அவரை வசீகரித்திருக்க வேண்டும். அவர் அவர்களோடு சென்றார்.

நாம் இயேசுவிடம் வேண்டுகின்ற முறை தவறாக இருந்தால் கூட, மனம் சரியாக இருந்தால் இயேசு மனமிரங்குகிறார். இப்படித் தான் கேட்கவேண்டுமென அவர் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு கேட்கவேண்டும் என விரும்புகிறார்.

5. அந்த நூற்றுவர் தலைவனோ, தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அவன் தனது ஈகையையோ, தொழுகைக் கூடம் கட்டியதையோ, அன்பாய் நடந்து கொள்வதையோ, தனக்கு தகுதி உண்டு என்பதையோ அவன் முன்னிலைப்படுத்தவேயில்லை. மாறாக இறைவன் முன்னால் தன்னைப் பற்றிச் சொல்லும் போது தகுதி என்பது அறவே இல்லாத மனிதராக தன்னை வெளிப்படுத்துகிறார்.

தான் தகுதியானவர் என நினைக்கும்போது ஒருவர் தகுதி இழக்கிறார்.
தனக்குத் தகுதி இல்லை என ஒருவர் நினைக்கும் போது தகுதி பெறுகிறார்.

தான் தாழ்மையானவன் என நினைக்கும் போது ஒருவனுக்குள் கர்வம் வருகிறது
தான் கர்வமானவனோ என கலங்கி இறைவனிடம் வருகையில் அவனுள் தாழ்மை எழுகிறது.

கிறிஸ்தவத்தின் வியப்பான கதை இது ! நாம் இறைவனிடம் வரும் போது உலக சாதனைகளின் பட்டியலோடு அல்ல, நமது பலவீனத்தின் யதார்த்தத்தோடு வருவோம்.

6. நூற்றுவர் தலைவன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதையும், அதிகாரத்தால் சாதிக்க முடிவதையும் அறிந்திருந்தான். அவனுக்குக் கீழே இருக்கும் படை வீரர்களைப் பார்த்து போ என்றால் போவார்கள், வா என்றால் வருவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் அவனால் ஊழியரின் நோயைக் குணமாக்க‌ முடியவில்லை. காரணம் அதற்கான அதிகாரம் அவனிடம் இல்லை. ஆனால் அந்த அதிகாரம் இயேசுவிடம் உண்டு என்பதை அவன் நம்பினான். இயேசுவின் ஒற்றை வார்த்தை போதும் என்பதை ஆழமாக விசுவசித்தான்.

7. இயேசு அவனுடைய விசுவாசத்தை வியந்தார். தான் போதிக்காத, புதுமைகள் செய்யாத பிற இன மனிதனின் விசுவாசம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. விவிலியத்தில் இரண்டு முறை தான் இயேசு “வியப்புற்றார்” எனும் வார்த்தை வருகிறது.

ஒன்று இஸ்ரயேயில் குறைவான விசுவாசத்தைக் காணும் போது வருகிறது. “அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் ( மார்கு 6:6 )”. இன்னொரு முறை இந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு அவர் வியப்புறுவதாய் வருகிறது. ஒன்று யூதமக்களின் விசுவாசமின்மை, இன்னொன்று பிற இனத்தவரின் ஆழமான விசுவாசம். இந்த முரணே வியக்க வைக்கிறது.

நாமும் இறைவன் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்கும் போது அவரது மனம் மகிழ்ச்சியினால் அசைக்கப்படும்.

8. “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என நூற்றுவர் தலைவர் சொன்னார். இயேசுவோ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த ஊழியரை சுகமாக்குகிறார். நாம் நினைப்பதற்கும் மேலாக இயேசுவின் வல்லமையும், ஆற்றலும் உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகிறது.

நாம் இயேசுவிடம் வரும்போது நமது தேவையைச் சொல்வதே சரியான வழி. அதை இறைவன் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயேசு அந்த ஊழியரை சந்தித்ததில்லை, என்ன நோய் என்பதைப் பார்த்ததில்லை, எத்தனை நாள் நோய் என ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் மனதில் நினைத்த போதே அந்த நோய் அலறி ஓடி விட்டது. மரண தருவாயில் இருந்தவரை வாழ்வின் வரவேற்பறைக்கு அழைத்து வந்தது. இறைவனின் ஆற்றல் கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும் நம்பிக்கை மனதில் இருக்கட்டும்.

9. இயேசுவை தேடிச் செல்ல நமக்குத் தகுதி இல்லை என நினைப்பதும், இயேசு நம்மைத் தேடி வரும் போது தகுதியற்றவர் நாம் என நினைப்பதும் தாழ்மையின் அடையாளமாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியதே. இயேசு பாவிகளையும் நேசித்தவர். அவரை நோக்கி ஓடி வர நமது பாவங்களே காரணமாய் இருக்கலாம், ஏனெனில் அந்தப் பாவங்களிலிருந்து தாம் நமக்கு மீட்பு தேவைப்படுகிறது.

இயேசுவைத் தேடிச் செல்பவர்களாகவும், இயேசு நம்மைத் தேடி வரும்போது எதிர்கொண்டு சென்று வரவேற்பவர்களாகவும் இருப்பதே சரியான வழியாகும்.

10. தான் யாருக்காக இந்த பூமிக்கு வந்தாரோ அந்த மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிற இன மக்கள் அவரை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர். “என்னைக் காணாமலேயே விசுவசிப்பவன் பேறுபெற்றவன்” எனும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவைக் காணாமலேயே அவரை நம்பி பெரும் பேறு பெற்றான்.

அவனது விசுவாசம் அவனை மீட்புக்குள் வழிநடத்தியதா என்பதை விவிலியம் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவனது விசுவாசம் உடல்நலத்தை மட்டுமே சார்ந்திருந்தால், அது முழுமையற்ற விசுவாசம். நமது விசுவாசம் நம்மை மீட்புக்குள் வழிநடத்த வேண்டும். வெறும் உலக செல்வங்களுக்காக மட்டும் கொள்கின்ற விசுவாசம் நம்மை நிலைவாழ்வுக்குள் கொண்டு செல்லாது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Thursday, August 23, 2018

இயேசுவுக்கு சான்றுகள்



மனிதரின் தேடல்:

இந்த உலகத்தின் புதிய குழந்தையாக மனிதன் தோன்றியபோது, இயற்கையின் புதிர்களுக்கு விடை காண ஆவல் கொண்டான். இயற்கையில் செயலாற்றும் மேலான ஓர் ஆற்றலைப் பற்றி அதிகமாக அறிய ஆசைப்பட்டான். பல்வேறு வகைகளிலும், பலவித உருவங்களிலும் அந்த ஆற்றலுக்கு வழிபாடு செய்தான். ஆனாலும் நிறைவு பெறாத மனிதன், இயற்கைக்கு மேற்பட்ட அந்த ஆற்றலை நேரில் காண ஆவல் கொண்டான். இயற்கையை படைத்த அந்த கடவுள், ஒரு மனிதராகப் பிறக்க வேண்டுமென மனித மனம் ஏங்கியது; அமைதியில்லாத இந்த உலகில் அமைதியைக் கொண்டு வரும் போதனை களை வழங்கி மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமெனத் தவித்தது; மக்களின் பாவங் களுக்கு பரிகாரமாக கடவுளே தன்னைப் பலியாக்க வேண்டுமென விரும்பியது.
"வாடுகின்ற பயிர் மழைக்காக காத்திருப்பதுபோல, மக்கள் அனைவரும் உன்னதரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்." - 'தேடுதல்' என்ற சீன நூல்.
"கடவுளே தனது பெயரால் போதிக்க ஒருவரை அனுப்பாவிடில், மக்களை நல்ல ஒழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது." - தத்துவ ஞானி பிளேட்டோ.
"கடவுளே தோன்றி, உன் பாவங்களால் உண்டான தீமைகளை தன்மேல் ஏற்றுக் கொள்ளும்வரை இந்த சாபத்திற்கு முடிவிருக்கும் என எதிபார்க்காதே." - 'எஸ்கிலஸ்' என்ற கிரேக்க புராணம்.


கடவுளின் திட்டம்:

உண்மையில் கடவுள் தம்மைத் தேடி, அறிந்து, அன்பு செய்யவும், அதன் வழியாக அவரை அடையவுமே மனிதர்களை உருவாக்கினார். உலக வரலாற்றில் தம்மை வெளிப்படுத்துவது கடவுளின் முன்குறிக்கப்பட்ட திட்டமாக இருந்தது. கடவுள், தம்மை ஆபிரகாமுக்கு உருவம் இல்லாத நிலையில் வெளிப்படுத்தி இஸ்ரயேலரை தமது சொந்த மக்களினமாக தேர்ந்துகொண்டார். அவர்கள் வழியாகவே தமது மீட்புத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். இறைமகன் இயேசுவின் வருகைக்காக அவர்களைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் கடவுள் மனிதராக பிறக்க இருந்ததை மக்களுக்கு முன்னறிவித்தனர்.
"ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற் றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' [கடவுள் நம்மோடு] என்று பெயரிடுவார்." - எசாயா 7:14.
"ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோ சகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப் படும்." - எசாயா 9:6.
"நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்." - திருப்பாடல்கள் 32:8.
"அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக் காகப் பரிந்து பேசினார்." - எசாயா 53:12.


உலகத்தில் இறைமகன்:

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதைய ரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ண கத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." - எபிரேயர் 1:1-3.
'பேதுரு கூறியது: "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமை யைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத் திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார் கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாக கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." - திருத்தூதர் பணிகள் 10:38-42.
"நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண் டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்கு கிறது." - 1 யோவான் 4:9-10.


வரலாற்று ஆவணங்கள்:

"இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரை சிலுவையில் அறைந்து கொள்ளுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவரது சீடர்கள் அறிவித்தார்கள். அதன்படி, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்." - யூத வரலாற்று ஆசிரியர் ப்ளாவியஸ் ஜோசப்பஸ் (கி.பி.37-97).
"இயேசு கிறிஸ்து இறைமகனாக விளங்கினார். நேர்த்தியானவை அனைத்தும் அவரில் நிறைவுபெற வேண்டியிருந்தது. பிலாத்துவின் அதிகாரத்தில், அவர் நமக்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு உண்மையாகவே இறந்தார். இறந்த அவரை தந்தையாகிய கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அதன் பின்பும் இயேசு தனது திருத்தூதர்களோடு இணைந்து உண்டு குடித்தார்." - அந்தியோக் ஆயர் புனித இக்னேசியஸ் (கி.பி.110).
"எனக்கு மனிதர்களை நன்றாக தெரியும். இயேசு கிறிஸ்து மனிதர்கள் அனைவரை யும்விட மேலானவர். அவர் தனது மரணத்திலேயே தன் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் இப்படிதான் செய்வானா? அவரது ஞானமுள்ள போதனைகள், அவருடைய ஆன்மீக அரசாட்சி, மற்றும் அவரின் மகிமை ஆகியவை எனக்கு மறைபொருளாகவே இருக்கின்றன. எனவே, இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன்." - மாவீரன் நெப்போலியன் (கி.பி. 1769-1821)

கிறிஸ்தவ விசுவாசம்


கிறிஸ்தவ விசுவாசம்


மூவொரு இறைவன்:
இறைவன் தமது இறைத்தன்மையில் ஒருவ ராய் இருக்கிறார். இந்த ஒரே இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களாய் விளங்குகிறார். இறைவனின் இந்த இயல்பு அதி புனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் அனைத்தையும் படைத்தவர் இவரே. இந்த ஒரே இறைவன் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்ல தன்மையிலும், எல்லையற்ற ஞானத்தி லும், பராமரிப்பிலும், சித்தத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். மோசேக்கு தம் மையே வெளிப்படுத்தியது போல், இவர் இருக் கிறவராய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போன்று, இவர் அன்பாய் இருக்கிறார்.
இந்த ஒரே இறைவன் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறி வுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். தந்தை, மகன், தூய ஆவியார் என்று தம்மையே வெளிப்படுத்தும் இறைவன் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த இறைவனின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது. மனித முறையில் நாம் சிந்திக்கக்கூடிய எல்லாவற்றிற்கும் இது அப்பாற்பட்டது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பின் நித்திய ஒளியிலும், இவருடைய நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைக்கப்பட் டுள்ளோம்.
மகனை நித்தியத்திற்கும் பிறப்பிக்கும் தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறோம். நித்தியத்திற்கும் பிறப்பிக்கப்படும் இறைவனின் வார்த்தையான மகனாகிய இறைவனை விசுவசிக்கிறோம். தந்தையிடம் இருந்தும், மகனிடம் இருந்தம் அவர்களுடைய நித்திய அன்பாக புறப்படும், தூய ஆவியாராகிய இறைவனை விசுவசிக்கிறோம். இவ்வாறு உட னொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று தெய்வீக ஆட்களில், முற்றும் ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்கு கின்றது. இவ்வாறே, படைக்கப்படாத பொருளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது.


இயேசு கிறிஸ்து: 



இயேசு கிறிஸ்து இறைமகனும் நம் ஆண் டவருமாக இருக்கிறார். காலங்கள் தொடங் கும் முன்பே, தந்தை இறைவனிடம் இருந்து பிறந்த நித்திய வாக்கு இவரே. இவர் தந்தை யோடு ஒரே பொருளானவர். இவர் வழியா கவே அனைத்தும் படைக்கப்பட்டன. இவர் தூய ஆவியாரின் வல்லமையால், கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். இவர் இறைத்தன்மையில் தந்தைக்கு சம மானவர், மனிதத்தன்மையில் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். இவர் அருளும் வாய்மையும் நிறைந்தவராய் நம்மிடையே விளங்கினார். இவர் இறையரசை அறிவித்து, அதை மக்க ளிடையே உருவாக்கினார். இவர் நம்மீது அன்பு செலுத்தியது போன்று, நாமும் ஒரு வர் மீது ஒருவர் அன்பு செலுத்துமாறு புதிய கட்டளையைத் தந்தார்.
இயேசு கிறிஸ்து, மன எளிமை, சாந்தம், பொறுமையுடன் சகித்தல், நீதியின்பால் தாகம், இரக்கம், இதயத் தூய்மை, சமாதான விருப்பம், நீதியினிமித்தம் துன்பப்படுதல் ஆகிய வழிகளைக் கற்பித்தார். கடவுளின் செம்மறியான இவர், உலகின் பாவங்களை தம்மீது சுமந்து போன்சியுஸ் பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் தம் மையே பரிகார பலியாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டார். அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்து எழுந்தார். தமது உயிர்ப்பால் நம்மையும் உயிர்ப்பித்து, தமது அருள் வாழ்வில் நமக்கும் பங்கு தந்தார். நாற்பதாம் நாளில் விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாகிய இறைவனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். உலகம் முடியும் காலத்தில், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.



தூய ஆவியார்:

தூய ஆவியார், ஆண்டவரும் உயிர் அளிப் பவருமாக இருக்கிறார். தந்தையாம் இறை வனோடும், மகனாம் இறைவனோடும் இவர் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறு கின்றார். முற்காலங்களில் இறைவாக்கினர் வழியாக பேசியவர் இவரே. இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகுக்கு அனுப்பி வைத் தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, திருச்சபை தோன்றி வளரச் செய்தார். திருச் சபைக்கு தொடர்ந்து ஒளியும் உயிரும் தந்து, இதைப் பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழு மாறு, இவரது செயல் திருச்சபையின் உறுப் பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல் கிறது. தம் அருளைப் புறக்கணியாமல் வாழ் பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார்.

கத்தோலிக்க திருச்சபை:

 

இயேசு கிறிஸ்து, பேதுரு என்னும் பாறை மீது தமது ஒரே திருச்சபையை நிறுவினார். இந்த திருச்சபை ஒருமை, புனிதம், கத்தோ லிக்கம் (பொதுமை), திருத்தூதுத்துவம் ஆகிய இயல்புகளை கொண்டுள்ளது. திருச்சபை கிறிஸ்துவின் மறை உடல். இது பலநிலை கொண்ட, அதிகார அமைப்பும் ஆன்மீக சமூக முமாய் இருக்கின்றது. இவ்வுலக திருச்சபை, பயண நிலையில் உள்ள இறை மக்களின் கூட்டமும், விண்ணக வரங்களால் நிரப்பப் பெற்ற சபையுமாய் இருக்கிறது. மீட்புப்பணி, திருச்சபையின் வழியாக மனித வரலாற்றில் தொடர்ந்து நிலைபெறுகிறது. திருச்சபை தன் உறுப்பினர்களை கிறிஸ்து இயேசுவின் மர ணம், உயிர்ப்பு ஆகிய மறைபொருட்களிலும், தனக்கு உயிரளித்து நடத்தி வரும் தூய ஆவி யாரின் அருளிலும் பங்குபெறச் செய்கிறது.
திருச்சபை இஸ்ரயேல் வழியாக இறைவ னின் வாக்குறுதிகளுக்கு வாரிசாகவும், ஆபிர காமின் ஞான மகளாகவும் விளங்குகிறது. இஸ்ரயேலரின் புனித நூல்களை திருச்சபை அன்புடன் பாதுகாத்து, அதன் முதுபெரும் தந்தையரையும் இறைவாக்கினரையும் போற்றி வணங்குகிறது. திருச்சபை திருத்தூதர்களின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை பாதுகாத்து வழிவழியாகக் கையளித்து வருவதோடு, அவர்களின் ஆயர்களுக்கு உரிய அதிகாரங்களை பேதுருவின் வாரிசான திருத்தந்தையிடமும், அவரோடு ஒருமைப்பாடு கொண்ட ஆயர் களிடமும் ஒப்படைத்து வருகின்றது. கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக தெளிவற்ற வகையில் வெளிப்படுத்தி, பிறகு கிறிஸ்து இயேசு வழியாக முற்றும் தெளிவுற அறிவித்த உண்மையைப் பாதுகாத்து, போதித்து, விளக்கிப் பரப்புவது திருச்சபையின் பொறுப்பாகும். இந்த பணியில் தூய ஆவியார், திருச்சபைக்கு தொடர்ந்து துணை புரிகிறார்.
கத்தோலிக்க திருச்சபை, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அகில உலக திருச்சபை மீதும், திருத்தந்தைக்கு அதிகாரம் உள்ளது. திருச்சபை அருள் அடையாளங்கள் வழியாக, தனது உறுப்பினர்களை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் புனிதத்தில் வழி நடத்துகிறது. எழுத்து உருவமாக அமைந்த, அல்லது மரபு வழியாக கையளிக்கப்பட்ட இறைவனின் வார்த்தையில் அடங்கியுள்ள அனைத்தையும் திருச்சபை ஏற்றுக் கொள்கி றது. மேலும், இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட மறை உண்மைகளை, காலச் சூழ்நிலை களுக்கு ஏற்ப திருச்சபை விளக்கிக் கூறுகிறது. பேதுருவின் வாரிசு என்ற முறையிலும், இறை மக்கள் அனைவரின் ஆசிரியர் என்ற வகையிலும், அதிகாரப்பூர்வமாக போதிக்கும் வேளையில், திருத்தந்தை தவறா வரம் உடையவராக விளங்குகிறார். அவரோடு ஒன் றித்து செயல்படும் ஆயர்களுக்கும் இந்த வரம் உண்டு. திருப்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஆயர்களின் பணியில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

திருவழிபாடு:


திருச்சபை அனைத்திற்கும் மேலாக இறைவனை நேசித்து, அவருக்கு ஆரா தனை செலுத்தி வருகிறது. நமது பாவ மன்னிப்புக்காக, கிறிஸ்து இயேசு கல் வாரி மலையில் செலுத்திய பலியை நாள்தோறும் புதுபித்து இறைவனுக்கு நன்றி கூறுகிறது. எல்லாம் வல்ல இறைவனின் அதிமிக மகிமைக்காக வும், மக்களின் பாவங்களுக்கு பரிகார மாகவும் இப்பலியைப் புதுப்பித்து ஆரா தனை செலுத்துகிறது.
திருச்சபை கிறிஸ்து வின் வாழ்வை மையமாக கொண்டு, திருவழிபாட்டு ஆண்டையும் ஒழுங்கு முறைகளை யும் அமைத்துள்ளது. இயேசு கிறிஸ்து வின் வருகைக்கு தயார் செய்ய திரு வருகை காலத்தையும், அவரது பிறப் பைக் கொண்டாட கிறிஸ்து பிறப்பு விழாக் காலத்தையும், கிறிஸ்துவின் பணி வாழ்வை சிந்திக்க பொதுக் காலத்தையும், இயேசுவின் திருப்பாடுகளை எண்ணி தவ முயற்சிகளை மேற்கொள்ள தவக் காலத்தையும், அவரது உயிர்ப்பைக் கொண்டாட பாஸ்கா காலத்தையும் திருச்சபை அமைத்துத் தந்துள்ளது. திருப்பலி, நற்கருணை வழி பாடு ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகள் இறைவனின் உறவில் வளர உதவுகின்றன.



அருள் அடையாளங்கள்:
திருமுழுக்கு:

 
பிறப்பு வழிப் பாவத்தையும் செயல் வழிப் பாவத்தையும் போக்கி, நம்மை கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகள் ஆக்குகிறது. 

உறுதிபூசுதல்:

திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களை, உண்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்த தூய ஆவியாரையும் அவரது வரங்களையும் வழங்குகிறது. 

நற்கருணை: 

கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் நமது ஆன்ம உணவாகிறது. 

ஒப்புரவு: 

திருமுழுக்கு பெற்ற பிறகு செய்யும் பாவங்களைப் போக்க உதவுகிறது. 

நோயில்பூசுதல்:

கடின நோயால் வேதனை அடைபவர்கள், பாவ மன்னிப்பு வழியாக ஆன்ம, உடல் சுகங்களை பெற உதவுகிறது.

குருத்துவம்:

திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், அருள் அடையாளங்களை நிறைவேற்றவும் திருப்பணி அதிகாரங்களை வழங்குகிறது.
திருமணம்:
இல்லற வாழ்வைத் தொடங்குபவர்களுக்கு, இறைவனின் ஆசீரையும் அருளை யும் வழங்குகிறது.



புனிதர்களின் உறவு:

கத்தோலிக்க திருச்சபை, மூன்று வித மான புனிதர்களை அடையாளம் காட்டு கிறது. விண்ணகத்தில் வாழும் புனிதர் கள், உத்தரிப்பிடத்தில் தூய்மை பெறும் ஆன்மாக்கள் மற்றும் மண்ணுலகில் வாழ்பவர்கள். இவர்களிடையே நிலவும் உறவே, புனிதர்களின் சமூக உறவு என்று அழைக்கப்படுகிறது. உலகில் வாழ்கிற வர்கள், புனிதர்கள் மற்றும் உத்தரிக்கும் ஆன்மாக்களின் உதவியைப் பெறுகின்ற னர். உத்தரிக்கும் ஆன்மாக்கள், புனிதர் கள் மற்றும் மண்ணுலகில் வாழ்வோரின் உதவியைப் பெறுகின்றனர். விண்ணக புனிதர்கள், மண்ணுலகில் வாழ்வோருக் கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கும் உதவி செய்கின்றனர். எனவே புனிதர்க ளிடம் வேண்டுதல் செய்வதும், அவர்க ளுக்கு வணக்கம் செலுத்துவதும் இறை வனின் உதவியைப் பெற தகுந்த வழிகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபை, இறைவனின் தாயான கன்னி மரியாவுக்கு மேலான வணக்கமும், மற்ற புனிதர்களுக்கு வணக்கமும் செலுத்துகிறது.

பாவ மன்னிப்பு:

 
கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையி லும் செய்யப்படும் செயல்களே பாவம் ஆகும். பாவம் இரண்டு வகைப்படும். அவை,
பிறப்பு வழிப் பாவம்: நமது ஆதிப் பெற்றோ ரிடம் உருவாகி, மனிதர் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து வரும் (கடவுளின் விருப்பத்துக்கு எதிராக செயல்படத் தூண்டும்) பாவ இயல்பே பிறப்பு வழிப் பாவம் எனப்படுகிறது.
செயல் வழிப் பாவம்: நாம் வாழும் காலத் தில், நமது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களால் செய்யப்படுவது செயல் வழிப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.
பிறப்பு வழிப் பாவம் திருமுழுக்கின் வழி யாக போக்கப்படுகிறது. எவ்வாறெனில் திரு முழுக்கின் வழியாக நாம் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவதால் கடவுளின் விருப் பத்தை நிறைவேற்றும் அருளைப் பெறுகி றோம். செயல் வழிப் பாவம் ஒப்புரவு அருள் அடையாளம் வழியாக போக்கப்படுகிறது. நாம் செய்த பாவங்களுக்காக முழுமையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் மட்டுமே, கடவுளின் மன்னிப்பை முழுமையாக பெற முடியும். இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக, சிலுவையில் அனுபவித்த பாடுகளின் பேறுபலன்கள் வழியாக நாம் இதில் மன்னிப்பு பெறுகிறோம்.


நிலை வாழ்வு:

நிலையற்ற இவ்வுலக வாழ்வு முடிந்த பிறகு, நாம் நிலையான மறுவுலக வாழ்வுக்குள் நுழைகிறோம். அதில் நமக்கு கிடைக்க வேண்டிய இன்பமும் துன் பமும் நமது இவ்வுலக வாழ்வின் அடிப்படையில் இறைவன் வழங்கும் தீர்ப்புகள் மூலம் முடிவு செய் யப்படுகிறது.
தனித் தீர்ப்பு: மரணத்துக்கு பிறகு தனித் தீர்ப்பு நடக்கிறது. நாம் இவ்வுலகில் செய்த பாவம், புண் ணியம், பரிகாரம் போன்ற செயல்களுக்கு ஏற்ப நர கம், மோட்சம், உத்தரிப்பிடம் போன்றவற்றில் ஏதே னும் ஒரு இடத்துக்கு செல்லுமாறு இயேசு நமது ஆன்மாவுக்கு தீர்ப்பு வழங்குவார்.
பொதுத் தீர்ப்பு: உலகம் முடியும் காலத்தில் வாழ் வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து அரசராக வருவார். இறந்தோர் அனைவ ரும் உடலோடு உயிர்த்து எழுவர். நல்லோரின் பேறு பலன்களுக்கு பரிசாக அவர்களுக்கு முடிவில்லாப் பேரின்ப வாழ்வுக்கும், தீயோரின் தீச்செயல்களுக்கு விலையாக முடிவில்லாத தண்டனைக்கும் கைய ளிப்பார். உடலோடும் ஆன்மாவோடும் நல்லோர் மோட்சத்திற்கும், தீயோர் நரகத்திற்கும் செல்வர். அதன்பின் இறைவனின் ஆட்சியில் புதிய வானகமும், வையகமும் தோன்றும்.


கிறிஸ்தவ வாழ்வு:

"என்னைப் பின்பற்ற விரும்புபவன், தன் சிலுவை யைத் தன் தோள் மேல் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும்", என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. கிறிஸ்து சாவில் இருந்து உயிர்ப்பு வாழ்வுக்கு கடந்து சென்றது போல, பாவ வாழ்வில் இருந்து புனித வாழ்வுக்கு கடந்து செல்வதே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் விடுக்கப் படும் அழைப்பு ஆகும்.
"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மையே வெறு மையாக்கி அடிமையின் வடிவை ஏற்று, சாவையே ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற் கும் அளவுக்கு தம்மையேத் தாழ்த்திக் கொண்டார்." இறைவன் நமக்காக மனிதரானார், நமது பாவங்க ளுக்காக கொலையுண்டார் என்பதை நினைத்து, அவ ரது அன்புக்கு நன்றி செலுத்துவதும், அவருக்கு ஏற்ற வகையில் புனிதமான வாழ்வு வாழ்வதும் கிறிஸ்த வர்களின் கடமையாகும். கிறிஸ்து இயேசுவும் தமது திருச்சபை வழியாகவும், அற்புதங்கள் வழியாகவும் நம்மை ஆசிர்வத்து வழிநடத்துவார்.

Wednesday, August 22, 2018

கூட்டுச் செபமாலை.




1. பலன் கொடுக்கும் நவநாள் : 

செபமாலை நவநாளைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறது . அதிலும் கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் நவநாள் என்று ஒன்றைச் சொல்லுவார்கள் . இந்த நவநாள் போம்பேயி மாதா ஆலயத்தில் உதித்தது . 50 மணிச் செபமாலை தொடர்ந்து 54 நாட்கள் சொல்லுவதாம் . சந்தோஷ , துக்க , மகிமை மற்றும் ஒளியின் தேவ இரகசியங்கள் மாற்றிச் சொல்ல வேண்டும் . 27 நாட்களுக்கு கிருபையைப் பெறுவதற்காகவும் 27 நாட்களுக்கு அடைந்த கிருபைக்கு நன்றி செலுத்துவதற்காகவும் செபமாலை சொல்ல வேண்டும் . இதன் வல்லமையின் இரகசியம் விடாமல் செபம் செய்வதாம் .. எண்ணிக்கையில் அல்ல!

2. உயிருள்ள செபமாலை : 

150 மணி செபமாலையை ஒரு நாளில் சில கருத்துக்களுக்காகச் சொல்லி முடிக்க 15 பேர் கூட்டு சேர்கிறார்கள் . ஒருவரே 153 மணி செபமாலையை நாள்தோறும் சொல்ல அவகாசம் இல்லாமல் இருக்கலாம் . அல்லது 15 பேருடைய பக்தியினாலே கேட்பதை அடையலாம் என நம்பிக்கை இருக்கலாம் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பத்துமணி செபம் சொல்ல உடன்பாடு செய்து கொள்ளுகிறார்கள் . ஆளுக்கொரு தேவ இரகசியம் . குருஸ் மங்கள வார்த்தை சொன்னது ; சவரி எலிசபெத்தம்மாளை வினவினது ; பால் கர்த்தர் பிறந்தது எனலாம் . இப்பொதுக் கருத்துக்காக பத்து மணி சொன்னால் வேறு சொல்லக் கூடாது என்று அர்த்தமல்ல . சங்கேதப்படி ஒரு பத்து சொன்னபின் , அவகாசம் இருந்தால் தனிப்பட்ட முறையில் 50 மணிச் செபமாலையோ அதற்க்கு மேலோ சொல்லலாம்.

உலக வாசிகளோ , குருக்களோ , துறவிகளோ இக்கூட்டை ஏற்படுத்தலாம் . பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , விடுதிகள் பாசறைகள் என எங்கு வேண்டுமானாலும் இக்கூட்டை அமைக்கலாம் . அமெரிக்காவில் ஒரு பங்கில் 75 ஆண்டுகளாக 2000 பேருக்கு மேல் இக்கூட்டு செபமாலையைச் செய்து வருகின்றனர் .

3. குடும்பச் செபமாலை 

குடும்பத்தில் சமாதானத்தையும் பரிசுத்தத் தனத்தையும் காப்பாற்றுவதற்கு குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லும் வழக்கம் போற்றற்குரியது . அச்சமயத்தில் கிறிஸ்துவே குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கிறார் என்று சொல்லலாம் . தனிப்படச் சொல்லுவதை விட இக்கூட்டு செபத்துக்கு எவ்வளவோ பலன்கள். " என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்திருப்பார்களேயாகில் நான் அங்குள்ளேன்" என்று ஆண்டவர் சொல்லவில்லையா ? தாயும் தந்தையும் மக்களும் யாவரும் ஒன்றித்து வர வேண்டும் . அதற்க்க்காகச் சரியான நேரத்தைக் குறிக்க வேண்டும் . குழந்தைகள் தூங்கிப் போகும் சமயம் பின்னிரவில் வைத்தலாகாது . அலுவலகத்திற்குச் சென்றோர் திரும்பும் முன் வைத்தலாகாது . சில கடற்கரைகளிலோ, ஆலைகளிலோ வேலை செய்வோர் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டுப் போவதால் ஆறு மணிக்கு முன் வைக்கலாம் .அப்பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி விடுவர் . அல்லது பகல் உணவு உண்டு வேலைக்குப் போகும் முன் செபிக்கலாம் . பொதுவில் இரவு உணவுக்கு முன் கூடி செபிப்பது சிறந்த நேரம் எனலாம்

புதிதாய் மணம் செய்த இளம் தம்பதிகள் , மணமானவுடனே இப்பழக்கத்தைத் துவங்க வேண்டும் . தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் பலர் செபமாலைக்கு வர முடியாவிட்டாலும் இரண்டு பேராவது சேர்ந்து குடும்பத்தின் பேரால் அன்று செபமாலை சொல்ல வேண்டும் . விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று செபமாலை சொல்லாமல் விட்டு விடக் கூடாது . விருந்தாளிகள் எம்மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் குடும்ப செபமாலை நடத்த வேண்டும் . வந்தவர்கள் குடும்பத்தைக் கண்ணியப்படுத்துவார்கள் . குடும்ப செபமாலை விசேசமாய்த் தற்காலத்தில் குடும்பத்தைக் காக்க செபமாலை அன்னை உருவாக்கிய கோட்டை . செபமாலை இராக்கினி ஆட்களையும் , குடும்பங்களையும் தேசங்களையும் சாதி சனங்களையும் ஏன் உலகையே காப்பாற்றி வருகிறார் . உலக சரிதை இதைச் சாற்றுகிறது

இங்கும் பற்பல இடங்களில் இதைக் கண்டோம் . இன்றைக்கோ குடும்பங்களைத்தான் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது . குடும்பத்தை அழித்து அதன் வழியாகச் சமுதாயத்தையும் நாடுகளையும் அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது நரகம் . குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் . குடும்பம் காப்பாற்றப்பட்டால் உலகையே காப்பாற்றுவோம் .குடும்பத்திற்கு தன்னிலேயே ஒரு செல்வாக்கு உண்டு . குடும்பங்களின் சேர்க்கை தானே ஊரும் நாடும் ? அன்பினால் ஒன்றித்திருக்கும் குடும்பம் செபமாலையைச் செய்து வருமே யாகில் அதன் செல்வாக்கு இன்னும் அதிகரித்து , உலகைக் காப்பாற்றும் . குடும்பச் செபமாலை தாயின் மன்றாட்டினால் ஆண்டவரது உள்ளத்தையே கரைக்கிறது எனலாம்

உலக சிந்தை ,உலகப் பற்று , உலக நோக்கம் என்னாளுமே குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நஞ்சு. இக்காலத்தில் புதிய ஆபத்துக்கள் குடும்பத்தின் அன்பையும், ஒற்றுமையையும் சுகத்தையும் அழித்து சாக்கடையில் தள்ளிப் புதைக்கத் தேடுகின்றன . குடும்பக் கட்டுப்பாடு , மதச் சார்பற்ற சீர்திருத்த திருமணம், தற்காலிக உடன்பாடு , விவாகரத்து , காணா சிசுக்கொலை (கருக்கலைப்பு) போன்றவை சில. சில காலத்திற்கு முன் ஆடை நன்றாய் அணியத் தெரியாத நாடோடிகள் முதலாய் பகிரங்கமாய் இதைப் பற்றிப் பேசக் கூசுவார்கள். தற்காலமோ நாட்டின் உயிரையும் மதிப்பையும் காப்பற்றப் போவதாகச் சொல்லி அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போரும் அதிகாரிகளும் நாட்டு மக்களின் பணத்தை ஓட்டைப் போலக் கருதி இந்த நரக போதனைகளைக் கற்றுக் கொடுக்க சாவடிகள் அமைத்தும் , இக்காணாக் கொலைக்கு வேண்டிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும் மலிவான விலைக்கு வழங்கப் போகிறார்களாம் . ஐயோ கேடு ! ஐயோ கேவலம் ! இந்த அக்கிரமங்களைப் பிரச்சாரப்படுத்த சுவரொட்டித் தாள்கள் என்ன ? ஏடுகள் என்ன , சினிமாக்கள் என்ன ? குடும்பங்களைக் குலைக்கவும் அழிக்கவும் தேடும் இந்நாட்களில் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவர் செபமாலை இராக்கினியும் குடும்ப செபமாலையுமே.

எங்குக் குடும்ப செபமாலை மலர்கிறதோ அங்கே மேற்சொன்ன தீமைகளை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டு . நோய் வறுமை முதலியவைகளைச் சகிக்க சக்தியுண்டு . ஏனெனில் தந்தையும் தாயும் முழந்தாளில் இருந்து செபமாலை சொல்லுகிற போது நாம் இறைவனுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்னும் சத்தியத்தை மக்களுக்கு ஊட்டுகிறார்கள். "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே " என்று சொல்லும்போதே நாம் உலக மக்களைப் போல் மன்றாடுவதில்லை . நாம் தேவ மக்கள் ; அளவில்லாத அன்பும் வல்லமையும் உள்ள கடவுள் தாம் நம் தந்தை . தந்தைக்குரிய பட்சத்தோடு அவர் நம்மைப் பாதுகாத்து வருவார் , நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என பெற்றோரும் , பிள்ளைகளும் யாவரும் கற்றறிகிறோம்

"அருள் நிறைந்த மரியே " என்னும் மந்திரத்தை ஒரு பாதியை ஒருவரும் மறு பாதியை யாவரும் சொல்லுவதற்குப் பதில் யாவரும் முழுவதையும் சொல்லலாம் . அல்லது பாதிப் பேர் ஒரு பகுதியையும் சொல்லலாம் . தலைவர் தேவ இரகசியங்களை அறிவிக்கலாம் . அல்லது இறுதியில் கொடுத்திருக்கும் தியானத்தை அவர் வாசிக்கலாம் . அல்லது யாவரும் வாசிக்கலாம் .

குடும்பச் செபமாலை தமிழ்நாட்டில் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகவே வழக்கில் இருந்தது எனலாம் . மதுரை மாகாணத்திற்கு வந்த இத்தாலிய , பிரெஞ்சு மிஷினரி குருக்கள் இவ்வழக்கத்தை ஊன்றினர். பாப்புமார்கள் குடும்பச் செபமாலையைப் பெரிதும் போற்றி இருக்கின்றனர் . " உங்கள் உள்ளத்திலும் , தேசத்திலும் சமாதானம் நிலவ வேண்டும் என்று ஆசிப்பீர்களேயாகில் ஒவ்வொரு மாலையும் ஒன்று சேர்ந்து செபமாலை சொல்லுங்கள் .வத்திக்கான் அரண்மனை முழுவதிலுமே செபமாலையை போல வேறொரு பொக்கிஷம் இல்லை. பல பலன்கள் கொடுக்கப்பட்ட இந்த எளிய முறைச் செபமான செபமாலை ஒவ்வொரு குடும்பத்திலும் மாலைதோறும் பிரமாநிக்கமாய் சொல்லப்படுவதாக . இவைதான் நான் உங்களுக்குச் சொல்லும் கடைசி மொழிகள் .நான் விட்டுச் செல்லும் ஞாபகச் சின்னம் " என்றார் 9ம் பத்திநாதர்

செபமாலையை பற்றி நிருபத்துக்கு மேல் நிருபம் எழுதிப் போன 13ம் சிங்கராயர் "குடும்பத்தில் செபமாலை சொல்லாத நாள் இருத்தலாகாது . தனிப்பட்டோரின் பக்தியை வளர்க்கவும் , சமூகத் தேவையை பரிகரிக்கவும் அது ஏற்ற வழி . மாதாவின் செபமாலையைக் குடும்பங்களில் சொல்லி வரும் பழைய மகிமை தழைத்திருக்குமேயாகில் , தப்பறைகளினாலோ மனம் பொருத்த மூடத்தனமான அறியாமையினாலோ விசுவாசத்தை இழந்து போகும் நிர்பாகியம் ஏற்படாது " என்று வரைந்தார்

11ம் பத்திநாதர் பெற்றோர்களுக்குச் சொல்லுவார் : குடும்பத்தின் தாயும் தந்தையும் குழந்தைகளுக்கு எதிலும் நன்மாதிரியாகக் காட்ட வேண்டும் . எனினும் பிரியமாய் மாலை நேரத்தில் ஒன்றாய்க் கூடி முழந்தாள் படியிட்டு செபமாலை சொல்லுவதில் நன்மாதிரியாயிருக்க வேண்டும் . இது மகா லாபகரமான இன்பமயமான வழக்கம் . இதனால் குடும்பங்களுக்கு சமாதானமும் ஏராளமான மோட்ச கிருபைகளும் கிடைக்கும் "

மாமரியின் பாப்பாண்டவரும் , மாமரியைத் திருக்காட்சியில் கண்டவருமான நம் திருத்தந்தை 12 ம் பத்திநாதர் குடும்ப செபமாலையைப் பற்றி பற்பல முறை இடை இடையிலே கூறி இருந்தாலும் 1952ம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப செபமாலையைப் பற்றி நீண்ட நிருபம் அனுப்பினார் . குடும்பங்களில் மகிழ்ச்சியையும் கடவுளுடைய பெரும் கொடைகளையும் அடைவதற்கு நிச்சயமான வழி வேறொன்றுமில்லை . குடும்பச் செபமாலை வழக்கில் இருக்கும் குடும்பங்களில் உள்ள சிறார்கள் , பிற்காலத்திலும் செபமாலைப் பக்தி உள்ளவர்களாய் ஒழுக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள் . பொது செபத்துக்குரிய ஆசீர்வாதங்களும் அக்குடும்பத்துக்கு வரும் என்றார்

4.ஆலயத்தில் பொதுச் செபமாலை 

பங்கிலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் செபமாலை சொல்லும் வழக்கத்தையும் போற்ற வேண்டும் .அதனால் பங்குக்குப் பெருத்த இலாபம்.

செபமாலையும் சம்மனசுக்களும்.



செபமாலை சொல்லும் வழக்கம் சிறிது பரவின காலை சம்மனசுக்களின் பக்தியும் பெரிதும் போற்றப்பட்டது என்று சொல்லலாம் . 12ம் நூற்றாண்டில் பற்பல தப்பறைகள் சம்மனசுக்க்ளைப் பற்றி நடமாடின . 1215 ஆம் ஆண்டில் 4ம் லூத்தரன் பொதுச்சங்கம் அழுத்தமாக தெளிவாய் மொழிந்தது என்னவெனில் , சம்மனசுக்கள் படைக்கப்பட்டவர்கள் . மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் சம்மனசுக்களைப் படைத்தார். வேதத்தில் சம்மனசுக்களுக்கு வழங்கும் பேரின் தமிழாக்கம் அஞ்சல் தூதர்கள் என்பதாம் .அவர்கள் சுத்த அரூபிகள் . உடலோடு - மனிதனைப் போல - இணைக்கப்படாதவர்கள் . இணைக்கப்படவும் உண்டாக்கப்பட்டவர்கள் அல்லர் அவர்கள் . அருமையான கானங்கள் இசைத்து ஆண்டவர் அருகில் அமர்ந்து அவரைத் துதித்து தோத்தரிக்கின்றனர். ஒரு நாளும் பாவத்தை அறியாதவர்கள் . ஆனதால் அவர்கள் கொழுந்து விட்டு எரியும் சிநேகத்தின் சோதிச் சுடர்கள் . கடவுளுடைய வேலைப்பாட்டின் மணிகள் , இறைவனுடைய ஆணைக்கு விரைந்து பணியத் தயாராய் இருக்கின்றனர்

கடவுள் அவர்களுக்குப் பிறகு மனுமக்களைப் படைத்தார் . மனிதர்களும் அவருடைய சட்டங்களுக்குப் பணிந்து ஈடேற்றத்தைச் சம்பாதிக்க வேண்டியவர்கள் . இச்சட்டம், இக்கதி , கடவுளின் இந்த இனிமையான நோக்கம் மனிதனுக்கு நன்றாய்த் தெரியும் . எனினும் பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய சட்டத்தின் நாளிலும் இறைவனுடைய மதுரமான சித்தத்தை மனிதருக்கு அறிவிக்க கண்ணுக்குத் தோன்றும் விதம் சம்மனசுக்கள் தோன்றி இருக்கிறார்கள் . தோன்றுகிறார்கள் . ஈடேற்றத்தின் மக்களுக்கு உதவி செய்யும் ஆவிகள் என்று அவர்களைக் குறித்து சின்னப்பர் சொல்லிப் போனார் அல்லவா ? நமது ஈடேற்றத்தை நிறைவேற்றியவர் மனித அவதாரம் எடுத்த தேவ குமாரன் ஆனபடியால் அவருக்குப் பணிந்து நடக்கும் அவ்வலுவலில் அவர்களும் பங்கெடுப்பதில் அதிசயம் உண்டா ? ஆதலின் செபமாலையின் இரகசியங்களில் மறைந்தோ திறந்தோ சம்மனசுக்கள் தோன்றுவதைக் காண்கிறோம்

சம்மனசுக்களின் ஒன்பது விலாசம் , அவர்கள் எண்ணிக்கை அநந்தம். நம் கணக்குக்கு எட்டாதவை . கால பரிபூரணம் வந்த போது ஆதாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்கு நிறைவேறும் நாள் வந்தபோது அச்சுப செய்தியை அறிவிக்க கபிரியேல் என்னும் அதிதூதர் அனுப்பப்பட்டார்

கன்னிமரி செபத்தில் ஆழ்ந்திருந்தபோதோ , வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதோ அழகு வடியும் இந்த அஞ்சல் தூதர் மரிக்கு அதை அறிவிக்க அனுப்பப்பட்டார் . பிதாவாகிய கடவுளே உருவாக்கிய மேலான இதமான " அருள் நிறைந்த மரியே " என்ற வாசகத்தை முதன் முதல் உச்சரிக்கக் கபிரியேல் பாக்கியம் பெற்றார் . தம் புத்தி சாதுரியத்தினால் கன்னியின் சந்தேகங்களைத் தீர்த்து அவரது சம்மதத்தைப் பெற்று ஆவலோடு காத்திருந்த சம்மனசுக்களின் கூட்டத்திற்கு " வார்த்தையானவர் மனு உருவானார் " என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியை அறிவித்தார் . நவவிலாச சம்மனசுக்களுக்கு பொங்கி வழிந்த மகிழ்ச்சியை எடுத்து மொழிய முடியுமா ?

அடுத்த ஒன்பது மாதங்கள் அவர்கள் எவ்விதம் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்திருந்தார்கள் என்பது ஒரு அதிசயம் . கடைசியில் முதல் கிறிஸ்துமஸ் வந்தது . கூட்டம் கூட்டமாய் மாலை மாலையாய் விண்ணுலகை விட்டு வானதூதர்கள் மண்ணுலகுக்கு இறங்கினர் . " உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக " என்று இசைத்தனர் . மோட்சத்தில் தங்களுக்கு தோழர்களாக இருக்க வேண்டிய மானிடரையும் மறக்காமல் " பூலோகத்தில் நல்ல மனதுள்ளோருக்கு சமாதானம் உண்டாவதாக " என்று இச்சமாதான ஆவிகள் ஆர்ப்பரித்தனர் . தங்கள் இனத்தாரில் சிலர் அகங்காரத்தினால் மனுதாவதாரம் எடுக்கப்போகும் மனுமகனுக்குச் செய்த துரோகத்துக்கு இவ்விதம் இன்று முதல் முதலாகப் பரிகாரம் செய்யப் பாக்கியம் பெற்றனர் . கடவுளுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்குள்ள மகிழ்ச்சியால் மனிதர்களும் மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யக் காந்தம் போல அவர்களை இழுப்பர். தங்களுக்கு இன்றிருந்த ஆனந்தத்தால் எல்லாச் சந்தோஷ தேவ இரகசியங்களையும் நிரப்புவர் . மலங்காட்டில் மலடியான உறவினளை மாமரி பார்க்கச் சென்ற போது இஸ்ராயேலரின் வனாந்தரப் பிரயாணத்தில் ஒளி மேகம் அவர்கள் மேல் படர்ந்து சென்றது போல , சம்மனசுக்களின் பிரகாசத் திரள் படர்ந்து சென்றிருக்க வேண்டும் . இயேசுவைத் தூக்கி எருசலேம் ஆலயம் சென்ற பொது இம்மகிமைக் காப்பாளர் தாயையும் சேயையும் விட்டு தூரம் பிரிந்திருக்க முடியுமா ? இயேசு எருசலேமில் தங்கிய முத்தினமும் சம்மனசுக்கள் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையின் ஆவி பறக்கச் செய்திருப்பார்கள் என்று நம்பலாம் அல்லவா?

பூங்காவனத்தில் மனம் ஒடிந்து கசப்பான பாத்திரத்தைக் கண்டு தளர்ந்து ஆண்டவர் தவிக்கும்போது பயம், பாவம் , மரணம் என்பவைகளோடு ஆண்டவர் மல்யுத்தம் தொடுத்த போது தம்மைச் சூழ்ந்து நின்ற சம்மனசுக்களின் பிரசன்னம் அவர் உள்ளத்தில் ஆறுதலின் ரேகைகளை ஒட்டியிருக்க வேண்டும்

அவர் தெரிந்து கொண்ட மூவரையும் நித்திரை கவர்ந்து கொண்ட போது , மனிதர்கள் தம்மை விட்டுப் பிரிந்து போவார்கள் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பாய்ந்த போது , சம்மனசுகள் தம்மை விட்டுப் போகார்கள் என்ற எண்ணமான தைலம் மனதில் சிறிது குளிர்ச்சியைப் பரப்பியது . கற்றூணில் ச்கசையடிகள் அலறியபோது அவர்கள் தங்கள் சிறகுகளை விரித்து அண்டையில் இருப்பார்கள் . ஜனத்திரள் இழி சொல்லையும் பழி வசனத்தையும் பொழிந்தபோது அவைகளை அமர்த்தியது போல மக்கள் செவிக்கு எட்டாவண்ணம் இவர்கள் பண் இசைப்பார்கள் . பிலாத்தின் அரண்மனை முற்றத்தில் " அவனைச் சிலுவையில் அறையும் அறையும் " என்று மானிடப் பதர்கள் இரைந்த போது , அந்த இரைச்சலுக்கு மேலே பதின்மடங்கு சத்தமாய் நாவற்ற குரலில் " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக " என்று ஞானாதிக்கர்களின் ஆதிக்கத்தில் இவர்கள் கோஷிப்பார்கள். ஏரோதன் அரண்மனை வாசலில் மரியாதையற்ற கேள்விகளையும் சொல்லையும் வழங்கியபோது , அதைவிட ஆயிரமடங்கு சத்தமாய்த் தொனியற்ற குரலில் " பரிசுத்தர் , பரிசுத்தர் , மகிமையும் , பெருமையும் , செல்வாக்கும் பெற நீர் தகுதியுள்ளவர் " என்று பண் இசைப்பர் . உடல் எல்லாம் கிழிந்து உடைந்த தூணில் உட்கார்ந்து கொண்டு , முள்முடி சூட்டி , ஈன சேவகர்களின் பரிகாசத்துக்கு ஆளான போது," அவரிடம் உள்ளது அரச இதயம் ; தெய்வீகத்தின் இரத்தம் அவரது நாளத்தில் ஓடுகிறது . முள்முடி சூடி இரத்தத்தால் தோய்ந்த அவரது சிரசு , தெய்வீக ஞானத்திற்கு இருப்பிடம் " என்று விழுந்து விழுந்து அவரை ஆராதித்தனர் . கல்வாரிக்குப் போகும்போது மெய்க்காப்பாளர்கள் போல அவரைச் சுற்றித் தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் , பூலோக ஆஸ்தியெல்லாம் சேர்த்து வாங்க முடியாத வைடூரியங்களைப் போல பாவித்து பதனமாய் பொறுக்கி எடுப்பர். வெளியரங்கமாய்த் தோன்றி இருந்தால் கசடர்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் , கர்த்தனின் திட்டம் நிறைவேறாதென்று மறைந்தே சென்றனர். இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே சேனை சேனையாய் வானதூதர்கள் இக்காட்சியைக் கண்டு அதிசயித்து ஆண்டவரை ஆராதித்தனர்

மகிமைத் தேவ இரகசியங்களில் என்றும் இல்லாத விதமாய் மக்கள் அருகில் இந்த மோட்ச மன்னர்களைப் பார்க்கிறோம். புத்தி பேதலித்த சில யூதர் இயேசுவின் கல்லறையைக் காவல் புரிய சில சேவகர்களை நிறுத்தினர் . வீண் வேலை . ஆயிரக்கணக்கான பரலோக இளவரசர்கள் திருச்சரீரத்தை பயபக்தியோடு காவல் காத்து நின்றனர் . மரிய மதலேனாளும் மற்ற பெண்களும் கல்லறையைக் காண வந்த காலை " உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் ஏன் தேடுகிறீர்கள் " என்கிறார்கள் அத்தூதர்கள் . இயேசு மரித்ததாக அச்சம்மனசுக்கள் கருதவில்லை போலும் ."நீங்கள் இயேசுவைத் தேடுகிறீர்களா ?" அச்சம்மனசுக்களுக்கு இயேசுவைத் தேட அவசியமே இல்லை . அவர்கள் தாம் அல்லும் பகலும் கல்லறையைச் சூழ்ந்து நிற்கின்றனரே . உலக முடியுமட்டும் வானதூதர்கள் இயேசு மூன்று நாள் தங்கிய கல்லறையைக் காவல் புரிந்து நிற்பர். பெத்லேகேமின் நற்செய்தியை வானதூதர் உலகுக்கு அறிவித்தனர் . பூங்காவில் சம்மனசானவர் இயேசுவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் . கல்லறையில் அவர் வேலை முடிந்ததென்று வானதூதர் அறிவிக்கின்றனர் . " உயிர்த்தெழுந்து விட்டார் . அவர் இங்கில்லை . மரித்தோரிடமிருந்து எழுந்தவர் இனி ஒருநாளும் மரிக்க மாட்டார் "

நாற்பது நாள் இயேசு பூலோகத்தில் இருந்தபோது அவரது சிறிய ஆசையையும் நிறைவேற்றத் தேடுவது போல அவரைச் சூழ்ந்து சுற்றி சுற்றி வந்தனர் . அவர் பரலோகத்துக்கு ஆரோகணமானபோது மெய்க்காப்பாளர்கள் போல மகிமைப் பிரதாபத்தோடு இனிய குரலோடும் வீணை நாதத்தோடும் சங்கீதம் முழங்கிச் செல்லுகின்றனர் . அவர்களை நோக்கித்தான் " உங்கள் சிரசை உயர்த்துங்கள் "என்று தாவீது அரசர் பாடினாரா? இப்பூவுலகில் முதலாய் அரசனுடைய மரணத்திற்குப் பின் அவன் தாயை பிரஜைகள் புறக்கணித்து விடுகிறார்களா ? முப்பத்து மூன்று ஆண்டுகளோ அதற்க்கு மேலோ தாயோடு தங்கியிருந்த சம்மனசுக்கள் அவருக்குத் துணையும் மகிமையுமாய் நின்றனர் . அவர் மரணத்திலும் அகலவில்லை . அவர் தேவ மகன் வந்து அவரைத் தாங்கி பரலோகம் எடுத்துச் சென்ற போது வானதூதர்களின் மோன மகிழ்ச்சி என்ன ? நம் மானிட மொழியில் அவர்களது மகிழ்ச்சியை விளக்க வேண்டுமேயாகில் விதம் விதமாய்ப் பாடினர் , பிரிவு பிரிவாய்ச் சங்கீதம் இசைத்தனர் . வாத்தியங்கள் கோஷித்தன . மேளங்கள் முழங்கின . ஆடினர் . நர்த்தனம் புரிந்தனர் . என்ன மகிழ்ச்சி ! மகுடாபிஷேக நேரத்தில் அரசிக்கு விதவிதமாய்க் காணிக்கை கொண்டு வர , போட்டி போட்டது போல வந்தனர் . தங்கள் வணக்கத்தைச் சமர்ப்பித்தனர் . கை கொட்டினர் . "அகில உலக அரசி வாழ்க , பரலோக பூலோக அரசி வாழ்க வாழ்க " என்று ஆர்ப்பரித்தனர்.

செபமாலையும் அர்ச் சூசையப்பரும்.



பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?

பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம் - முக்கிய பாகம் - இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்

இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில் - தோட்டக்காரன் விதைக்காவிடினும் - அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்.

இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்

சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது

இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம் - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம் - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்

திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும் - பழைய ஏற்பாட்டு சூசையைப் போல - ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்

குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா ?

16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்

13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்

வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்.